மக்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய இரத்த வங்கி!

கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
ஓர் பாலின ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு நீண்ட காலமாக கனடாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரத்த தானம் செய்யக் கூடிய சகல தகுதிகள் இருந்தும் இந்த தடை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கோருவதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கையினால் ஒர் பாலினச் சமூகத்தினர் உள்ளிட்ட மாற்றுப் பாலின சமூகம் எதிர்நோக்கிய பாதிப்புக்களுக்காக கனடிய இரத்த வங்கி மன்னிப்பு கோரியுள்ளது.

1992ம் ஆண்டிலிருந்து கனடாவில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், மாற்றுப் பாலினத்தவர்கள் இரத்த தானம் செய்வதில் தொடர்ந்தும் பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்படுவதாக மாற்றுப் பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குணசேகரனை மிரட்டும் ஈஸ்வரி செய்வதறியாது திணறும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி அம்மா என்று கூட பார்க்காமல் மோசமாக பேசிய தர்ஷனுக்கு பாடம் கற்பிக்கப்பட்ட காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

குணசேகரனை மிரட்டிய வக்கில்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளர்.

வழக்கறிஞர் வீட்ற்கு வந்து குணசேகரனை மிரட்டிய நிலையில், அவருக்கு சேரவேண்டியதை கொடுக்கவும் கூறியள்ளார்.

குணசேகரனும் நான் எதற்காக கொடுக்க வேண்டும் என்று மிரட்டிய நிலையில், வழக்கறிஞரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

 

நாட்டு மக்களை எச்சரிக்கும் மத்திய வங்கி ஆளுநர்

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏமாற்றப்பட்டுள்ள பொதுமக்கள்

கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிரபு நிரகாரித்த கதையில் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் கடின உழைப்பால் முன்னணி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியை தான் தழுவியது.

இவருடைய முதல் ஹிட் படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டரை திரைப்படம் தான். இப்படத்தை விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் இயக்கி இருப்பார்.

பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டரை படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சட்டம் ஒரு இருட்டரை படத்தின் கதையை முதல் முதலில் நடிகர் பிரபுவிடம் கூறினேன். ஆனால் அந்த கதை பிடிக்கவில்லை.

அதன் பின் பெங்களூரில் இருந்து ஒருவரை வரவழைத்து 3 முறை டெஸ்ட் செய்து பார்த்தோம். ஆனால் அவரும் செட் ஆகவில்லை. கடைசியில் தான் விஜயகாந்த் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்று எஸ்.எ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த் வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம்.

இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி ரசிகர்களும் ரசிப்பார்கள். இந்திய சினிமாவை தாண்டி இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கடைசியாக ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெளிவராத தகவல்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆபிஸ் பாய், கூலி வேலை என பார்த்திருக்கிறார். அப்போது வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்தாராம்.

ஆனால் சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம், பிறகு அன்றைய இரவு தூங்க சென்றிருக்கிறார். அப்போது கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்தாராம்.

பிறகு ஆற்றின் மீது அவர் நடந்து வந்தது போலவும்; அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியதுபோலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன.

மறுநாள் அனைவரிடமும் இதுகுறித்து ரஜினி சொல்ல; சுவரில் வரையப்பட்டிருந்தது ராகவேந்திரர் ஓவியம் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று வேண்டியிருக்கிறார் ரஜினி. அதன்பிறகே நடத்துனர் வேலை கிடைக்க பிறகு நடிகராகவும் மாறினாராம்.

சேலையில் வேற லெவல் போட்டோஷூட் லாஸ்லியா.

பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் லாஸ்லியா. அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் ஆகும் முயற்சியில் இருக்கிறார்ல்.

லாஸ்லியா தற்போது சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ.

தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் பெற்ற நடிகர்!

ரஜினி-விஜய்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக கொண்டாடப்படுபவர்கள் ரஜினி, விஜய், அஜித். அதிலும் பாக்ஸ் ஆபிஸ் என்று வந்துவிட்டால் டாப்பில் ரஜினி மற்றும் விஜய்யின் படங்கள் தான் இருக்கும்.

ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் டாப் பாக்ஸ் ஆபிஸ் படங்களின் லிஸ்ட் மாறிக்கொண்டே வரும்.

ஆனால் இப்போது இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இருந்து விஜய் வெளியேற இருப்பதை நினைக்கும் போது தான் எல்லோருக்குமே வருத்தமாக உள்ளது.

தற்போது ரஜினி வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க விஜய் கோட் படத்தின் வேலைகளில் உள்ளார்.

அஜித், விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடிக்கிறார்.

இந்த வருடம் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

முதல் நடிகர்
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ரஜினி, விஜய் தான் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களை தாண்டி ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.

தயாரிப்பாளராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவராக மாறினார். இவர் கடந்த 1996ம் ஆண்டு கே.வி. பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் படத்துக்காக தான் முதன்முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார்.

ரசவாதி திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் ”ரசவாதி” திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
கொடைக்கானலில் சித்த வைத்திய சாலை நடத்தி வரும் அர்ஜுன் தாஸ், ஹோட்டல் மேனேஜராக புதிதாக வேலைக்கு சேர்ந்த தன்யா ரவிச்சந்திரனுடன் நட்பாக பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து ஒன்றாக பயணிக்கின்றனர். ஆனால், அதே கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த சுஜித் ஷங்கருக்கு, ஹீரோ அர்ஜுன் தாஸ் மகிழ்ச்சியாக இருப்பது கோபத்தை தூண்டுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் ஏன் அர்ஜுன் தாஸ் மீது கோபத்தில் இருக்கிறார்? இருவரும் என்ன பிரச்சனை? இறுதியில் அர்ஜுன் தாஸ் எப்படி பிரச்சனையை முடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
முதல் காட்சியிலேயே கொலைகார போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் சுஜித், தனது சைக்கோத்தனத்தை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துவது மிரட்டல்.

அதேபோல் படம் முழுவதும் காலினை இடறி நடக்கும் சதாசிவபாண்டியன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சண்டைக்காட்சிகளில் மிரட்டும் அவர் இந்த படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாக உருவெடுப்பார் என்பது போல் அட்டகாசம் செய்திருக்கிறார்.

தன்யா ரவிச்சந்திரன், G.M.குமார், ரம்யா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தில் பிரச்சனை என்னவென்றால் முதல் பாதிவரை கதை தொடங்கவே இல்லை என்பது தான். கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை மட்டுமே முதல் பாதி காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆங்காங்கே சமூகநல கருத்துக்களை பேசினாலும் இந்த கதைக்கு அவை ஒட்டாத ஒன்றாகவே தனியாக தெரிகிறது.

தமனின் இசையும், ஒளிப்பதிவும் படத்தை ரம்யமாக காட்டுகின்றன. படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை

க்ளாப்ஸ்
கண்களுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

ஹீரோ, வில்லனின் மிரட்டலான நடிப்பு

தமனின் இழையோடும் இசை

பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் தொடங்கும் கதை

படத்தின் நீளம்

மொத்தத்தில் பொழுதுபோக்கிற்காக ஒருமுறை பார்க்கலாம் என்ற வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ”ரசவாதி”.

ரேட்டிங் 3/5

ஸ்டார் படத்திற்கு கவின் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார்.

அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

ஸ்டார் சம்பளம்
இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் கவின் நடிப்பை தான் பாராட்டி வருகின்றனர் இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார்.

ரஜினியுடன் நடித்ததை நினைத்து புலம்பிய ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படையப்பா பற்றி..
ரஜினி நடித்த படையப்பா படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.

நீலாம்பரி negative ரோல். அதில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன்.

ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் ஷூட்டிங் நடக்கும்போதும் இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அனைத்து படங்களை விட இதற்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது என அவர் கூறி இருக்கிறார்.

யாழில் கொடூரம் கற்பழித்து கொல்லப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணே இவ்வாரு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரிசோதனையில் தெரியவந்த தகவல்
உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி கிடந்ததைக் பார்த்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அக்காவாக நடிக்க பலகோடி கேட்ட நயன்

நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது.

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.

இரண்டு மடங்கு அதிக சம்பளம்
படத்தின் கதையை கேட்டு சரி என கூறியுள்ள நடிகை நயன்தாரா, இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூ. 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். குறிப்பாக படத்தில் அக்கா, தம்பிக்கு இடையிலான எமோஷனல் காட்சி வருகிறதாம். அதுதான் படத்தின் முக்கிய காட்சி என்கின்றனர்.

இவ்வளவு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் நயன். கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா இதுவரை ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முதல் முறையாக யாஷ் படத்திற்காக தன்னுடைய வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கேட்டுள்ளார் நயன்தாரா. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு பெரிய பணக்காரரா

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.

ஹெலிகாப்டர் வாங்க போறேன்

மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய பணக்காரர் என்பதும், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்பது ம் குறிப்பிடத்தக்கது.

விரைவில் அவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க போகிறாராம். அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

“எனக்கு நேரம் தான் முக்கியம். முக்கிய நகரங்களுக்கு சமையல் செய்யபோகும்போது விமானத்தில் சென்று வருகிறேன். ஆனால் சின்ன ஊர்களுக்கு செல்லும்போது காரில் செல்ல அதிகம் நேரம் எடுக்கிறது. அதானால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டே செல்கிறேன்”.

“அடுத்து சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க போகிறேன். எனது ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என எனக்கு தெரியும். 10 வருடம் கழித்து என் நேரத்தின் மதிப்பு உயரும். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்குகிறேன்” என மாதம்பட்டி ரங்கராஜ் கூறி இருக்கிறார்.

 

 

பல கோடி செலவில் நடாத்தப்பட்ட ரோபோஷங்கர் மகள் திருமணம்!

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

பல கோடி செலவு செய்தது ஏன் .
சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.

எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.

அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.

விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா

திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என திரிஷா கைவசம் பல படங்கள் உள்ளன.

சாய் பாபா கோவில்
நடிகர் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவிற்கு சாய் பாபா கோவில் ஒன்றை கட்டினார். அந்த கோவிலின் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை திரிஷா சமீபத்தில் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளாரா என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.

ஆனால், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளார் என உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சிட்டியின் சூழ்ச்சியால் பிரச்சனையில் சிக்கும் முத்து

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, ரசிகர்களின் பேவரெட் சீரியலாக உள்ளது.

கதையே இல்லாமல் சில சீரியல்களில் தேவையில்லாத விஷயத்தை காட்டி ஓட்டுவார்கள்.

ஆனால் இதில் அப்படி இல்லை, அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், அடுத்தடுத்த திருப்பங்கள் என கதையை அழகாக கொண்டு செல்கிறார்கள்.

எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.

எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.

 

ரஜினியின் கதையில் பிளான் போட்ட இயக்குனர்

ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும், தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்பது போல் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படம் ராணா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை போட்டு பிரம்மாண்டமாக துவங்கியது. தீபிகா படுகோன் கதாநாயகியாக இப்படத்தில் கமிட்டாகி இருந்தார்.

ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ராணா போல ஒரு சிறப்பான கதையை மீண்டும் படமாக வேண்டும் என்பது தான் எனது ஆசை என இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளாராம்.

ராணா படத்தின் கதை எப்போது வேண்டுமானாலும் கூட படமாக எடுக்கலாம். காலம் தாண்டி பேசும் ஒரு படமாக ராணா இருக்கும். அந்தளவிற்கு இப்படத்தின் கதை சிறப்பாக இருக்கும் என கூறினாராம்.

ரஜினியின் கதையில் விஜய்
இந்த நிலையில், ராணா படத்தை தளபதி விஜய்யை வைத்து எடுக்க கே.எஸ். ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரஜினிக்கு எழுதிய கதையில் விஜய் நடித்தால் அது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை கவரும்.

ஆனால், விஜய்யை வைத்து எடுக்க ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படும் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை 4 திரைவிமர்சனம்

அரண்மனை என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான பிராண்ட்-ஆக மாறிவிட்டது. இந்த தலைப்பில் இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இன்று உலகளவில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.

சில லாஜிக் மிஸ்டேக், அதை சரி செய்திருந்தால் இன்னும் கூட படம் வலுவாக இருந்திருக்கும். திகில் காட்சிகளை பக்காவாக வடிவமைத்த விதம் படத்தின் பிளஸ் பாயிண்ட். மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார் தமன்னா. எமோஷனல் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

சுந்தர் சி படம் என்றாலே கிளாமர் இருக்கும் என விமர்சனத்தை இப்படத்தில் தகர்த்துள்ளார். தமன்னா அளவிற்கு ராஷி கன்னாவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் கூட, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் நடிகை ராஷி

நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தினாலும், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரின் நடிப்பு பக்கா. படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை தான். ஹிப் ஹாப் ஆதி அதில் வெறித்தனமாக ஸ்கோர் செய்துள்ளார். VFX படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அதே போல் படத்தை பிரமாண்டமாக காட்டிய ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, சுந்தர் சி பாணியில் மிரட்டலாக இருந்தது. சிம்ரன், குஷ்பூவின் நடனம் ஒரு பக்கமும், வில்லன் – ஹீரோவுக்கு இடையே உள்ள மோதலும் வேற லெவல். மேலும் அதற்காக போடப்பட்ட செட் மிகவும் பிரம்மாண்டம்.

பிளஸ் பாயிண்ட்

தமன்னாவின் நடிப்பு.

திரைக்கதை.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை.

திகில் காட்சிகள்.

ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள்.

மைனஸ் பாயிண்ட்

தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், அதனால் எற்படும் தொய்வு.

மொத்தத்தில் அரண்மனை 4, சுந்தர் சி-யின் வெற்றி மகுடத்தில் மற்றும் ஒரு ரத்தினம்..

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்

நடிகை ஜோதிகா எப்போதும் சமூக கருத்துகளை மேடைகளில் பேசுபவர். கோவிலுக்கு கொடுக்கும் காசை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள் என ஒருமுறை பேசி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கும்.

அப்படி சமூக அக்கறையுடன் பேட்டிகளில் பேசும் ஜோதிகா சமீபத்தில் நடந்த தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுந்தது. அதை நெட்டிசன்களும் விமர்சித்தனர்.

ஜோதிகா பதில்
தற்போது ஜோதிகா நடித்து இருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரெஸ் மீட் இன்று நடந்தது. அதில் ஜோதிகாவிடம் செய்தியாளர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நான் வருஷா வருஷம் ஓட்டு போடுகிறேன், சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வர முடியாத நிலை இருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போகும், எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது.’

‘எனக்கும் பிரைவேட் லைப் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்’ என விளக்கம் கொடுத்தார்.

அரசியலுக்கு வருவீர்களா..
மேலும் அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என கேட்டதற்கு, ‘யாரும் என்னை கேட்கல. இப்போது பசங்க படிச்சிட்டு இருக்காங்க, அதையும் கெரியரையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வர எண்ணம் இல்லை” என கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு ‘அவுட் ஆப் தி டாபிக்’ என சொல்லி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்

இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் நிலையில் அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

கவின் தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். Bloody Begger என டைட்டில் வைங்கப்பட்டு இருக்கும் அதன் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

கவின் பிச்சைக்காரன் லுக்
கவின் இந்த படத்தில் பிச்சைக்காரன் லுக்கில் நடித்து இருக்கிறார்.

வைரலாகும் ப்ரோமோ இதோ.