மகாலட்சுமி தங்காத இடங்கள் எவை தெரியுமா?

1. கடவுள் நம்பிக்கையற்றவர்கள்,
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,
6. பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர் மனை விரும்புகிறவர்கள்,
18. மனத் துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத் தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,
22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம் பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் தூங்குபவர்கள்
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,
27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள்,
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் செய்யாதவர்கள்,
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. குல தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,
37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று உறங்குபவர்கள்,
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.

இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

ஒருமுறை இந்திர சபையில் ‘இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?’ என்ற விவாதம் எழுந்தது. அங்கு கூடியிருந்த தேவர்களும், முனிவர்களும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களது கருத்துகளைச் சொல்லத் தொடங்கினர்.

‘இல்லறம் என்பது ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழும் இயல்பு நிலையைக் கொண்டது. சிற்றின்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வாழ்க்கையில், உயர்நிலையை அடைவது கடினமே’ என்பது துறவற அணியின் வாதம்.

‘இறைவனை அடைய வேண்டும் என்கிற சுயநல நோக்கத்துடன், எதிலும் விருப்பம் இல்லாமல், எவருக்கும் உதவாமல் தனித்து வாழ்பவர்கள்தான் துறவறம் புரிபவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் உயர்நிலைக்குச் செல்வதும் கடினம்’ என்று குற்றம் சாட்டினர், இல்லற அணியினர்.

இப்படியே இரண்டு அணியினரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், எதிர்தரப்பு குறைகளையும் வலியுறுத்தி பல கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது.

இந்த நிலையில் நடுநிலைவாதிகளாக இருந்த சிலர் தங்களின் கருத்துக்களைக் கூறினர். ‘இல்லற வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களுடையது. வாழும் காலத்தில் அவர்கள் செய்யும் நல்லவை, தீயவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்கள் கிடைக்கின்றன. குறுகிய காலமே கொண்ட இந்த இல்லற வாழ்க்கையில் இருந்தும் சிலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர்.

துறவு வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களில்லாதது. இறைவனை நாடுவதும், காலங்கள் பல கடந்து, இறைவனை அடைவதுமே இதன் நோக்கம். இந்த வழியிலும் சிலர் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.

அதேபோல், தூய்மையோடு இல்லறத்தை நடத்தி வந்து, பின்னர் இல்லறம் துறந்து, துறவறம் சென்று இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, இரு வழிகளிலும் இருந்து உயர்நிலையை அடைந்தவர்களும் உண்டு. எனவே இல்லறம், துறவறம் என்று கருத்து வேறுபாடு கொள்ளாமல், தாங்கள் எடுத்துக் கொண்ட அறத்தின் வழியில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகின்றனர் என்பதை நாம் அனைவருமே உணர வேண்டும்’ என்றனர் நடுநிலைவாதிகள்.

இதைக் கேட்ட இந்திரன், ‘நீங்கள் சொன்ன மூன்று வழிகளிலும் பலர் உயர்நிலையை அடைந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நாம் இங்கு இல்லறம், துறவறம் என்பதில் எது சிறந்தது என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். குறுகிய காலமே கொண்ட இல்லற வாழ்க்கையில் பல்வேறு இன்ப, துன்பங்களைப் பெற்று, அதிலிருந்து உயர்ந்த நிலையை அடைவதென்பது மிகவும் கடினமானது. ஆகவே இல்லறத்தின் வழியில் உயர்நிலையை அடைவதையே சிறப்புக்குரியதாக நான் கருதுகிறேன்’ என்று இல்லற வாழ்க்கைக்கு ஆதரவாகப் பேசினான்.

சாபம் :

அப்போது தேவகுருவான பிரகஸ்பதி, ‘இந்திரா! நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இன்பங்களையே நாடுகின்றனர். அவர்கள் தங்களுடைய இன்ப வாழ்க்கையில் ஏதாவது குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மட்டும் சிறிது நேரம் இறைவனை நினைத்து வேண்டுகின்றனர். ஆனால், துறவற வாழ்க்கைக்குச் செல்பவர்கள், தங்களுடைய உறவுகள், ஆசைகள் என்று அனைத்தையும் துறந்து, முழுநேரமும் இறைவனை நினைத்து வேண்டி வழிபட்டு உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். எனவே துறவறமே சிறப்புடையது’ என்றார்.

தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு, தேவகுருவின் வார்த்தை கோபத்தை வரவழைத்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே கொண்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் தவறான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றான்.

‘மனிதர்கள் அனைவரும் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டு அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிற்றின்பங்களில் இருந்து எதுவும் குறைந்து விடக்கூடாது என்றுதான் பலரும் இறைவனை வேண்டுகிறார்கள். அவர்களுக்கு இன்பமாக இருக்க வேண்டுமென்பதில் தான் விருப்பம் அதிகம். எதிர்காலத்தில் கிடைக்கும் பேரானந்தம் எனும் உயர்நிலையை அடைய வேண்டுமென்பதில் சிறிது கூட விருப்பமில்லை’ என்று வாதிட்டார் தேவகுரு.

தேவேந்திரனின் கோபம் எல்லை கடந்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கையில் கிடைக்கும் சில இன்பங்களைத் தவிர்த்துப் பசி, வறுமை, போட்டி, பொறாமை, பயம் என்று எத்தனையோ துன்பங்கள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன. அந்தத் துன்பங்களையெல்லாம் கடந்தும், துன்பங்களுக்கு மத்தியிலும்தான் அவர்கள் இறைவனை வேண்டி உயர்நிலையை அடைகிறார்கள். இந்த உண்மை தெரியாமல் பேசிய நீங்கள், பூலோகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பசி, வறுமை போன்ற துன்பங்களை அடைந்து மனித வாழ்க்கையின் உண்மையை உணர்வீர்களாக’ என்று சாபமிட்டு விட்டு அவையில் இருந்து வெளியேறினான்.

இந்திரனின் சாபத்தைக் கேட்டு பிரகஸ்பதி அதிர்ச்சியடைந்தார். அவையில் இருந்தவர்களும் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.

விமோசனம் :

இந்திரனிடம் சாபம் பெற்ற பிரகஸ்பதி, பூலோகத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் அதிகமான குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவருக்குப் பல நாட்கள் உணவு கிடைக்காமல் போனது. அதனால் துன்பமடைந்த அவர், தனது பசியைத் தீர்க்கத் தேவையான உணவு கிடைத்தால் போதுமென்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

அவருடைய வேண்டுதலை இறைவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவு கிடைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. வறுமையில் இருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் மனம் வருந்தியபடியே இருந்தார்.

இந்நிலையில் ஒருநாள், அவருக்குக் கிடைத்த சிறிது உணவைச் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நாய் அவரிடம் இருந்த உணவைப் பறித்துச் சாப்பிட முயன்றது. இதனால் பதற்றம் அடைந்த பிரகஸ்பதி, கிடைத்திருக்கும் சிறிது உணவையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த நாயை விரட்டினார்.

அப்போது நாய் பேசியது. ‘சென்ற பிறவியில் மனிதனாக இருந்த நான், எனது வீட்டில் என் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாய் உணவுக்காக என்னைத் தேடி வந்தது. நான் அந்த நாயை விரட்டியடித்ததால், இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்து துன்பம் அடைந்து கொண்டிருக்கிறேன். தேவ குருவாக இருந்த நீ, இந்திரனின் சாபத்தால் இப்போது வறுமையில் உழல்கிறாய். என்னையும் விரட்டி அடித்து அடுத்த பிறவியில் நாயாக பிறந்து துன்பம் அனுபவிக்கப் போகிறாயா?’ என்றது அந்த நாய்.

ஆனால் பசியின் பிடியில் இருந்த பிரகஸ்பதிக்கு அந்த பேச்சு எதுவும் பெரிதாகப்படவில்லை. அவர் நாயை விரட்டி விட்டு, உணவை சாப்பிட்டு முடித்தார். பசி அடங்கியதும் நாயின் எச்சரிக்கை மனதில் சஞ்சலத்தை வரவழைத்தது. தான் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து துன்பமடைவேனோ என்று அஞ்சத் தொடங்கினார்.

அந்த நினைவுகளுடனேயே, கால்போன போக்கில் நடந்து சென்றார். வழியில் ஒரு மரத்தடியில் பரத்வாஜர் என்னும் முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற பிரகஸ்பதி, ‘எனக்கு இந்திரன் கொடுத்த சாபமே மிகவும் துன்பத்தைத் தருகிறது. இதில் ஒரு நாய் வேறு என்னை எச்சரித்துச் சென்றிருக்கிறது’ என்று தன் நிலையைக் கூறி, துன்பங்களில் இருந்து விடுபட ஒரு வழியைக் காட்டும்படி வேண்டினார்.

பரத்வாஜரோ, ‘ஒவ்வொரு வருடமும் சித்திரை பவுர்ணமி அன்று, திருக்கச்சி அத்திகிரி (காஞ்சீபுரம்) என்னுமிடத்தில் அமைந்திருக்கும் விஷ்ணு கோவிலுக்கு வந்து, பிரம்மன் வழிபாடு செய்வார். அவருடன் சேர்ந்து விஷ்ணுவை வழிபட்டால், உங்கள் சாபம் நீங்கும்’ என்று அருளினார்.

இதற்கிடையில் தேவகுருவான பிரகஸ்பதி இல்லாமல், இந்திர சபை தனது பொலிவை இழந்திருந்தது. மேலும், தேவலோகத்தில் வேள்வி செய்யத் தகுந்த குரு இல்லாததால், வேள்விகள் அனைத்தும் தடைப்பட்டு நின்றிருந்தன. இதனால் வருத்தமடைந்த தேவலோகத்தினர் இந்திரனிடம் சென்று தங்கள் கவலையைத் தெரிவித்தனர். இந்திரனும் இதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று பிரம்மனைச் சந்தித்தான்.

பிரம்மதேவர் இந்திரனிடம், ‘நான் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமி நாளில், பூலோகத்தில் இருக்கும் திருக்கச்சி அத்திகிரி சென்று விஷ்ணுவை வழிபட்டு வருகிறேன். நீயும் என்னுடன் வந்தால், நீ வேண்டியது கிடைக்கும்’ என்றார். இந்திரனும் அதற்குச் சம்மதித்தான்.

அடுத்து வந்த சித்திரை மாத பவுர்ணமியில், மனிதப் பிறவியில் இருந்த தேவகுரு திருக்கச்சி அத்திகிரி வந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். அபோது அங்கு வந்த பிரம்மனும், இந்திரனும் கூட இறைவனிடம் பிரகஸ்பதிக்கு சாப-விமோசனம் தந்தருளும்படி வேண்டினர். மூவரின் வேண்டுதலிலும் மனம் மகிழ்ந்த விஷ்ணு, தேவகுருவான பிரகஸ்பதிக்கு மனிதப் பிறவியிலிருந்து விடுதலையளித்து அவரைத் தேவலோகத்துக்கு அனுப்பி வைத்தார்.

இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையதுதான். அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலையை அடைந்திட முயற்சிக்க வேண்டும் என்பதையே பிரகஸ்பதி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே விறைப்புத் தன்மையை அடைந்துவிடும்.

30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும்.

உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம்.

புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.

30 வயதுக்கு மேல் ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

ஆவாவையும் பிரபாகரன் படையையும் இயக்குபவர் வடக்கு முதல்வர் …!! பழிபோடுகின்றவர்கள் யார்?

அண்மையில் யாழில் மரணித்த இரு மாணவர்கள் தொடர்பில் முழு பொறுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன் சாரும் என பிரபல சிங்கள ஊடகம் ஒன்றான நெத் எப் எம் முலமாக தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஆவா குழுவோடு விக்னேஸ்வரனும் இணைந்து சதித்திட்டங்களை தீட்டி வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யாழில் மாணவர்கள் சுடப்பட்டதற்கு முதல் நாள் யாழில் பொலிஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமது குற்றங்களை மறைத்துக்கொள்ள குறித்த இளைஞர்கள் தப்பிச் செல்ல முற்பட்டிருக்கலாம் அதன் காரணமாகவே அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, தற்போது புதிதாக உருவாகியுள்ள ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை போன்றவை வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் எனவும் அவர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவாக செயற்படுபவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருக்கின்ற சிலர்.

அண்மையில் பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு உள்ளேயே பௌத்தர்களுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது போன்று சிங்களவர்களுக்கு எதிரான பல செயற்பாடுகள் அங்கிருந்தே நிறைவேற்றப்படுகின்றது.

பிரித்தானியா இவற்றிக்கு உடந்தையாக இருக்கின்றது அங்கிருந்து இலங்கையில் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்க சதி செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. பிரித்தானியா நாட்டோடு இணைந்தே விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டு வருகின்றார்கள்.

வடக்கில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இதற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை, விக்னேஸ்வரன் படை போன்ற அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.

தற்போது வடக்கு விடுதலைப்புலிகளுக்கு தலைமைத் தாங்கும் விக்கேஸ்வரன் சம்பந்தன் போன்றோர் கட்டுப்பாட்டில் இருக்கின்றது அதனை மீட்டெடுக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் நாட்டின் பாதுகாப்பு நிலையாக காணப்படுகின்றது எனக் கூறினாலும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக்கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது எனவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கினை அப்படியே விட்டுவிட முடியாது அதற்கு எதிராக அரசு முடிவெடுக்கின்றதோ இல்லையோ சிங்கள மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் வடக்கை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அந்த ஊடகம் மூலமாக செய்திகள் பரப்பப்பட்டு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அபாயகரமான நிலையை தோற்றுவித்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு அதற்கு பொய்யான காரணங்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் தென்னிலங்கை தமிழ் சிங்கள புத்திஜுவிகள் கருத்து தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான செய்திகள் மூலமாக நாட்டில் இனவாதம் தூண்டப்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

ஷரியா சட்டம் குறித்து விசாரணை : பல முஸ்லிம் பெண்கள் அதிருப்தி

முஸ்லிம்கள் பின்பற்றும் ஷரியா சட்டம் தொடர்பில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள், குறித்த சட்டத்திற்கு தடை விதிப்பதற்கே தவிர அதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அல்ல என, சுமார் 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் குற்றச்சாட்டு ஒன்றை  முன்வைத்துள்ளனர்.

ஷரியா சட்டம் தொடர்பில் பிரித்தானியாவில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தெரேசா மே, உட்துறை செயலாளராக இருந்த காலத்தில், குறித்த ஷரியா சட்டம் தொடர்பில் விசாரணைகள் மேற்ககொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்துடன், உள்நாட்டு அலுவல்கள் தெரிவுக் குழுவினாலும் குறித்த சட்டம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இங்கிலாந்து முஸ்லிம் பெண்கள் வலைப்பின்னல் குழுவின் தலைவி ஷைட்ஸா கோஹிர் (Shaista Gohir) இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “இந்த விசாரணைகள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு கிடைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

செல்போன் வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கைப்பேசி இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அறிதாகிவிட்டது. உங்களின்பெயர் என்ன என்பதைவிட உங்கள் கைப்பேசி எண் என்ன? என்பதை கேட்கதான் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் தற்போது, “உன் நண்பனை பற்றி சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்“ என்பதைப்போல, ஒருவரின் கைப்பேசியை வாங்கி ஆராய்ந்தாலே அவரின் குணாதிசியங்களை தெரிந்துகொள்ளலாம்.

ஆமாங்க வாட்ஸ் அப்புல என்ன போஸ்டிங் போட்றாரு, என்னமாதிரி மெசேஜ்களை பார்வேர்ட் பண்றாரு, என்னென்னமாதிரி போட்டோக்களையெல்லாம் எடுத்து காலரியில போட்டு வச்சிருக்காரு, மொபைல் கேமராவில் என்ன போட்டு எடுத்திருக்கிறாரு, கால் லாக்கை பார்க்கும்போது யாரு கூடவெல்லாம் அதிக தடவை பேசியிருக்காரு, அதிக நேரம் பேசியிருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாமே. இதுபோதாதாங்க ஒருத்தரைப்பத்தி தெரிஞ்சிக்க. எனவே மக்களே உஷார். உங்கள் கைப்பேசி கைமாறி சிலமணிநேரம் யாரிடமாவது இருந்தால் உங்கள் ஜாதகம் அவரிடம் ஜாக்கிரதை.

புதுசா செல்போன் வாங்க வேண்டுமான்னு கேட்டுட்டு ஏதேதோ பேசுவதுபோல் தோணுதா? மேற்படி விஷயங்கள் எல்லாம். தெளிவாக தெரிந்தால்தான் நமக்கு என்னமாதிரி கைப்பேசி தேவை என்பதை முடிவு செய்ய முடியும். ஒருநாளைக்கு நாம் எவ்வளவு நேரம் கைப்பேசியில் பேசுகின்றோம்? சமூக வளைதளங்களில் எத்தனைமணிநேரம் இருக்கின்றோம்? கைப்பேசி கேமராவை எவ்வளவு உபயோகிக்கிறோம்? இதெல்லாம் கைப்பேசி வாங்கும்போது யோசிக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

2GB RAM, குறைந்தபட்சம் 16GB நினைவகம், பத்துமணிநேரமாவது தாங்கும் பாட்டரி, 5 அங்குளமாவது திரை இருத்தல் வேண்டும். நவின மென்பொருள் இயங்குதளம் அதாங்க, லேட்டஸ் OS (operating system), எளிதில் கீறல் விழாத கண்ணாடி, முடிந்தால் மெட்டல் பாடி, இப்படி ஒரு கைப்பேசி, கையில் இருந்தால்தான் நாம்மால் வேண்டியபடி உபயோகிக்க முடியும். அதையும் தாண்டி, தொலைப்பேசி சேவை நிறுவனங் களின் சேவையில் 3G கனக்‌ஷனா,4நி கனக்‌ஷனா என்பதைவிட இப்போது 5G யை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.

மேற்படி செல் போன் சில பிராண்டுகளில் சுமார் எட்டாயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. முன்னணி பிராண்டுகளில் லட்சத்தை நெருங்கி செல்கிறது.

எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இது தான் காரணம் என உங்களுக்கு தெரியுமா?

தற்போதைக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அதிவேகமாக செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி விமானம் தான். உலகில் பெரியளவில் வர்த்தகம் செய்யும் போக்குவரத்து துறையும் விமான துறை தான்.

வாழ்நாளில் ஒருமுறையாவது கப்பலில் சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் விட, விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். ஆகாயத்தில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

சிறு வயதில் இருந்தே விமானத்தின் மீது பேரார்வமும், அது வானில் பறக்கும் போதெல்லாம் அன்னாந்து பார்த்து வியக்கும் குணமும் கொண்ட நாம், என்றாவது அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்திருக்க மாட்டோம்.

மங்காத நிறம்!
வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் நாள்பட மற்றும் அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும். அனால், வெள்ளை அப்படி மங்காது.

வெப்பம்!
மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

பார்க்கக்கூடிய நிலை!
வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

மறுவிற்பனை மதிப்பு!
விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

குத்தகை!
பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.

செயல்பாட்டு செலவு!
விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும்.

இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.

1000 ரூபாய் பணத்துக்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கொல்கத்தாவில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய மருத்துவமனை உதவியாளர்கள் மறுத்துவிட்டதால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் R G Kar என்ற மருத்துவ கல்லூரியில் ரேஷ்மா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சுகப்பிரசவம் நடந்த இந்த பெண்ணுக்கு மேற்கொண்டு சிகிச்சையளிக்கப்படவில்லை. இதனால் இப்பெண்ணின் கணவர் மருத்துவமனை உதவியாளரை அணுகியுள்ளார்.

ஆனால், உதவியாளரோ லஞ்சமாக ரூ.1000 கொடுத்தால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

ஆனால் அப்பெண்ணின் கணவரான லஷ்கரிடம் வெறும் 125 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும் தன்னிடம் இருந்த தொகையை கொண்டு வந்த உதவியாளரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், உதவியாளரோ தான் கேட்ட தொகை கிடைக்காத காரணத்தால் லஷ்கருடன் வாக்குவாதம் செய்ததோடு மட்டுமல்லாமல், நாங்கள் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளிக்கமாட்டோம் என மறுத்துள்ளார்.

இதனால் சிகிச்சை காரணமாகிய தாமத்தால் ரேஷ்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த இப்பெண்ணின் கணவர் உட்பட உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த பொலிசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளதால் அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

சந்தோஷம் மற்றும் செல்வம் நிலைக்க வீட்டில் வைத்திருக்கக் கூடாதவைகள்!

நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.

துளசி செடி
துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள்.

காலணி அலமாரி
காலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும்.

பாலை திறந்தே வைக்காதீர்கள்
வீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களையும் திறந்து வைக்காமல், மூடி வைத்திருக்கவும்.

குப்பையை குவித்து வைக்காதீர்கள்
குப்பையை மற்றும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் ஒரு மூலையில் குவித்து வைத்திருக்காதீர்கள். அவ்வப்போது அதனை வெளியேற்றிவிடுங்கள்.

காய்ந்த பூக்கள்
வீட்டின் பூஜை அறையில் கடவுள்களுக்கு படைத்த பூக்களை தினந்தோறும் மாற்றுங்கள். காய்ந்த மலர்களை வீட்டில் வைத்திருந்தால், அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவும்.

முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டினுள் முட்கள் நிறைந்த செடிகளை அழகுக்காக என்று கூட வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், வறுமை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அம்மாதிரியான செடிகளை உடனே அகற்றிவிடுங்கள்.

அரசமரம்
அரசமரத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அந்த மரம் தான் தீய சக்திகளின் வீடும் கூட. வீட்டில் இந்த அரச மரத்தை வளர்த்து வந்தால், அதனால் வீட்டில் உள்ளோர் எப்போதும் அச்சத்துடனும், மிகுந்த டென்சனோடும் இருக்கக்கூடும்.

இந்த நாய் படுத்திருக்கிற பெட்டின் விலை என்ன தெரியுமா?.. ஷாக் ஆகாமல் கேளுங்க!..

பணக்காரர்கள் ஒரு நாள் தங்களது நாய்க்கு செலவழிக்கும் தொகை தான் நம்மில் பலருக்கு மாதச் சம்பளம். இது நாம் அறிந்தது தான். அந்த வகையில் நமது வயிறை எரியச் செய்ய இன்னொரு செய்தி வந்துள்ளது.

அதாவது, பிரிட்டனில் உள்ள பிரபல கார்னிஸ் பெட் நிறுவனம் நாய்களுக்கு ஒரு பெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 895 பவுண்ட் ஸ்டெர்லிங்கில் தொடங்குகிறது.

அதிகபட்ச விலை 1500 பவுண்ட் ஸ்டெர்லிங். அதாவது சுமார் 78ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்த கணவன்… உயிரை எடுத்தான் கள்ளக் காதலன்…! செக்ஸ் மோகம்..!

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை திருபுவனம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜென்ட். முருகேசன் தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். என்ன கேட்டாலும் கடன் வாங்கியாவது அதை வாங்கிக் கொடுத்து விடுவார்.

மனைவி பிறந்தநாள் வரும்போதெல்லாம் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மொட்டை போட்டுக் கொள்வார்..! தினமும் எவ்வளவு நேரம் ஆனாலும் மனைவிக்கு பிடித்த பரோட்டா தலைக்கறி வாங்கி வந்து கொடுப்பார்.ஆனால் மனைவிக்கு செக்ஸ் மோகம் அதிகம்.

இந்த நிலையில் காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது.

பொலிசார் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இருவருக்கும் காதல் அரும்பியது..!அடிகடி காட்டுப் பகுதிக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர்.

இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இரத்தத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்!

ரத்தமானது சுத்தமாக இருந்தால் தான் மற்ற உடல் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பெற்று உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கற்றாழை, அன்னாசிப் பழம், எலுமிச்சை மற்றும் புதினா போன்ற பொருட்களைக் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டால், நமது உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் சுத்தமாகவும் வைக்கிறது.

தேவையான பொருட்கள்

  • அன்னாசி பழச்சாறு – 1 டம்ளர்
  • கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை – 1
  • புதினா – சிறிதளவு
  • தண்ணீர் – 1/2 கப்
செய்முறை

முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் அன்னாசிப் பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

 

ஜூஸின் நன்மைகள்
  • கற்றாழை அல்கலைன் தன்மை கொண்டதால், இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்து, செரிமான மண்டலத்தை சீராக்கி, குடலியக்கப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்து, சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.
  • கற்றாழை அன்னாசி பழம் இந்த ஜூஸில் கலந்து இருப்பதால், நமது உடம்பின் உட்காயங்களைக் குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

ஓய்வு பெறுகிறார் டோனி?

கடந்த 2014ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தப் போவதாக கூறி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஒய்வு பெற்றார்.

சமீபத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.

அடுத்ததாக அடுத்த ஆண்டு யூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் மினி உலககோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைக்கு டோனியே அணித்தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மினி உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணித்தலைவர் டோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என இவரது நெருங்கிய நண்பர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ம் ஆண்டுடன் டோனிக்கு 38 வயதாகிறது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட வயதைவிட உடற்தகுதி தான் அவசியம்.

எனவே அதற்கேற்ற உடல்தகுதியோடு தான் டோனி இருக்கிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடலுக்கு அயோடின் அவசரமாக தேவைப்படுவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

தைராய்டு சுரப்பியின் சாதாரண செயல்பாட்டிற்கு அயோடின் மிகவும் முக்கியமானது. அத்தகைய அயோடின் குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டால், அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சரி, அயோடின் குறைபாடு இருப்பதை எப்படி கண்டறிவது என்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருவருக்கு அயோடின் குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் போதிய அளவில் அயோடின் இல்லாவிட்டால், அதன் காரணமாக குடலியக்கம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்.

திடீர் உடல் பருமன்

உடலில் அயோடின் குறைபாடு இருக்கும் போது, மெட்டபாலிசம் பலவீனமாகி, உடலின் ஆற்றல் குறைந்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல் குறைந்து, உடல் பருமன் அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வு

அயோடின் உடலில் குறைவாக இருந்தால், அதனால் இரத்த கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

வறட்சியான சருமம் மற்றும் முக வீக்கம்

முகம் வீக்கத்துடனும் வறட்சியுடனும் இருந்து, தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அது அயோடின் குறைபாட்டிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மிகுதியான குளிர்ச்சி

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பலவீனமாக இருக்கும் போது, ஆற்றல் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக மற்றவர்கள் சௌகரியமாக உணரும் போது, மிகுந்து குளிர்ச்சியை உணர்ந்தால், அது அயோடின் குறைபாட்டை உணர்த்தும்.

மன இறுக்கம்

அயோடின் குறைபாடு மன இறுக்கம் மற்றும் இதரை மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் நரம்பியல் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது.

முறையற்ற மாதவிடாய் சுழற்சி

தைராய்டு ஹார்மோன் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும்.

சோர்வு

அயோடின் குறைவாக இருந்தால், அதனால் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக உடலின் ஆற்றல் அளவும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சோர்வை உணரக்கூடும்.

கழுத்து வீக்கம்

அயோடின் குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி வீங்கி, கழுத்துப் பகுதியை வீங்கச் செய்யும்.

பேஸ்புக் பாவனையாளர்களே இதை உடனடியாக செய்யுங்கள்!

தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகில் தற்போது நிறைய திருட்டு களவுகள் இடம் பெற்று வருகின்றது என்றே கூறலாம்.

இதை தொடர்ந்து இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம்.

ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இணையம் மூலம் பணம் திருடு போகாமல் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சைபர் கிரைம் பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பேஸ்புக் பக்கத்தில், உங்களது பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம். உங்களது செல்போன் எண், பிறந்த திகதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக் மூலம் பெயர், செல்போன் எண், பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகளை பெறும் இணைய திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு உங்களது பான் அட்டை எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன்மூலம், பான் அட்டை தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் அட்டையையும் பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி முதல் தகவல் அறிக்கை பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதனைக் கொண்டும், பான் அட்டை ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

அதனையடுத்து, உங்களது இணைய வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்களாம்.

அதேபோல், இந்த இணையம் வழி திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி விடுகின்றனர்.

அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வ சாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனராம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் இணைய கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாததும் இணையம் வழி திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.

இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த இணையம் வழியான திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தானாம்.

அரங்கத்தை அதிரச்செய்த கல்லூரி மாணவிகளின் நடனத்தை பாருங்கள் !

மீண்டும் அதிகரிக்கப்பட்ட சிகரட் விலைகள்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 ரூபா முதல் 10 ரூபா வரை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 5 ரூபாவினாலும் 42 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 10 ரூபாவினாலும் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அண்மையில் வரி அதிகரிப்பால் 7 ரூபாவினால் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் அமுலுக்கு வந்த 15 வீத வற் வரி அதிகரிப்பால் அதன் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்று முதல் வற் (வரி) அமுல்!

Render of a man with a magnifying glass looking to the text VAT

அதிகரிக்கப்பட்ட 15 வீத வற் வரி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொருட்கள் சேவை மீது இதுவரை அறவிடப்பட்ட 11 வீத பெறுமதி சேர் வரி (வற் ) அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் படி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய இந்த வரி அதிகரிப்பு இன்று முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளது.

இதனால் பல்வேறு பொருட்கள் , சேவை விலைகள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழர்களை அழிக்க இனவாதத்தை கிளப்ப முயலும் மகிந்த -ஆதாரம் பிடிபட்டது

ஆட்சிக்கு எதிரான அல்லது இனவாதத்தை தூண்டிவிடும் செய்திகள் அதி வேகமாக தென்னிலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கான செயற்பாடுகள் அன்றாடம் இடம் பெற்றுகொண்டே இருக்கின்றது.

ஆவா குழு என்பது விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது பின்னர் புதிதாக பிரபாகரன் படை என ஒன்று உருவாக்கப்பட்டது இவை அனைத்துமே நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயலும் சதியாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையில் அதனைத் தொடர்ந்து, மலேசியாவில் சிங்கள இளைஞர்கள் மீது வாள்வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி இரத்த வெள்ளத்தில் இளைஞர்கள் கிடக்கும் புகைப்படங்கள் சிலவற்றினையும் மஹிந்த ஆரதவாளர்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த செயல் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களை தூண்டிவிடும் செயலாகவே காணப்படுகின்றது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை எதுவும் தெரியாத நிலையில் பொய்யான தகவல்களை பரப்பும் போது அது இனவாதத்தினை உண்டுபண்ணும் செயலாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பொய்களை பரப்பி நாட்டில் குழப்பத்தில் ஏற்படுத்த முயலும் செயலில் மஹிந்த தரப்பின் ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பதிவினையும் மஹிந்த ஆதரவான ஒருவரே பரப்பிவருகின்றார்.

உண்மைகள் அற்ற அதே நேரம் உண்மைத்தன்மை அறியப்படாத போது சிங்களவர்கள் மீது தாக்குதல் என்ற கருத்து கூறப்படும் போது அது எந்தவகையிலும் வரவேற்கத்தக்கதல்ல. அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

ஏற்கனவே மலேசியாவில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் இவ்வாறானதொரு தகவலை பரப்புவதன் மூலம் நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதோடு தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்று திரளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இனவாதக் கருத்துகளை பரப்புகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆரம்பத்திலேயே இவை தடுக்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் தமிழர்கள் எதிராக திசைதிரும்பிவிடுவதோடு, கலவரம் ஏற்படும் அபாயமும் உண்டு எனவும் தென்னிலங்கை அவதானிகள் கூறிவருகின்றனர்.

நல்லிணக்க நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் இலங்கையில் பாரியளவு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வது நல்லதா?

மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள்.

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படும். இதற்கு விடை இதோ….

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் போது அதை எதிர்கொள்ளவும் உதவும். பிரசவம் வரை மன அழுத்தம் இல்லாமலிருப்பதற்கு யோகா பயன்படும்.

மேலும் சுகப்பிரசவம் ஏற்பட உதவும். கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும்.

இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.