தேசிய சுதந்திர முன்னணி இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கலந்துக் கொள்வதாக, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுத்து, தொலைநகல் தகவல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தொலைநகல் தகவலின் காரணமாக அனைத்து ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் அந்த இடத்திற்கு சென்றுள்ள போதிலும் விமல் வீரவன்ச அங்கிருந்து சென்றுள்ளார்.
ஊடக சந்திப்பை புறக்கணித்த வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்கவை ஊடக சந்திப்பை நடத்துமாறு கூறிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இன்றைய தினம் ஊடக நிறுவனங்கள் அவரது வீட்டில் இடம்பெற்ற மர்மமான மரணம் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள தயாராக இருந்தனர்.
எனினும் இதனை அறிந்துக் கொண்ட விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டை கவிழ்க்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்த விமல் இந்த நாட்களில் சற்று அமைதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் விமல் வீரவன்ச வீட்டில் 24 வயது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்துடன் வீரவன்ச குடும்பத்திற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த மரணம் இயற்கையானது அல்லவெனவும், திட்டமிட்ட கொலை எனவும் பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விக்களுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் இடது கை மட்டையாளர் குமார் சங்ககாரா. இவருக்கென்றே இலங்கையில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
பிரபல தனியார் இணையதளமான ISLAND CRICKET என்ற இணையதளம் சங்ககாராவின் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதாவது குறித்த இணையத்தில் ரசிகர்கள் அனைவரும் நவம்பர் 4 ஆம் திகதிக்குள் தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு விட வேண்டும் என்றும், அதில் உள்ள சிறந்த 10 கேள்விகளுக்கு சங்ககாரா பதில் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கில் நிலைகொண்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரும் வெளியேற்றப்படவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளர்.
சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,
இந்தச் சந்திப்பு தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் கூறுகையில், இலங்கையில் தற்போதிருக்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும் ஆண், பெண் சமநிலை பற்றியும் பெண்களுக்கான வலுவூட்டல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதானால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
போர் முடிந்து 7 வருடங்களின் பின்னரும் வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடையாகவே இருக்கும்.
வடக்கில் பொதுமக்களது 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி, நிலங்களை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். அவற்றை இதுவரை காணிச் சொந்தக்காரர்களிடம் படையினர் திருப்பிக் கொடுக்கவில்லை.
இது குறித்த விரிவான புள்ளிவிபரம் எங்கள் வசமுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு இதுவரை எந்த விதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.
அந்தக் காணிகளை அவர்கள் மீளத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும், படையினர் அவர்களது காணிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு அதன் வருமானத்தைத் தாங்களே பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், வளமிக்க இந்தக் காணிகளைப் படையினரிடமிருந்து மீளப் பெற முடியாது, காணியின் சொந்தக்காரர்கள் அகதி முகாம்களில் உண்ண உணவின்றியும் வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையிலும் மிக நீண்ட காலமாக வாழ்கின்றார்கள்.
விவசாயம் செய்தவர்கள் இன்று உணவுக்காக மற்றவர்களை அண்டிப்பிழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை இராணுவம் ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கமும் அது குறித்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதால் அந்த மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மீன்பிடித் தொழிலை செய்வோர் கடலுக்கு சென்று தமது தொழிலை செய்யமுடியாதுள்ளது. வடக்கு கடல்களை தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கின்றனர்.
தங்கள் உரிமையைக் கேட்க முனையும் வடக்கு மீனவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் தமிழ் மீனவர்கள் கடற்தொழில் செய்ய முனைந்தால் அது சட்டவிரோதமானதென கூறி அவர்களை படையினர் கைது செய்கின்றனர்.
இவ்வாறான செயல்கள் மூலம் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். எனவே இராணுவப் பிரசன்னமானது வடக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது.
இதைவிட வடக்கில் இராணுவத்தினர் பல்வேறு பகுதிகளிலும் தாங்களே ஆரம்பப் பாடசாலைகளை நடத்தி வருகின்றனர். அங்கு தமிழ் யுவதிகளுக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து அவர்களைத் தமது நிர்வாகத்தில் வைத்துள்ளார்கள்.
வடக்கில் ஆரம்பப் பாடசாலைகளை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் தான்தோன்றித்தனமாகவும் தங்களது நன்மைக்காகவும் இவற்றை நடத்துகின்றனர்.
சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இவை நடத்தப்படுவதால் பொதுமக்கள் எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது வடக்கில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 344 ஆரம்பப் பாடசாலைகளில் 588 பெண்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகிறார்கள்.
உண்மையில் இந்தப் பாடசாலைகள் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு அனுமதி வழங்காது படையினர் தாங்களே அவற்றை நடத்துகின்றனர்.
மொத்தமாக இந்த ஆரம்பப் பாடசாலைகளில் 689 யுவதிகள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். எனவே வட மாகாண சபையின் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இராணுவத்தினரும் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.
இந்த ஆசிரியைகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் உள்நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அவை தொடர்கின்றன.
இதேநேரம், அரச திணைக்களங்களிலிருந்து பொலிஸாருடன் பெண்கள் சம்பந்தமான விடயங்களில் தொடர்புகளை மேற்கொள்ள சில பெண் அலுவலர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.
ஆனால், நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். எமது பெண் அலுவலர்கள் பொலிஸ் நிலையங்களில் வேலை செய்ய தயார் இல்லை என்பதனை சந்திரிகா அம்மையாருக்கு தெரிவித்தேன்.
பெண்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதானால் வேலையற்ற பட்டதாரிகளான எமது யுவதிகளை அரச காரியாலயங்களில் நியமித்து அவர்கள் ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அறிவுரை வழங்கிறேன்.
அது சம்பந்தமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது போல் பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்கானிடம் திருமண பரிசு கேட்டதற்கு அவர் விவாகரத்து கொடுத்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இம்ரான்கானின் இரண்டாவது மனைவியின் பெயர் ரெஹாம். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இது குறித்து அவரது மனைவி தற்போது கூறுகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி தங்களுடைய திருமண நாள் அதன் காரணமாக நான் அவரிடம் திருமண பரிசுகேட்டதாகவும் ஆனால் அவரோ திருமண பரிசுக்கு பதிலாக விவாகரத்து கொடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் இம்ரான்கான் அரசியலில் ஈடுபடுவதை ரெஹாம் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 30 ஆம் திகதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட சுகாதார அலுவலகத்திற்கு புதிதாக 14 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடமொன்றை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எதிர்காலத்தில் சுயாதீன சுகாதார சேவையினை கொண்டு செல்லகூடிய தன்மை நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இத்தாலிய இளவரசர் பரிதாபமக இயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிய இளவரசர் பிலிப்பினொ கார்சினி என்பவர்தான் குறித்த வாகன விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர். இவர் லணடனில் உள்ள Regent’s பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு விரிவுரையில் கலந்து கொள்ளும் பொருட்டு தனது மிதிவண்டியில் வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக Knightbridge பகுதியில் வைத்து லொறியுடன் மோதியதில், குறித்த லொறியின் சக்கரத்தில் சிக்கி அங்கிருந்து 90 அடி தூரம் வரையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதில் கடுமையான காயம்பட்டு இளவரசர் கார்சினி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
21 வயதான இளவரசர் பிலிப்பினொ கார்சினி இத்தாலியில் Florentine உயர்குடியை சேர்ந்தவர். தகவலறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பூக்களை குறித்த பகுதியில் குவித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த குறித்த பகுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 விபத்துகள் நடந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைடையே விபத்துக்கு காரணமான 42 வயது லொறி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜீன் லம்பெர்ட் இங்கு கருத்து வெளியிடுகையில்,
‘சிறிலங்காவில் தேர்தல்களின் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் கூறுகின்றன. எனினும், உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 அனைத்துலக பிரகடனங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
இவற்றில் 19 பிரகடனங்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவை. 6 பிரகடனங்கள் தொழிலாளர் விவகாரங்களுடனும், இரண்டு பிரகடனங்கள், சுற்றாடல் விவகாரங்களுடனும் தொடர்புடையவை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அனைத்துலக தரத்திலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை சிறிலங்கா பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜிஎஸ்பி சலுகை குறித்து தொடர்சியான பரந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் முன்னேற்றம் காணப்படுகிறது.
இருந்தபோதும் சிறிலங்காவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்த பின்னரே அது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடப்படும்.
எமது பயணத்தின் போது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்.
சிறிலங்காவில் புலப்படக்கூடிய மாற்றங்கள் தென்படுகின்ற போதும் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.
வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பில் வடக்கில் இராணுவ மயத்தை குறைத்தல், காணிகளை விடுவித்தல், சிவில் செயற்பாடுகளில் காவல்துறையினரின் தலையீடுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான பணியகம் அமைத்திருக்கும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நல்லிணக்க செயற்பாடுகள் சரியான பாதையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்,ருங் லாய் மார்கே,
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு சிறிலங்கா அரசாங்கம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது.
விண்ணப்பித்து 8 தொடக்கம் 10 மாதங்கள் கழித்தே முடிவு எடுக்கப்படும். கடந்த ஜூலையில் சிறிலங்கா இதற்கு விண்ணப்பித்தது.
எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இந்தச் சலுகையை வழங்குவதா-இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
இன்று என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னைப் பற்றி குறை சொல்லும் நபர்கள் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எனது 18 அடி கட்அவுட்டை பயன்படுத்தியிருந்தார்கள்.
எனது பெயரையும், படத்தையும் பயன்படுத்தியே அவர்கள் சுதந்திரக் கட்சியில் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். இன்று அவர்களுக்கு என்னை நினைவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் டீல் போடவில்லை. அவர்களே போட்டுள்ளார்கள். உண்மையான நிலைமைகளை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
கள்வன் கள்வன் என என்னை குற்றம் சுமத்துவோர் இன்று ரணிலின் மடியில் இருக்கின்றார்கள். இந்த உண்மையான நிலைமை கடவுளுக்கு தெரியும்.
சேறு பூசுதல் அவமரியாதை செய்தல் எந்த நாளும் செய்ய முடியாது. என்ன நடக்கின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங் குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மனைவி வழி உறவினர்கள் உறு துணையாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட் டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்
கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலை யையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறி வீர்கள். பிரார்த்த னை களை குடும்பத்தினருடன் சென்று நிறை வேற்றுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்
சிம்மம்: எதிர்பார்த் தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக் கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங் களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
துலாம்
துலாம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார் க்க வேண்டி வரும். உற வினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
தனுசு
தனுசு: மறைமுக விமர் சனங்களும், தாழ்வு மனப் பான்மையும் வந்துச் செல்லும். சகோதர வகை யில் பிணக்குகள் வரும். லேசாக தலை வலிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
மகரம்
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கும்பம்
கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
மீனம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.
அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.
மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.
சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.
மிளகு தண்ணீர்
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.
இஞ்சி தண்ணீர்
இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மஞ்சள் தண்ணீர்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.
எலுமிச்சை தண்ணீர்
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
ஆப்பிள் சீடர்
வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.
குளோரெல்லா தண்ணீர்
இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.
பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு…….
பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லொறி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய பஸ் தீக்கிரையான நிலையில் சம்பவ இடத்திலேயே 19 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் மேலும் ஒருபெண் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எதிர்ப்புத் தொடர்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று செவ்வாய்க்கிழமை, பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாணவர் ஒன்றியங்களுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக, யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் சுவாமிநாதன், அங்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இச்சந்திப்பு, இன்று செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12:30 மணிக்கு, கொழும்பில் வைத்து இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா நாட்டில் காதலனுக்கு மிக அருகில் நின்ற குற்றத்திற்காக இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள Banda Aceh என்ற மாகாணத்தில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 20 வயதான இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் அவருடைய காதலனுடன் வெளியில் சென்றபோது அவருக்கு அருகில் நின்று பேசியுள்ளார்.
இளம்பெண்ணின் இந்நடவடிக்கை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறி இளம்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து இளம்பெண் மற்றும் அவருடைய 21 வயதான காதலனை கைது செய்த பொலிசார் Masjid Al-Muttaqin என்ற மசூதிக்கு முன்னிலையில் நேற்று சவுக்கடி தண்டனை கொடுத்துள்ளனர்.
பொது இடங்களில் திருமணம் ஆகாத நபர்கள் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தொடுவது உள்ளிட்ட செயல்களுக்கு இந்தோனேசியாவில் கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கௌதமி, இப்போது மிகுந்த மனவருத்தத்துடன் அவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
குருசிஸ்யன் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கௌதமி.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
கமலும், கௌதமியும் முதன்முறையாக அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் தேவர் மகன், குருதிப்புனல், பாபநாசம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கௌதமி முதல் , சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.
கௌதமி-சந்தீப் இடையேயான திருமண உறவு நீடிக்கவில்லை, இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடனான கொண்ட நட்பில் அவருடன் வாழ தொடங்கினார்.
கமலும் நடிகை சரிகாவை பிரிந்த பின்னர் கௌதமியுடன் வாழ தொடங்கினார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கமலும், கௌதமியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
தற்போது கமலின் திரைப்படங்களில் உடை வடிவமைப்பாளராகவும், பாபநாசம் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் ஜோடியாகவும் நடித்தார்.
இந்நிலையில், கமல் உடன் வாழ்ந்து வந்த உறவை முறித்து கொள்வதாக நடிகை கௌதமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி கௌதமி கூறியிருப்பதாவது,
‘மிகுந்த மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கமலுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
தனிப்பட்ட சில காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே இதுப்பற்றி யோசித்து வந்தேன்.
முக்கியமாக என் மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது.
நான் யாரையும் குறை சொல்லவோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கம் அல்ல.
29ஆண்டுகாலம் கமல் உடனான நட்பில் நிறைய கற்று கொண்டேன்.
இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் கமல்.
13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தாலும், கமலின் ரசிகையாக என்றும் தொடர்வேன்.
கமலின் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது அவரிடமிருந்து நிறைய விடயங்கள் கற்று கொண்டேன்.
இதுவரை அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம், இன்னும் அவர் பல சாதனைகள் புரிவார், அவருக்கு வாழ்த்து சொல்ல நான் காத்திருக்கிறேன்.
ரசிகர்களாகிய நீங்கள், என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாய் இருந்துள்ளீர்கள்.
உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் இந்த தருணத்தில் என் வாழ்வில் நடப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 29ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன்.
என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
மேற்காட்டியவாறு நடிகை கௌதமி டுவிட்டரில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், நடிகை வாணி கணபதியை 1978ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த திருமணம் 10ஆண்டுகள் தான் நீடித்தது.
1988-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பின்னர் கமல் பொலிவூட் நடிகை சரிகாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
சரிகா உடனான திருமண வாழ்வு 16 ஆண்டுகள் நீடித்தது, 2004ல் விவாகரத்து பெற்று கமலும், சரிகாவும் பிரிந்தனர்.
அதன்பின் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1900களில், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல மனிதாபிமானமற்ற நடைமுறைகள் அமலில் இருந்து வந்தன. அதுவும் ஜாதி வெறியினரால் பெண்கள் மிகவும் மோசமான துன்புறுத்தலுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.
தாழ்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம், உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம் என தனி தனி சட்டம் இருந்தது.
கேரள மாநிலம் திருவாங்கூர் மாவட்டத்தில், அதாவது தற்போதைய திருவனந்தபுரத்தில் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. தங்கள் உடலின் கீழ்புற பாகங்களை மட்டும் பெண்கள் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் இந்த பெண்கள், தங்களுடைய மார்பகங்கள் பிறரின் பார்வைக்கு தெரிகிறதே என்று ஆதங்கம் கொண்டனர். மேலும் அவர்கள் மேலாடை அணிய விரும்பினால் அதற்காக தனியாக வரி செலுத்த வேண்டுமாம்.
Namboodiri, Brahmin, Kshatriya மற்றும் Nair ஆகிய மேல்ஜாதி வகுப்பினர் மட்டும் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டார்கள்.
ஒரு முறை கீழ் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதியின்றி மேலாடை அணிந்திருப்பதை பார்த்த இளவரசி, உடனடியாக அவரது மார்பகங்களை வெட்டி வீசுமாறு கொடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாங்கள் வரி செலுத்துகிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அப்பெண்கள் மேலாடை அணியும் பட்சத்தில், அவர்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படும்.
அப்பெண்கள் வரிக்கட்டணம் செலுத்த தவறினால், அவர்கள் தங்களது மார்பகங்களை வெட்டி வாழை இலையில் வைக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்படும்.
காரணம் கீழ் ஜாதி பெண்கள் தங்களுடைய மார்பகத்தை மறைப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது.
ஹாலோவின் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது, இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இரவு ( trick-or-treaters) என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் 4000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரையும் வரவேற்று ஒபாமா உரையாற்றினார்.
தொடர்ந்து மனைவி மிக்செல் ஒபாமாவுடன் சேர்ந்து மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ‘திரில்லர்’ பாடலுக்கு நடனமாடினர்.
அமெரிக்காவில் வருகிற 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சாதனை சிறுவனான Kulisa Saranath Nanayakkara ஆசிய செஸ் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு நடத்தும் “அண்டர்-14” ஆசிய கிண்ண செஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த யூன் மாதம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற Asian Schools Chess Championship போட்டியில் அசத்திய Kulisa Saranath Nanayakkara 3வது இடம் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் காந்தி-மன்சிய்ஸ்க் நகரில் கடந்த செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்ற World Youth Chess Championship போட்டியில் சாதனை படைத்தார்.
இந்நிலையில் சீனாவின் ஜியாசிங் நகரில் எதிர்வரும் 5ம் திகதி முதல் 12 திகதி வரை நடக்கும் Asian Nations Cup Chess Team Championship போட்டியில் பங்கேற்கும் அணியில் Kulisa Saranath Nanayakkara சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் செஸ் வரலாற்றில் உலக செஸ் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட அரினா கிராண்ட் மாஸ்டர் (AGM – Arena Grand Master) பட்டத்தை வென்ற முதல் வீரர் Kulisa என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து நாட்டில் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ பிரபல ஹொலிவுட் நடிகரான லியானர்டோ டிகாப்ரியோ ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் 30,000 பேர் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை தொடர்ந்து ‘டைட்டானிக்’ புகழ் லியானர்டோ டிகாப்ரியோ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘வீடு மற்றும் உணவு இல்லாத ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு எனது ரசிகர்களும் பொதுமக்களும் 6 டொலர் அன்பளிப்பாக கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு சன்மானம் கொடுப்பவர்களில் இறுதியாக ஒருவரை தெரிவு செய்து அவர் என்னுடன் மதிய உணவு அருந்தலாம்’ என லியானர்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து நாட்டில் உள்ள Home என்ற உணவகம் வீடு மற்றும் உணவு இல்லாத நபர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 4,89,000 டொலர் நிதி வசூல் செய்து அவ்வாண்டு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு உணவு அளித்து வறுமையை போக்கியுள்ளது.
இதேபோல், இந்த ஆண்டும் இதுபோன்ற ஏழைகளுக்கு உதவ ஹோம் முன் வந்துள்ளது.
இறுதியில் தெரிவு செய்யப்படும் நபர் லியானர்டோ டிகாப்ரியோவுடன் உணவு அருந்துவது மட்டுமில்லாமல், அவர் George Hotel என்ற நட்சத்திர ஹொட்டலில் ஓர் இரவு முழுவதும் தங்களாம்.
மேலும், 1,200 மதிப்புள்ள ஷாம்பெய்ன் மது பாட்டிலும் அவருக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 11-ம் திகதி இறுதியாக வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.