முடிவுக்கு வரப்போகும் சன்டீவியின் பிரபல சீரியல்!

எதிர்நீச்சல்
கோலங்கள் என்ற மெகா ஹிட் சீரியலை கொடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

கடந்த 2022ம் ஆண்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது கதையில் குணசேகரனால் அடக்கப்பட்ட பெண்கள் இப்போது துணிந்து தங்களது சொந்த காலில் நிற்க போராடி ஜெயித்துள்ளார்கள். இப்போது அவரவர் தொழிலில் எப்படி முன்னேறலாம் என்ற போராட்டத்தில் உள்ளார்கள்.

ஷாக்கிங் தகவல்
சமூகத்தில் பல பெண்கள் ஆணாதிக்கத்தால் அனுபவிக்கும் கஷ்டத்தை பேசும் தொடராக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம்.

வரும் ஜுன் மாதம் இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

முடிவுக்கு வருகிறது என்ற செய்தியே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங்காக தான் உள்ளது.

நான்கு முறை திருமணம் செய்து கொண்ட நடிகை அஞ்சலி!

அஞ்சலி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அஞ்சலியின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வந்துள்ளது. நடிகை ஜெய்யுடன் அவர் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

பிறகு அவரை பிரிந்துவிட்டதாகவும், தெலுங்கு திரையுலகில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் ஒன்று பரவியது. இதற்கு நடிகை அஞ்சலி ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமண சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை பேச்சு
இதில் “எனக்கு இதுவரை நான்கு முறை சமூக வலைத்தளங்களில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக முன்பு வதந்திகள் வரும்போது எனது வீட்டில் ரொம்பவே கவலைப்பட்டார்கள். ஆனால், இப்பொது அதற்கெல்லாம் அவர்கள் பழகிவிட்டனர்.

இந்த வதந்திகள் எல்லாம் வந்த பிறகு, உண்மையாகவே ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டு எனது வீட்டார் முன் போய் நின்றால்கூட அவர்கள் அதனை நம்ப மாட்டார்கள். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சினிமாவில் தான் இப்போது பிஸி” என அஞ்சலி கூறியுள்ளார்.

விஜய் டீவியின் பிரபல நிகழ்ச்சிக்கும் செல்லும் மோகன்!

நடிகர் மோகன்
விஜய் டிவியில் நிறைய சூப்பர் ஹிட் ஷோக்கள் உள்ளது, அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.

தற்போது சூப்பர் சிங்கரின் 10வது சீசன் வெற்றிகரமாக புதிய இயக்குனர், தயாரிப்பாளர் என ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா அவர்களின் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடந்தது.

அவர் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியி நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த வாரம்
தற்போது இந்த வாரத்திற்கான புதிய புரொமோ வந்துள்ளது.

அதில் சிறப்பு விருந்தினராக ஒரு ஸ்பெஷல் நடிகர் வந்துள்ளார். 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிய நடிகர் மைக் மோகன் தான் வந்துள்ளார்.

அவரை கண்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் மிகவும் கொண்டாடியுள்ளார்கள். இதோ அவர் இடம்பெற்ற நிகழ்ச்சியின் புரொமோ,

 

பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா?

பகத் பாசில்
மலையாள நடிகரான பகத் பாசில், தற்போது இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் தனக்கு ADHD என்ற அரியவை நோய் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ADHD நோய் பற்றி மருத்துவர்கள் சொல்லும் தகவல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.. Attention-deficit/Hyperactivity disorder இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரொம்ப ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில இருந்து சரியா வேலை செய்ய முடியாது. அமைதியாக ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது மேலும் மறதி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நோயில் இருந்து குணமடைய தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

நடிகர் கூல் சுரேஷுக்கு கார் வாங்கி கொடுத்த பிரபலம்!

நடிகர் கூல் சுரேஷ் வாரம்தோறும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதை பார்த்துவிட்டு வித்தியாசமாக செய்தியாளர்களிடம் விமர்சனம் கூறி பாப்புலர் ஆனவர்.

மேடைகளில் எதாவது செய்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய அவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்த ஷோவுக்கு பிறகு மீண்டும் பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

கார் கிப்ட் கொடுத்த பிரபலம்
இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் RR தமிழ்செல்வன் ஒரு கார் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.

பிரபல நடிகராக இருக்கும் கூல் சுரேஷ் ஆட்டோவில் வருவதாக சொன்னதும் அவர் தன்னிடம் இருந்த காரை கொடுத்துவிட்டாராம்.

அதற்காக கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டு நன்றி கூறி இருக்கிறார்.

குக் வித் கோமாளி இர்பானுக்கு கருணை காட்டாதீங்க

பிரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா பெண்ணா என வெளிநாட்டில் செக் செய்து அந்த தகவலை youtubeல் வெளியிட்டார் இர்பான்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழா நடத்துவது சகஜம் என்றாலும், இந்தியாவில் இது சட்டப்படி குற்றம். அதனால் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட இர்பான் அந்த வீடியோவையும் நீக்கி இருந்தார்.

கருணை காட்டாதீங்க
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது இர்பானுக்கு கருணை காட்டாமல் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

விஜயுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

அமரன்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படம் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது . ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் அமரன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே மாதத்தில் விஜய்யின் கோட் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய அதர்வா

நடிகர் முரளி
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி.

பின் பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டிவீரன், ஈட்டி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரியஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களில் நடிப்பதை தாண்டி கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

கடைசியாக நடிகர் அதர்வா நடித்திருக்கும் DNA படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

முரளி பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் முரளி. நிறைய சிறந்த படங்களில் நடித்துள்ள முரளி அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் முரளியின் 60வது பிறந்தநாளை (மே 19) அவரது குடும்பம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Atharvaaholic🖤 (@atharvaaholic)

ரூ. 250 கோடியை தூக்கி எறிந்த சமந்தா

சமந்தா
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் நடைபெற்றது.

நான்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களுடைய பிரிவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

விவாகரத்துக்கு பின்
விவாகரத்து சமயத்தில் நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து நடிகை சமந்தாவிற்கு ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும், நடிகை சமந்தா அதனை வாங்க மறுத்ததாகவும் செய்தி ஒன்று உலா வந்தது.

இதனை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தபின் பார்த்து வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டால் என்னிடம் எதுவுமே இல்லை என அவர்களிடம் காட்டுவதற்காக காத்திருந்தேன் என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மிர்னா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

நடிகை மிர்னா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

ஜெயிலர் படத்தில் அவர் மருமகளாக நடித்து பாப்புலர் ஆன நிலையில் அடுத்து ஜெயிலர் 2லும் அவர் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அழகிய உடையில் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.


GOAT படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் GOAT படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமின்றி ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ஷூட்டிங் நடைபெற்றது. மேலும் VFX பணிகளுக்காக விஜய் அமெரிக்காவுக்கு சென்று வந்தார்.

மூன்று விஜய்
நடிகர் விஜய் இந்த படத்தில் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது, போஸ்டரிலும் அப்படி தான் இருந்தது.

ஆனால் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக மூன்றாவதாக ஒரு விஜய் ரோல் படத்தில் இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை வரலக்ஷ்மி திருமணம் எங்கு நடக்க போகிறது தெரியுமா?

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு Nicholai Sachdev என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

பல வருட காதலுக்கு பிறகு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் நடைபெற்றது. வரலட்சுமி காதலர் உடன் வெளியிட்ட புகைப்படங்களும் வைரல் ஆனது.

திருமணம் எங்கே?
தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரண்டு குடும்பங்களும் செய்து வருகிறார்களாம். வரும் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதற்கு முன்பு சென்னை நட்சத்திர ஹோட்டலில் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. திருமணம் முடிந்து சென்னை திரும்பிய பிறகு வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நட்சத்திர ஹோட்டலில் நடத்த இருக்கின்றனர் என்றும் தகவல் வந்திருக்கிறது.

சன் டிவி புது சீரியல்

சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக கொண்டு வருகின்றனர். இருப்பினும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது சன் டிவியில் மருமகள் என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது.

மருமகள்
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்த கேப்ரியல்லா தான் தற்போது சன் டிவிக்கு தாவி இருக்கிறார்.

மருமகள் சீரியலில் கேபி மற்றும் கண்ணான கண்ணே சீரியல் புகழ் நடிகர் ராகுல் ரவி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ.

 

இன்றைய ராசிபலன்கள் 28.05.2024

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்

ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியா பாரம் வழக்கம்போல் இருக்கும். இன்று சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற் படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரி டம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். வியா பாரத்தில் பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளை முறியடித்து விற்ப னையை பெருக்குவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வீண் செலவு கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

திருமணத்திற்கு பின் உள்ளாடை விளம்பரத்தில் நடித்த டாப்ஸி

நடிகை டாப்ஸி
ஆடுகளம் படம் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு பெரிய ரீச் கொடுத்த படம்.

இவர்களை தாண்டி ஒரு பிரபலத்திற்கு ஹிட் படமாக அமைந்தது என்றால் அது நடிகை டாப்ஸிக்கு தான்.

இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்தடுத்து வந்தான் வென்றான், வை ராஜா வை, காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கிலும் படங்கள் நடித்துவந்தவர் இப்போது முழுவதும் ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி படத்தில் முக்கி வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது தொடர்ந்து 3 பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

விளம்பரம்

மிகவும் பிரபலமான நாயகியாக இருக்கும் டாப்ஸி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் நடிகை டாப்ஸி ஒரு உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார், அதற்காக பல கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த விளம்பர வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

சுசித்ராவுக்கு எதிராக கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

சுசித்ரா
தமிழ் சினிமாவில் பல ஹிட் கொடுத்து முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி பகிர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.

வழக்கு..
இந்நிலையில் கார்த்திக், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுசித்ரா பேசியதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடுத்து இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் பற்றி கருத்துக்களை தெரிவிக்க இடைகலை தடைவிதித்து இருக்கிறது.

சாய் பல்லவி படத்திற்கு வந்த சிக்கல்!

பிரபாஸ் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ராமாயணம் கதையை மையமாக கொண்டு ஆதிபுருஷ் எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ராமாயணம்
இதை தொடர்ந்து தற்போது நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை வைத்து மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் லீக்கானது. மேலும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கே ஜி எப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான யாஷ் நடிக்கிறார்.

தடைபட்ட படப்பிடிப்பு
இந்த நிலையில், ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு நின்றுள்ளது. காப்புரிமை பிரச்சனை காரணமாக தான் இப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணம் திரைப்படத்திற்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும், அதை மீறி யாரும் படத்தை எடுக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் மது மன்டோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமாயணம் படக்குழுவிற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாராம். இதனால் தான் தற்போது ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

இந்த ஒரு காரணத்திற்காக திர்ஷாவிற்கு ஆணாக மாற ஆசை!

திரிஷா
லியோ படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் திரிஷா பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைப் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

பேட்டி
இந்நிலையில் நடிகை திரிஷா பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் , “எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு, அது என்னவென்றால் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும் என்று”.

“ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சிக்கணும் ஆசை இருக்கிறது. இது தொடர்பாக நான் என்னுடைய அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்று திரிஷா தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ்வுக்கு இவ்வளவு பெரிய மகளா!

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் தற்போது சின்னத்திரை நடிகராக கலக்கி வருகிறார்.

சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அவர். மேலும் லட்சுமி என்ற சீரியலில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

மகள் போட்டோ
நடிகர் சஞ்சீவுக்கு லயா என்கிற மகள் இருக்கிறார். அவருக்கு தற்போது 18 வயது ஆகி இருக்கிறது.

சமீபத்தில் லயா சஞ்சீவ் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் அப்பா சஞ்சீவ்.

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

ராமராஜன் – நளினி மகள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா!

ராமராஜன்
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகன் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளனர்.

ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். மேலும் தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மனமுடைந்து பேசிய ராமராஜன்
இந்த நிலையில், நடிகர் ராமராஜன் தனது மகள் குறித்து சோகமான விஷயம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதில் ” என் மகனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். என் பேரன் என்னை எப்பொழுதுமே மாடு தாத்தா என்றுதான் அழைப்பார். வெளிநாட்டில் அவர்கள் செட்டிலாகிவிட்டதால் வீடியோ காலில்தான் நான் பேசுவேன். ஆனால், என் மகளுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தம். அவருக்கு குழந்தை பிறந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என பேசியுள்ளார்.