மின்னஞ்சல் மோசடி: ரூ.14 கோடியை மொத்தமாக இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மின்னஞ்சல் மோசடிக்கு இரையான வளரும் தொழிலதிபர் ஒருவர் 14 கோடி ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பூனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்துடன் சில எந்திரங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார்.

அங்கிருந்து திரும்பி வந்த சில நாட்களில் இவருக்கு மிகவும் அவசரம் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட குறித்த பொருட்களுக்கான ரசீதும் வங்கி கணக்கும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு ரூ.12.18 கோடியை (இந்திய மதிப்பில்) அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இவர் அனுப்பி வைத்த பணம் வேறொரு வங்கி கணக்கில் மற்றப்பட்டதை அறிந்து அதற்கு எதிராக செயல்படுவதற்கு முன்னரே கானா நாட்டில் உள்ள ஒருவர் அந்த மொத்த பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்துள்ளது தெரிய வந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த குறித்த தொழிலதிபர் உடனடியாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் தொலைந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பே இல்லை எனவும் இந்த மோசடிக்கு ’email spoofing’ எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். மட்டுமின்றி இதுபோன்ற மோசடிகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இயக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, பூனேவின் பாவ்தான் பகுதியில் வளர்ந்து வரும் தொழிலதிபர் ஒருவர் தமது நிறுவனத்திற்காக சில இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஜேர்மனியில் இருக்கும் பிரபல நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்த இயந்திரங்களுக்கான தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனிடையே இவருக்கு குறித்த ஜேர்மன் நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.1.82 கோடியை (இந்திய மதிப்பில்) குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று அந்த மின்னஞ்சல் தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த மின்னஞ்சல் தகவல்கள் ஏற்கனவே இவர் ஒப்பந்தம் போட்டிருந்த நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தையும் குறிப்பிட்டிருந்ததால், உடனடியாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு குறித்த தொகையை அனுப்பியுள்ளார்.

ஆனால் சில நாட்களிலையே தாம் போலி மின்னஞ்சலால் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொண்டார். மட்டுமின்றி குறித்த ஜேர்மன் நிறுவனமும் பணம் எதுவும் தாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று மறுத்துள்ளது.

இதனையடுத்து தமக்கு வந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் மீண்டும் சோதனையிட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாம் ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்தின் அதே பெயரில் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து தமக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து தமக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் புகார் தெரிவித்ததை அடுத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதில், இவரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணமானது நைஜீரியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் வழியாக போலந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்!

சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் தகவல்கள் மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளது. அத் தகவலை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி அனுப்பி வைத்தது.

இத்தகவல் 15 மாதங்களுக்கு பிறகு தான் பூமியை வந்தடைந்துள்ளது. ஆனால் இந்த தகவல் ஒரே நாளில் வந்து சேர்ந்து இருக்க வேண்டும்.

விண்வெளியில் 8 ஆயிரம் மைல் தொலைவில் அப்படியே தடைபட்டு கடந்த வாரம் தான் வந்து சேர்ந்தது.

இது குறித்து புளூட்டோ கிரகத்தின் ஆய்வு திட்ட மேலாளர் ஆலிஸ்பவ்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘300 கோடி மைல்களுக்கு அப்பால் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் உள்ள டிரான்ஸ்மீட்டர்களில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இதை சரிசெய்ய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

நான் இதற்கு அடிமை! 12வது குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்!

குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது பெண் குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 5 ஆண் குழந்தையும் உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் வயது 1 முதல் 23 வரை உள்ளது. இவர்கள் அனைவரும் புதிய வரவான 12வது குழந்தையை கொண்டாடி வருகின்றனர்.

 

16 வயதில் தனது முதல் குழந்தையை பெற்ற மேண்டி, தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இது முடிவில்லாத தொடர் கதையாக சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து மேண்டி கூறுகையில், ஆமாம், எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். பெரிய குடும்பமாக இருப்பதையும் நான் விரும்புவேன்.

 

உங்கள் குழந்தையை முதலில் தொடும் போது அது அபூர்வமான தருணமாக இருக்கும். 9 மாதத்தில் அந்த குழந்தை வயிற்றில் எட்டி உதைக்கும் அனைத்தும் எனக்கு பிடித்த விடயம்.

இது எல்லாம் எளிதான காரியம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் வித்தியசமானது. நாங்கள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

12 குழந்தைகளுடன் போதும் என்று மேண்டி கூறினாலும், அவர் கணவரின் இலக்கு 20 குழந்தையாம்.22r

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம்!

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் இலங்கை விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.

நவம்பர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குறித்தும், ஆராயப்படவுள்ளது. வரும் 15, 16ஆம் திகதிகளில், இந்த நாட்டு நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.

இந்தக் கூட்டத்தின் முடிவில், நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர நிபுணர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கியதுமான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவில் இடம்பெற்றுள்ள 10 சுததந்திர நிபுணர்கள், இந்தக் கூட்டத்தில் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர்: கத்தையாக பணத்தை இழந்த மூதாட்டி

சுவிட்சர்லாந்தில் போலி மருத்துவர் ஒருவரது பேச்சை நம்பி மூதாட்டி ஒருவர் கத்தை கத்தையாக பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வருபவர் 85 வயதான நவோமி. இவருக்கு கடுமையான வலியுடன் கூடிய மூட்டு வாதம் இருந்து வந்துள்ளது.

ஒரு நாள் இவர் தமது மின்னஞ்சல்களை சோதனையிட்டு வந்தபோது குறித்த நோய்க்கான மருத்துவர் ஒருவரது முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் மின்னஞ்சல் ஒன்று இவரது கண்ணுக்கு தென்பட்டது.

முதாட்டி நவோமி உடனடியாக தொலைப்பேசியில் குறித்த மருத்துவரை தொடர்புகொண்டு தமது நோய் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் அந்த சிறப்பு மருத்துவர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவர் எடுத்து வந்த அரிய வகை தைலத்தால் மூதாட்டியின் கால்கள், கை மற்றும் மூட்டு பகுதிகளில் விரிவாக மசாஜ் செய்துள்ளார். இதற்கு கட்டணமாக மூதாட்டியிடம் இருந்து 200 பிராங்க் பெற்று சென்றுள்ளார்.

ஒரு நாள் கடந்து மீண்டும் அடுத்த நாள் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த அந்த மருத்துவர் கட்டணமாக 600 பிராங்க் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

நாளுக்கு நாள் கட்டணம் அதிகரிப்பதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து விசாரித்தபோது, அந்த மருத்துவர் மூதாட்டிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில், உங்களை முழுமையாக குணப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு என பேசியுள்ளார்.

மூதாட்டிக்கு தனது நோய் குணமானால் போதும் என்ற ஒரே எண்ணமே இருந்தது. அதனால் குறித்த மருத்துவரின் கட்டண அதிகரிப்பு குறித்து அலட்டாமல் இருந்தார்.

இந்த நிலையில் 5-வது முறையாக மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அந்த மருத்துவர் கட்டணமாக 2000 பிராங்க் வேண்டும் என்று கேட்டு பெற்றுள்ளார். தொடர்ந்து வந்த நாளில் அது 6000 பிராங்க் என்றானது.

இதனிடையே ஒரு நாள் பணம் எடுக்கும் பொருட்டு வங்கியில் சென்ற நவோமிக்கு அங்குள்ள காசாளரின் எச்சரிக்கை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அது நாள் வரை அந்த சிறப்பு மருத்துவருக்கு 8900 பிராங்க் கட்டணமாக அளித்திருப்பதையும் ஆனால் தமது மூட்டு வாதம் அதே நிலையில் இருப்பதையும் உணர்ந்தார்.

உடனடியாக தமது உறவினர் ஒருவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நவோமி நடந்தவற்றை விலாவாரியாக ஒப்புவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு புகார் தெரிவித்த உறவினர்கள், பொலிஸாரின் திட்டப்படி குறித்த மருத்துவரை மீண்டும் ஒரு முறை வந்து சிகிச்சை அளிக்க மூதாட்டி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அந்த மருத்துவரை பொலிஸார் பிடிகூடினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் போலி மருத்துவர் என்பதும், அவர் பயன்படுத்திய தைலம் உள்ளிட்டவை அவரே உருவாக்கியவை எனவும் தெரிய வந்தது.

இன்று ஜனாதிபதியை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கீரிமலையில் அமைக்கப்பட்ட 100 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அவர் சந்திக்கவுள்ளதாகவும், அவர்களின் வீடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் ஊகங்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, மாணவர்களின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோருவதற்கு ஜனாதிபதி சந்திக்க மாணவர்களும் அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் மாணவர்களின் இந்தக் கோரிக்கைக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில், நேற்றுக்காலை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் சுவாமிநாதன், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் பேச்சுக்களை நடத்த சென்றிருந்தார்.

அமைச்சர் சுவாமிநாதனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி கொழும்பில் மாணவர்கள் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதையெடுத்து யாழ். பல்கலைக்கழக நிர்வாக முடக்கப் போராட்டத்தை மாணவர்கள் நேற்று பிற்பகல் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி பொல்லால் அடித்து மண்டையை திறந்த மனைவி -இலங்கையில் சம்பவம் !!!!

கண்டி கட்டுகஸ்தொட்டைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், கொடூரமான முறையில் கணவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, பொல்லால் தலையில் தாக்கி குறித்த பெண் தமது கணவரை கொலை செய்துள்ளார்.

அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரை கொலை செய்த குறித்த பெண், அதன் பின்னர் கட்டுகஸ்தொட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலையுண்டவர் 28 வயதானவர் எனவும், கொலை செய்த பெண் 23 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவர் மதுபானம் மற்றும் கஞ்சா, போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் எந்த நாளும் தம்மை தாக்குவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் நான்கு வயதான தமது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த கணவர் முயற்சித்தார் எனவும், சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் பெற்ற மகளை பாலியல் ரீதியாக துன்பறுத்த முயற்சித்தார் எனவும் அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணவர் படுக்கைக்கு சென்றதன்பின்னர் தேங்காய் எண்ணெயை நன்றாக சூடாக்கி முகத்தில் ஊற்றியதாகவும் பின்னர், பொல்லு ஒன்றினால் பத்து தடவைகள் தலையில் தாக்கியதாகவும் பெண் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர் சுவிஸில் மரணம்! இவரது உடல் உறுப்புக்கள் தானம்

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு (25.10) இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

சுவிட்ஷலாந்தில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாகி தமிழர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு (25.10) இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

29 வயது மதிக்கத்தக்க அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பபட்ட போதிலும், பின்னர் வைத்தியசாலையில் மறுநாள் மதியம் அவர் மரணமாகி உள்ளார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது..

உயிரிழந்த நபர் இலங்கையில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவர் ஆவார்.

இவரது குடும்பம் சுவிஸ் அரசினால் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்விட உரிமை வழங்கப்பட்ட நிலையில் சுவிசில் வசித்து வருகின்றனர்.

உயிரிழந்த கார்த்திக் பாலேந்திரன் இவரின் பெற்றோருக்கு ஒரே ஒரு ஆண் மகன், ஏனையோர் பெண் பிள்ளைகள்.

மேலும் உயிரிழந்த இவரின் உடல் உறுப்புக்களை, இவரது பெற்றோர் சுவிசில் தானம் செய்துள்ளதாக தவல்கள் அறியப்படுகின்றன.unnamed-1 unnamed-2 unnamed-3-620x826 unnamed-620x826

தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக காலையில் தினமும் எழுந்தவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை செய்து வருவார்கள்.

ஒருசிலர் காலையில் படுக்கையில் இருக்கும் போதே பெட்காபி குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீரை குடிப்பார்கள்.

இந்த இரண்டு பழக்கங்களிலும், நாம் தினமும் காலையில் எழுந்து 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பது தான் நம் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

எனவே காலையில் எழுந்தவுடன் 60 நிமிடங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

  • காலையில் எழுந்ததும் 300 மி.லி அளவு நீர் குடித்தால், ஒன்றரை மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை 24% வரை அதிகம் அதிகரிக்கச் செய்கிறது.
  • தண்ணீர் குடிப்பதால், நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கழுவுகளை போக்கி, நமது உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
  • தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.
  • காலையில் நீர் அதிகமாக குடிப்பதால், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
  • தினமும் நாம் காலையில் சீரான அளவில் தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடலின் சருமத்தில் அதிக சுருக்கம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தாமல் மிருதுவான சருமத்தை தருகிறது.
  • தினமும் நமது உடம்பிற்கு தேவையான அளவு நீர் குடிப்பதால், குடல் இயக்க செயல்பாட்டை சீராக்கி. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது நாம் செய்ய வேண்டியவை

குழந்தைகளுடன் பயணம் செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் இதோ

குழந்தை பிறந்து 2 வாரங்களாவது இருக்க வேண்டும்.

குழந்தையுடன் விமான நிலையத்தில் பயணம் செய்ய சில குறிப்பீடுகள் உள்ளன.

 

ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும், எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்ததில் பிரச்சனை, அதாவது குறைப்பிரசவம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் விமானத்தில் பயணம் செய்யும் போது விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் பயணிக்கும் போது குழந்தையின் காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் குழந்தை மிகவும் சந்தோஷமாக பயணிக்கும்.

ஆனால் குழந்தைக்கு தேவையான மருத்து, ஆடை, நாப்கின்கன் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

காரில் பயணம் செய்வதென்றால் பேபி கார் ஷீட் பயன்படுத்துவது நல்லது.

குழந்தையை சூரிய கதிர் படும்படி வைக்க வேண்டாம்.

சூரிய கதிர்கள் பட்டால் சருமம், கண்ணிற்கு பிரச்சனை வருவதோடு, உடல் வறட்சியை உண்டாக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.

கொள்ளையிட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம் – யாழில் சம்பவம்

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது குறித்த நபருடன் வந்த மேலும் 3 பேர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர் யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.f566

அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் செக்ஸ் ரோபோக்கள்: விலை எவ்வளவு தெரியுமா?

மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய தொழிநுட்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் ரோபோட்டுகளின் தயாரிப்பும் முக்கியமான ஒன்று. ஆனால் இவை தற்போது மனிதனின் பாலியல் தேவையையும் முழுமையாக்க வந்துவிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோக்கள் உலகம் முழுவதும் ஆண், பெண் என இருபாலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த செக்ஸ் ரோபோக்களை கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தீவிரமாக தயாரித்து வருகிறது.

மனித உடல்களைப் போல் அப்படியே தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரோபோக்களில் உறவுக்கு உதவும் பல வித சென்சாரகளும் பொருத்தப்பட்டுள்ளன.

RealDoll என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவிருப்பதாகவும், இதன் விலை ரூ.97,5591 எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.625-0-560-350-160-300-053-800-668-160-90-10

புகார் அளித்த பெண்ணின் கணவரை இரண்டாவது திருமணம் செய்த பெண் பொலிஸ்!

தமிழக காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் கணவரை பெண் பொலிஸ் இரண்டாவது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வக்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லதா காவல் நிலையத்தில் ராதிகா என்ற பெண் பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ராதிகா வழக்கு குறித்து சிங்கப்பூரில் உள்ள செல்வக்குமாரிடம் போனில் பேச நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி நாடு திரும்பிய செல்வக்குமார், 28ம் திகதி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இதை அறிந்த லதா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தலைமறைவாக உள்ள ராதிகாவை தேடிவருகின்றனர். ராதிகா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்வு..!

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள் காரணமாக இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

இணைய டேட்டா பக்கஜ்களுக்கான கட்டணங்ளுக்காக அறவீடு செய்யப்பட்டு வந்த 10 வீத தொலைதொடர்பு வரி தற்போது 17 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வற் வரிச் சட்டத்தின் அடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொலைபேசி கட்டணங்களுக்காக 27 வீத வரியே அறவீடு செய்யபட்டு வந்தது. எனினும் தற்போது வற் வரி அதிகரிப்பினால் மொத்த வரி சுமார் 50 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் நியாயமான ஒர் தீர்வு வழங்கும் வகையில் கட்டணங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் யோசனை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு சம்மந்தமாக இலங்கையின் முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும் 011 532 9501க்கு தெரிவிக்கலாம்.

மேலும் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்கள் இது சம்மந்தமாக அந்தந்த பொலிசாரிடமும் புகார் செய்யலாம் . மேலும் காணாமல் போன கடவுசீட்டு மீண்டும் கிடைத்தால் அதை உபயோகபடுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் இது குறித்து கொடுத்த அறிக்கையின் நகலை இலங்கை தூதரகத்தில் கொடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அதை பற்றி தகவல் கிடைத்தவுடன் இலங்கையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அவர்கள் தகவல் தருவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வேறு நபரின் கடவுச்சீட்டு நம் கையில் கிடைத்தால் உடனே குடிவரவு திணைக்களத்துக்கு நாம் அதை பற்றி தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி இப்போது யாரின் பிடியில்….? என் குடும்பமே எனக்கு எதிரிகள்..! கலைஞர் கண்ணீர்..!!

கலைஞர்…!? இப்போது படுத்த படுக்கையில். தளபதியோ கடமையே கண்ணாக கட்சிப் பணி. அதுவும் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் கட்சிப் பணி.

இவ்வளவு நோயிலும் கலைஞர் தளபதிக்கு பொறுப்பை வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்பதற்கு மொத்தமாக கலைஞரை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.

ஆனால் உள்ளூர பார்த்தால் அத்தனை உள்ளடி வேலைகளுக்கும் காரணம் கனிமொழி தான் என்கிறது அந்த புலனாய்வு வார இதழ். அவரை இயக்குவது தென் மண்டல அண்ணாச்சி என்கிறார்கள் ..!

பண உதவிகள், படைபலம் அரசியல் சப்போர்ட் அனைத்தும் அந்த அண்ணாச்சிதான் செய்கிறார்.

இது தெரிந்த கலைஞர் பேராசிரியர் அன்பழகனிடம் புலம்பி கண்ணீர் வடித்துள்ளார். தளபதியின் நிலையில் யார் இருந்தாலும் இந்நேரம் கட்சியை கைப்பற்றி இருப்பார்கள்.

ஆனால் தளபதி பொறுமை காக்கிறார். என்னால் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை..என் குடும்பமே  எனக்கு எதிரி என்றாராம்..! பேராசிரியர் அன்பழகனால் அவரைத் தேற்ற முடியவில்லை..!

வடக்கில் இடம்பெற்ற போராட்டங்கள் நியாயமானவை: யாழ். வந்த ஜனாதிபதி மைத்திரி ஏற்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்.மக்கள் மிக அமைதியாக இருந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். மக்கள் மிக நிதானமாக நடந்து கொண்டதாகவும்இ இதேபோன்ற சம்பவம் தெற்கில் நடைபெற்றிருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் வலி.வடக்கில் வீடற்ற மக்களுக்காக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் இன்றைய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் உடனடியாகவே பொலிஸ்மா அதிபரையும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளையும் கேட்டிருந்தேன்.

அதன் பின்னர் உடனடியாகவே விசேட விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணம் அனுப்பி அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் எதிர்காலத்திலும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என நம்புகிறேன்.

இதேபோல் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் இங்கே சில ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.

அவை புதுமையான விடயங்கள் அல்ல. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதன் பின்னர் என்ன மனோ நிலையில் இருந்திருப்பார்கள்.

அவர்களுடைய மனோநிலை என்ன? என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மாணவர்களுடைய போராட்டங்கள்இ ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

அதேபோல் இவ்வாறான சம்பவம் ஒன்று தெற்கில் நடைபெற்றிருந்தால் அதன் பின்னான நிலைமை மிக மோசமாகியிருக்கும். ஆனால் யாழ்.மக்கள் மிக பொறுமையாக நடந்து கொண்டார்கள்.

அதற்காக அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோல் இவ்வாறான விடயங்களில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஊடகங்க ள் சரியான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

மக்கள் மத்தயில் அமைதியை உருவாக்குவதையே ஊடகங்கள் தங்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.

மாறாக மக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்குவதாக இருக்க கூடாது. ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீ்டுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய ராசி பலன் 01-11-2016 | Raasi Palan

  • மேஷம்

    மேஷம்: காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஇறுக் கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக் கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: காலை 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவுக் கிட்டும். தடைகள் உடைபடும் நாள்.