கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி பொல்லால் அடித்து மண்டையை திறந்த மனைவி -இலங்கையில் சம்பவம் !!!!

கண்டி கட்டுகஸ்தொட்டைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், கொடூரமான முறையில் கணவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, பொல்லால் தலையில் தாக்கி குறித்த பெண் தமது கணவரை கொலை செய்துள்ளார்.

அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரை கொலை செய்த குறித்த பெண், அதன் பின்னர் கட்டுகஸ்தொட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலையுண்டவர் 28 வயதானவர் எனவும், கொலை செய்த பெண் 23 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவர் மதுபானம் மற்றும் கஞ்சா, போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் எந்த நாளும் தம்மை தாக்குவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் நான்கு வயதான தமது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த கணவர் முயற்சித்தார் எனவும், சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் பெற்ற மகளை பாலியல் ரீதியாக துன்பறுத்த முயற்சித்தார் எனவும் அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணவர் படுக்கைக்கு சென்றதன்பின்னர் தேங்காய் எண்ணெயை நன்றாக சூடாக்கி முகத்தில் ஊற்றியதாகவும் பின்னர், பொல்லு ஒன்றினால் பத்து தடவைகள் தலையில் தாக்கியதாகவும் பெண் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.