கர்ப்பமாக இருக்கும்போது மரணமடைந்த நடிகை சௌந்தர்யா!

நடிகை சௌந்தர்யா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னுமணி தான். ஆம், கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார்.

திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

சொத்து
உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் பல கோடி சொத்துக்கள் இருந்துள்ளதாம். இதுகுறித்து அவர் உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை சௌந்தர்யாவின் தாய் மற்றும் கணவரும் இருவரும் மறுத்துவிட்டனர். 31 வயதிலேயே அவர் உயில் எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் இருந்து ரூ. 100 கோடி சொத்து சம்மந்தமான உயில் குறித்து மீண்டும் பேச்சு துவங்கியுள்ளது. சௌந்தர்யா எழுதிய உயிலை மறைத்து அவருடைய தாய் மற்றும் கணவர் இருவரும் அந்த சொத்துக்களை பாதி பாதியாக பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது உலா வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்கள் 21.04.2024

மேஷ ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காலையில் அசதியும் சோர்வும் நிறைந்திருக்கும். என்றாலும் பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியுமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்களில் துணிச்சல் வெளிப்படும். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக் குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துத் தொடங்கு வது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

முற்பகலில் செயலில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் நல்ல நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

குடும்பத்தினரால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பைரவர் வழிபாடு பலன் தரும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகம் நிறைந்திருக்கும் நல்ல நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்ற வர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அம்பிகையை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகர ராசி அன்பர்களே!

சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களி டம் கனிவாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். நீண்டநாள்களாகத் திரும்பிச்செலுத்த நினைத்த கடனைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். துர்கையை வழிபடுவது நன்று.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்ச்சிக்கும் மக்கள்

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.

இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு மனைகளின் விலை உயர்வு மற்றும் வாடகைத் தொகை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் ரொறன்ரோவில் குடியிருப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாங்களே..96 படத்தில் நடித்த சின்னப்பொண்ணா இது?

96
கடந்த 2018 -ம் ஆண்டு விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பள்ளி பருவத்தின் காதலை அழகாய் காட்சிப்படுத்திய 90ஸ் கிட்ஸ் மனதை வென்றுவிட்டனர். இப்படம் சூப்பர் டூப்பர் அடிக்க மலையாளம் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் சிறுவயது திரிஷாவின் தோழியாக நியதி நடித்திருப்பார். இவர் வேறு யாரும் இல்லை அதே படத்தில் நடித்த நடிகை தேவதர்ஷினியின் மகள் தான்.

புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நியதி தேவதர்ஷினி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், 96 படத்தில நடித்த பொண்ணா இது? இப்படி மாறிட்டாரே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ புகைப்படங்கள்..

வாக்களிக்க வந்த திரிஷா..

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.

அஜித், விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.

திரிஷா
நடிகை திரிஷாவும் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு கையை காட்டி போஸ் கொடுத்தார். அவரது அம்மாவும் உடன் வந்து இருந்தார்.

மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் போலீஸ் தடுமாறி கீழே விழ திரிஷா ஷாக் ஆகி பதறி போனார்.

அப்போது எடுத்த போட்டோ தான் இது.

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?

சிறுவயது புகைப்படம்
திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யார் தெரியுமா ?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, பிரபல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், மீன் குழம்பும் மண்பனையும் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடித்த பாவ கதைகள் வெப் தொடர்க்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இவர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

 

விவாகரத்து பிரச்சனை! ரஜினியை நேரில் சந்தித்த தனுஷ்..

ஐஸ்வர்யா – தனுஷ்
ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து சர்ச்சை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை தனுஷ் – ஐஸ்வர்யா அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்த்
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் தனுஷை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த். போயஸ் கார்டனனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார் தனுஷ். அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளாராம்.

ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதே போல் தனுஷ் வீட்டார்களும், இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அவை யாவும் கூட பலன் தரவில்லை. இதன்பின் தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

நடிகர் வினித்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

வினீத்
கடந்த 1992 -ம் ஆண்டு வெளியான ஆவாரம் பூ என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வினீத் ஸ்ரீனிவாசன்.

இதனை அடுத்து மே மாதம், காதல் தேசம், சக்தி போன்ற படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித். கடைசியாக இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

புகைப்படம்
நடிகர் வினீத் கடந்த 2004 -ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் வினீத் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மீனாவை கலங்க வைத்த விஜயா முத்து செய்த தரமான சம்பவம்

சதி செய்த விஜயா
விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல் என்றால் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் மீனா சொந்தமாக பூ கட்டும் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய வீட்டிற்கு வெளியே கடை வைத்து கொடுத்தார் முத்து.

இதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தன்னுடைய கணவருக்கு புதிதாக கார் வாங்கி கொடுத்தார் மீனா. இப்படியொரு சூழ்நிலையில், மீனா மீது ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா, அந்த பூ கடைசியை காலி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளார்.

முத்து செய்த சம்பவம்
இந்த நிலையில், மீனாவின் பூ கடையை பற்றி புகார் அளித்து, அந்த கடையை காலி வைத்துவிட்டார் விஜயா. இதனால் கண்கலங்கி அழுகிறார் மீனா. இந்த சமயத்தில் மீனாவிற்கு புதிதாக டு வீலர் வண்டி ஒன்றை வாங்கி தருகிறார் முத்து.

சிலர் சதி செய்து மீனாவின் கடையை காலி செய்துவிட்டார்கள், இனிமேல் இந்த வண்டியிலேயே சென்று, எங்கு வேண்டுமானாலும் மீனா பூ விற்கலாம் என முத்து தனது மனைவி மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

 

திருமணத்திற்கு பின்பு பிரிஞ்சுதான் இருந்தோம்!

சினேகா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சினேகா. டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த சினேகா, புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினேகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பின்பும் பிரைவசிக்காக, நாங்கள் தனி தனியாக வாழ்ந்து வந்தோம். ஆரம்ப கட்டத்தில் வீடு கிடைக்கவில்லை. அதனால் நான் என் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் வரை அப்படி தான் இருந்தோம். குழந்தை பிறந்த பிறகு கவனம் எல்லாம் அங்கே சென்றுவிட்டது. தற்போது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை வந்து இருக்கிறது. எங்கள் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது.

அது மாதிரியான நேரத்தில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். அந்த சமயத்தில் பல நினைவுகளை பற்றி பேசுவோம். அப்போது எங்களுக்கு இடையே உள்ள ஸ்பார்க் மீண்டும் வரும்.

எனக்கும் பிரசன்னாவுக்கு இடையே சண்டை அடிக்கடி வரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் சண்டை முடிந்த பிறகும் நாங்கள் இவருடைய கருத்தையும் புரிந்துகொள்வோம் என்று சினேகா கூறியுள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேரம் மாற்றம்

விஜய் டிவியில் இந்த வாரத்தோடு தமிழில் சரஸ்வதியும் சீரியல் நிறைவடைகிறது. அதனால் வரும் திங்கள் முதல் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கின்றனர்.

அதனால் மற்ற சீரியல்களின் நேரத்தை மாற்றி இருக்கிறது விஜய் டிவி. அது பற்றிய முழு விவரங்கள் இதோ.

நேரம் மாற்றம்
வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இனி மோதலும் காதலும் மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

புது சீரியல் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் ரெஸ்பான்ஸ் எப்படி கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கிழக்கு வாசல் கிளைமாக்ஸ் போட்டோவில் இல்லாத ரேஷ்மா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் ரேஷ்மா முரளிதரன் ரேணு என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது.

இன்னும் 200 எபிசோடுகளை கூட தொடாத கிழக்கு வாசல் சீரியலை விஜய் டிவி தற்போது அவசரமாக முடிவுக்கு கொண்டு வருகிறது.

சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், அதன் போட்டோவில் நடிகை ரேஷ்மா இடம்பெறவில்லை.

ஒரு மாதமாக நான் நடிக்கவில்லை..
இந்நிலையில் நடிகை ரேஷ்மா இதுபற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்கவில்லை என கூறி இருக்கிறார்.

இவர் சரியாக ஷூட்டிங் வராத காரணத்தால் தான் சீரியல் அவசரமாக முடிக்கப்படுகிறதோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கிளைமாக்ஸ் போட்டோவிலும் ரேஷ்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சமீப காலமாக முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது என்றாலும், இதில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என ரேஷ்மா பதிவிட்டு இருக்கிறார்.

லவ்வர் பட நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நபர்

லவ்வர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். அவருடைய நடிப்பில் வெளிவந்த குட்நைட் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர்.

சமீபத்தில் மணிகண்டன் நடித்திருந்த லவ்வர் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.

இப்படத்தில் ஹீரோயின் தோழியாக ஹரிணி சுந்தர்ராஜன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
இது குறித்து ஹரிணி சுந்தர்ராஜன் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ” இன்று காலை என்னுடைய எக்ஸ் தளத்தில் சில முட்டாள்கள் டிஎம் செய்து இருக்கிறார்கள். லவ்வர் படத்தில் இடம்பெற்றுள் ஐஷுவைப் கதாபாத்திரத்தை பிடிக்காததால் என்னைத் திட்டி வருகின்றனர்.

ஒருவர் நடித்த கதாபாத்திரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவரை இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என ஹரிணி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

விஜயின் கடைசி படத்தை தயாரிக்க போவது இவர் தானாம்!

தளபதி 69
தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தின் பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச். வினோத் தான் இயக்க போகிறார் என உறுதியாக சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் இப்படத்தை தயாரிக்கும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் தகவல்
அதாவது DVV Entertainment நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களாம். இதனால் தளபதி 69 படத்தை யார் தயாரிக்க போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 படத்தை நடிகர் விஜய் தனது சொந்த தயாரிப்பில் எடுக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. தேர்தல் முடிந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகைதர சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முதலைகளின் நடமாட்டம்
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதி

நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதி படத்தில் சுப்ரமணிய பாரதியாராக நடித்து அதிகம் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர ரோல்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

நெஞ்சு வலி
இந்நிலையில் நேற்று நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை நீக்க angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sayaji Shinde (@sayaji_shinde)

சிவனொளிபாதமலை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

சிவனொளிபாத மலை பருவகாலத்தை முன்னிட்டு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிவனடிபாத மலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எந்த காலமும் இல்லாத வகையில் இந்த முறை அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதனால் நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து விருந்தினர் விடுதிகளும் நிறைந்துள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை பொலிஸார் வழங்கி வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

அதேபோல் உள்நாட்டு யாத்திரிகர்கள் இம்முறை சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய புகையிரதம் மற்றும் அரச பேருந்துகள் மூலமாகவும் அதிகளவில் வருகை தந்து விட்டு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் மே மாதத்தில் வரும் பூரணை தினமான வைகாசி விசாக நாளுடன் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முளைகட்டிய பயறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலை உணவு என்பது ஒவ்வொரு நாளின் மிக முக்கியமான உணவாகும். காலை உணவிற்கு பல்வேறு வெரைட்டிகள் இருந்தாலும், முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் முளை கட்டி உணவாகப் பயன்படுத்தலாம்.

முளை கட்டிய பயறு வகைகள் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

இரத்த சோகையை போக்கும்
முளை கட்டிய பயறில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகை போன்ற கடுமையான பிரச்சனைகளை குணப்படுத்தும் எனவே அனிமியா பிரச்சனையால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் காலை உணவில் முளை கட்டிய பயறை சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
முளை கட்டிய பயறில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதன் காரணமாக, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த உனவாக கருதப்படுகின்றன.நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, இது நீரிழிவு நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கு, ஏற்ற உணவாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
முளை கட்டிய பயறு உண்பதால் ரத்த ஓட்டம் சீராகும் என்றும், ரத்தம் உறைதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும், முளை கட்டிய தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

கண்பார்வை கூர்மைக்கு உதவும்
முளை கட்டிய பயறு வைட்டமின் ஏ நிறைந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இது கண் பார்வை கூர்மைக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினசரி உணவில் இதை சாப்பிட்டால், கண்பார்வை மேம்படும். கண் நோய் அண்டாமல் கண்களை பாதுகாக்கலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்
நார்ச்சத்து நிறைந்த முளை கட்டிய பயறு செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவியாக இருக்கும். மேலும், அமிலத்தன்மை, புளித்த ஏப்பம், வாயுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனும் குறையும்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவும்
தினமும் காலை உணவாக முளை கட்டிய பச்சை பயறை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் உணவில் முளைத்த சந்திரனை சேர்க்க வேண்டும். முளை கட்டிய தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைத்து, முதுமையை தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.