தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுமாக ஆகி பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ரீமேக் தான் அது. வருண் தவான் அதில் ஹீரோவாக நடிக்கிறார்.

பாலிவுட் என்பதால் அந்த படத்தில் கிளாமராக தான் நடித்து வருகிறாராம். அட்லீ தான் பேபி ஜான் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா என்ற படத்தையும் நடித்து முடித்திருக்கிறார் கீர்த்தி.

தலைகீழாக நிற்கும் நடிகை
கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தலைகீழாக நின்று இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் பிரபல கோலிவுட் நடிகர்

Biopic
சமீபகாலமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்களாக உருவாவது வழக்கமாக உள்ளது.

பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது சவாலாக இருப்பதாலும் ஃபிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்

யார் தெரியுமா?
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம்.

இதில் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைத் துறையை விட்டு வேறு துறையில் சாதனை படைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி, அங்கிலம் என பல மொழி படங்களுக்கு இசையமைப்பவர். ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் அமீன் மற்றும் மகள் கதிஜா இருவரும் இசை துறையிலேயே நுழைந்து இருக்கின்றனர்.

செஃப் ஆக மாறிய மகள்
ரஹ்மானின் இன்னொரு மகள் ரஹீமா இசை துறையில் ஆர்வம் இல்லாததால் சமையல் துறையில் படித்து பட்டம் பெற்று இருக்கிறார்.

மகள் செஃப் ஆகி இருப்பதை பற்றி ரஹ்மான் தற்போது நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். “My little girl @raheemarahman is a chef now ..#prouddad” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

கிளாமர் காட்சிகளில் நடிக்க அசை!

விஜே மகேஸ்வரி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக மாறியவர் தான் விஜே மகேஸ்வரி.

மேலும் இவர் சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிக்க ஆசை!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜே மகேஸ்வரி, கிளாமரான காட்சியில் நடிப்பது பபற்றி பேசியுள்ளார். அதில் அவர், ” நான் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்தேன் அது பிரபலமானது. நான் ஒரு வெப் தொடரில் நடித்தேன் அது சில காரணத்தால் ட்ராப் ஆகிவிட்டது. அந்த தொடரில் இருந்த நெருக்கமான காட்சிகளை மட்டும் எடுத்து ஒரு வீடியோ சாங்-காக வெளியிட்டனர்”.

“கதைக்கு தேவையென்றால் நான் அப்படி நடிக்க தயார் தான். நிறைய பேர் என்னிடம் கிளாமர் சாங் பண்ண சொன்னார்கள். கிளாமர் சாங் பண்ண எனக்கும் ஆசை இருக்கிறது” என்று விஜே மகேஸ்வரி கூறியுள்ளார்.

யாழில் முற்றுகையிடப்பட்ட ஐஸ் போதை உற்பத்தி நிலையம் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு , போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருந்தது.

வாடகைக்கு தங்கியிருந்த தம்பதி
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வீட்டின் அறையை தம்பதி ஒன்று வாடகைக்கு கொடுத்ததாகவும், அந்த அறையில் தம்பதியினர் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறையில் தங்கியிருந்த தம்பதியினரில், கணவன் யாழில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் இணைந்து கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தநிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது அவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில்லை எனவும் , திருந்தி வாழ்வதாகவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தெரிவித்து வந்துள்ளார்.

அவரது மனைவி யாழில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாதியாக கடமையாற்றி வருகிறார். மனைவி ஊடாகவே ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான ஆய்வு கூட பொருட்களை பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

அதேவேளை கணவன் – மனைவி இருவரும் இணைந்து தான் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனரா அல்லது ஒருவர் உற்பத்தியில் ஈடுபட மற்றவர் உடந்தையாக செயற்பட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது தம்பதியினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் வெப்ப நிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!

கொழும்பு (Colombo) நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையை குறைக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் மரங்களின் தண்டுகளுக்கு அருகில் இன்டர்லாக்கிங் (Interlocking ) கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என தாவர நிபுணர் சுனில் கமகே (sunil gamage) சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய செடிகள் நடுகை
இதன் காரணமாக கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளில் உள்ள கற்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் இந்திக தெரிவித்தார்.

ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா (George R. De Silva Mawatha) மாவத்தையின் இரு பாதைகளுக்கு நடுவில் உள்ள இன்டர்லாக்கிங் (Interlocking) கற்களை மாற்றி சிறிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கற்களை குறைக்க நடவடிக்கை
இது நகரின் வெப்பநிலையை சிறிது குறைக்கும் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கொழும்பு நகரில் உள்ள செடிகளின் தண்டுக்கு அருகாமையில் உள்ள Interlocking கற்களை அகற்றுவதற்கு கொழும்பு நகர சபை தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதி பழநெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறி நேற்றயை தினம்(14) விடுதலை புலிகளுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீடித்தது

அதன்படி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புலிகளின் நோக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது.அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது.

“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை.

அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது.

அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.”

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்த காலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

மக்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய இரத்த வங்கி!

கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
ஓர் பாலின ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு நீண்ட காலமாக கனடாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரத்த தானம் செய்யக் கூடிய சகல தகுதிகள் இருந்தும் இந்த தடை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கோருவதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கையினால் ஒர் பாலினச் சமூகத்தினர் உள்ளிட்ட மாற்றுப் பாலின சமூகம் எதிர்நோக்கிய பாதிப்புக்களுக்காக கனடிய இரத்த வங்கி மன்னிப்பு கோரியுள்ளது.

1992ம் ஆண்டிலிருந்து கனடாவில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், மாற்றுப் பாலினத்தவர்கள் இரத்த தானம் செய்வதில் தொடர்ந்தும் பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்படுவதாக மாற்றுப் பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குணசேகரனை மிரட்டும் ஈஸ்வரி செய்வதறியாது திணறும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி அம்மா என்று கூட பார்க்காமல் மோசமாக பேசிய தர்ஷனுக்கு பாடம் கற்பிக்கப்பட்ட காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

குணசேகரனை மிரட்டிய வக்கில்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளர்.

வழக்கறிஞர் வீட்ற்கு வந்து குணசேகரனை மிரட்டிய நிலையில், அவருக்கு சேரவேண்டியதை கொடுக்கவும் கூறியள்ளார்.

குணசேகரனும் நான் எதற்காக கொடுக்க வேண்டும் என்று மிரட்டிய நிலையில், வழக்கறிஞரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

 

நாட்டு மக்களை எச்சரிக்கும் மத்திய வங்கி ஆளுநர்

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏமாற்றப்பட்டுள்ள பொதுமக்கள்

கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிரபு நிரகாரித்த கதையில் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் கடின உழைப்பால் முன்னணி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் தழுவியது.

இவருடைய முதல் ஹிட் படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டரை திரைப்படம் தான். இப்படத்தை விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் இயக்கி இருப்பார்.

பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டரை படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சட்டம் ஒரு இருட்டரை படத்தின் கதையை முதல் முதலில் நடிகர் பிரபுவிடம் கூறினேன். ஆனால் அந்த கதை பிடிக்கவில்லை.

அதன் பின் பெங்களூரில் இருந்து ஒருவரை வரவழைத்து 3 முறை டெஸ்ட் செய்து பார்த்தோம். ஆனால் அவரும் செட் ஆகவில்லை. கடைசியில் தான் விஜயகாந்த் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்று எஸ்.எ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த் வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம்.

இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி ரசிகர்களும் ரசிப்பார்கள். இந்திய சினிமாவை தாண்டி இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கடைசியாக ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெளிவராத தகவல்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆபிஸ் பாய், கூலி வேலை என பார்த்திருக்கிறார். அப்போது வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்தாராம்.

ஆனால் சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம், பிறகு அன்றைய இரவு தூங்க சென்றிருக்கிறார். அப்போது கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்தாராம்.

பிறகு ஆற்றின் மீது அவர் நடந்து வந்தது போலவும்; அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியதுபோலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன.

மறுநாள் அனைவரிடமும் இதுகுறித்து ரஜினி சொல்ல; சுவரில் வரையப்பட்டிருந்தது ராகவேந்திரர் ஓவியம் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று வேண்டியிருக்கிறார் ரஜினி. அதன்பிறகே நடத்துனர் வேலை கிடைக்க பிறகு நடிகராகவும் மாறினாராம்.

சேலையில் வேற லெவல் போட்டோஷூட் லாஸ்லியா.

பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் லாஸ்லியா. அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் ஆகும் முயற்சியில் இருக்கிறார்ல்.

லாஸ்லியா தற்போது சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ.

தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் பெற்ற நடிகர்!

ரஜினி-விஜய்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக கொண்டாடப்படுபவர்கள் ரஜினி, விஜய், அஜித். அதிலும் பாக்ஸ் ஆபிஸ் என்று வந்துவிட்டால் டாப்பில் ரஜினி மற்றும் விஜய்யின் படங்கள் தான் இருக்கும்.

ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் டாப் பாக்ஸ் ஆபிஸ் படங்களின் லிஸ்ட் மாறிக்கொண்டே வரும்.

ஆனால் இப்போது இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இருந்து விஜய் வெளியேற இருப்பதை நினைக்கும் போது தான் எல்லோருக்குமே வருத்தமாக உள்ளது.

தற்போது ரஜினி வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் கோட் படத்தின் வேலைகளில் உள்ளார்.

அஜித், விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடிக்கிறார்.

இந்த வருடம் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

முதல் நடிகர்
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஜினி, விஜய் தான் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களை தாண்டி ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.

தயாரிப்பாளராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவராக மாறினார். இவர் கடந்த 1996ம் ஆண்டு கே.வி. பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் படத்துக்காக தான் முதன்முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார்.

ரசவாதி திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் ”ரசவாதி” திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
கொடைக்கானலில் சித்த வைத்திய சாலை நடத்தி வரும் அர்ஜுன் தாஸ், ஹோட்டல் மேனேஜராக புதிதாக வேலைக்கு சேர்ந்த தன்யா ரவிச்சந்திரனுடன் நட்பாக பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து ஒன்றாக பயணிக்கின்றனர். ஆனால், அதே கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த சுஜித் ஷங்கருக்கு, ஹீரோ அர்ஜுன் தாஸ் மகிழ்ச்சியாக இருப்பது கோபத்தை தூண்டுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் ஏன் அர்ஜுன் தாஸ் மீது கோபத்தில் இருக்கிறார்? இருவரும் என்ன பிரச்சனை? இறுதியில் அர்ஜுன் தாஸ் எப்படி பிரச்சனையை முடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
முதல் காட்சியிலேயே கொலைகார போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் சுஜித், தனது சைக்கோத்தனத்தை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துவது மிரட்டல்.

அதேபோல் படம் முழுவதும் காலினை இடறி நடக்கும் சதாசிவபாண்டியன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சண்டைக்காட்சிகளில் மிரட்டும் அவர் இந்த படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாக உருவெடுப்பார் என்பது போல் அட்டகாசம் செய்திருக்கிறார்.

தன்யா ரவிச்சந்திரன், G.M.குமார், ரம்யா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தில் பிரச்சனை என்னவென்றால் முதல் பாதிவரை கதை தொடங்கவே இல்லை என்பது தான். கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை மட்டுமே முதல் பாதி காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆங்காங்கே சமூகநல கருத்துக்களை பேசினாலும் இந்த கதைக்கு அவை ஒட்டாத ஒன்றாகவே தனியாக தெரிகிறது.

தமனின் இசையும், ஒளிப்பதிவும் படத்தை ரம்யமாக காட்டுகின்றன. படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை

க்ளாப்ஸ்
கண்களுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

ஹீரோ, வில்லனின் மிரட்டலான நடிப்பு

தமனின் இழையோடும் இசை

பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் தொடங்கும் கதை

படத்தின் நீளம்

மொத்தத்தில் பொழுதுபோக்கிற்காக ஒருமுறை பார்க்கலாம் என்ற வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ”ரசவாதி”.

ரேட்டிங் 3/5

ஸ்டார் படத்திற்கு கவின் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார்.

அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

ஸ்டார் சம்பளம்
இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் கவின் நடிப்பை தான் பாராட்டி வருகின்றனர் இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார்.

ரஜினியுடன் நடித்ததை நினைத்து புலம்பிய ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படையப்பா பற்றி..
ரஜினி நடித்த படையப்பா படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.

நீலாம்பரி negative ரோல். அதில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன்.

ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் ஷூட்டிங் நடக்கும்போதும் இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அனைத்து படங்களை விட இதற்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது என அவர் கூறி இருக்கிறார்.

யாழில் கொடூரம் கற்பழித்து கொல்லப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணே இவ்வாரு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரிசோதனையில் தெரியவந்த தகவல்
உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி கிடந்ததைக் பார்த்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அக்காவாக நடிக்க பலகோடி கேட்ட நயன்

நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது.

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.

இரண்டு மடங்கு அதிக சம்பளம்
படத்தின் கதையை கேட்டு சரி என கூறியுள்ள நடிகை நயன்தாரா, இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூ. 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். குறிப்பாக படத்தில் அக்கா, தம்பிக்கு இடையிலான எமோஷனல் காட்சி வருகிறதாம். அதுதான் படத்தின் முக்கிய காட்சி என்கின்றனர்.

இவ்வளவு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் நயன். கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா இதுவரை ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முதல் முறையாக யாஷ் படத்திற்காக தன்னுடைய வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கேட்டுள்ளார் நயன்தாரா. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு பெரிய பணக்காரரா

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.

ஹெலிகாப்டர் வாங்க போறேன்

மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய பணக்காரர் என்பதும், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்பது ம் குறிப்பிடத்தக்கது.

விரைவில் அவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க போகிறாராம். அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

“எனக்கு நேரம் தான் முக்கியம். முக்கிய நகரங்களுக்கு சமையல் செய்யபோகும்போது விமானத்தில் சென்று வருகிறேன். ஆனால் சின்ன ஊர்களுக்கு செல்லும்போது காரில் செல்ல அதிகம் நேரம் எடுக்கிறது. அதானால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டே செல்கிறேன்”.

“அடுத்து சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க போகிறேன். எனது ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என எனக்கு தெரியும். 10 வருடம் கழித்து என் நேரத்தின் மதிப்பு உயரும். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்குகிறேன்” என மாதம்பட்டி ரங்கராஜ் கூறி இருக்கிறார்.