கனிமொழி இப்போது யாரின் பிடியில்….? என் குடும்பமே எனக்கு எதிரிகள்..! கலைஞர் கண்ணீர்..!!

கலைஞர்…!? இப்போது படுத்த படுக்கையில். தளபதியோ கடமையே கண்ணாக கட்சிப் பணி. அதுவும் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் கட்சிப் பணி.

இவ்வளவு நோயிலும் கலைஞர் தளபதிக்கு பொறுப்பை வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்பதற்கு மொத்தமாக கலைஞரை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.

ஆனால் உள்ளூர பார்த்தால் அத்தனை உள்ளடி வேலைகளுக்கும் காரணம் கனிமொழி தான் என்கிறது அந்த புலனாய்வு வார இதழ். அவரை இயக்குவது தென் மண்டல அண்ணாச்சி என்கிறார்கள் ..!

பண உதவிகள், படைபலம் அரசியல் சப்போர்ட் அனைத்தும் அந்த அண்ணாச்சிதான் செய்கிறார்.

இது தெரிந்த கலைஞர் பேராசிரியர் அன்பழகனிடம் புலம்பி கண்ணீர் வடித்துள்ளார். தளபதியின் நிலையில் யார் இருந்தாலும் இந்நேரம் கட்சியை கைப்பற்றி இருப்பார்கள்.

ஆனால் தளபதி பொறுமை காக்கிறார். என்னால் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை..என் குடும்பமே  எனக்கு எதிரி என்றாராம்..! பேராசிரியர் அன்பழகனால் அவரைத் தேற்ற முடியவில்லை..!