முதல் நாள் ரத்னம் திரைப்படம் செய்த வசூல்

ரத்னம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்
இதுவரை ஹரி – விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார் என கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விஜய்யின் மாமனார், மாமியார்
விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் சூழ், விஜய் – சங்கீதாவின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளதை அறிவோம்.

இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

கில்லி படத்தை தொடர்ந்துரீ ரிலீசுக்கு தயராகும் விஜயின் மற்றுமோர் படம்!

கில்லி படம்
முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி.

தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ரிலீஸ் ஆன நேரத்திலேயே முதல் ரூ. 50 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை பெற்றது.

மற்றொரு படம்
விஜய்யின் கில்லி படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் நிலையில் இப்போது தளபதி ரசிகர்களுக்காக இன்னொரு சூப்பர் சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது.

கில்லி படம் வெளியாகி இதுவரை ரூ. 17 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் விஜய்யின் இன்னொரு படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

வேறு எந்த படமும் விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த குஷி படம் தான் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமுத்திரக்கனி
தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல் நடிப்பிலும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தையே பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவித்து வருகின்றன. கடைசியாக இவர் தெலுங்கில் நடித்திருந்த ஹனுமன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், திரையுலகில் முக்கிய நபராக விளங்கி வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமுத்திரக்கனி ஒரு படத்திற்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ஸ்கார்பியோ – ரூ. 21 லட்சம், Audi A4 – ரூ. 45 முதல் ரூ. 53 லட்சம், BMW X3 – ரூ. 68 முதல் ரூ. 72 லட்சம் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். இவருடைய வீட்டின் மதிப்பு சில கோடிகள் வரும் என்கின்றனர். மேலும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னம் திரை விமர்சனம்

இயக்குனர் ஹரி கமர்ஷியல் படங்களின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கும், அந்த வகையில் விஷாலுடன் தாமிரபரணி, பூஜை தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தார ரத்னம் மூலம், பார்ப்போம்.

கதைக்களம்
ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.

அப்போது ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை பார்க்க, அவர் இங்கு நீட் எக்ஸாக் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.

இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ஹரி படத்திற்கு என்றே அளவு எடுத்த செஞ்ச பீஸ் போல் இருக்கிறார் விஷால். ஆறடி உயரம், 50 பேரை தூக்கி போட்டு அடித்தால் கூட நம்பும் லாஜிக் என படம் முழுவதும் ஆக்‌ஷன் அதகளம் செய்துள்ளார்.

ஆனால், மார்க் ஆண்டனி பாதிப்பு இன்னமுமே உள்ளது, இரண்டிலுமே அம்மாவை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம் விஷாலுக்கு , என்ன அதில் காமெடி, இதில் சீரிஸ், அது ஒரு கட்டத்தில் விஷால் சீரிஸாக பேசினாலும் மார்க் ஆண்டனி போல தெரிகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் விஷால் அம்மா போலவே உள்ளதாள் அவரை காப்பாற்ற போராடும் கதை என்றாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.

வெறும் ஹீரோயின் ஆக மட்டும் கத்தி எடுக்காமல் விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்மந்தம் என ஒவ்வொன்றாக காட்டிய விதம், ஹரி இன்றும் கமர்ஷியலில் புதிதாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது.

இடைவேளை சேஸிங் காட்சி பரபரப்பையும், டெக்னிக்கலாக சூப்பராகவும் உள்ளது. மற்றப்படி வில்லனை ஊர் விட்டு ஊர் போய் கொல்லும் ஹரியின் டெம்ப்ளேட் காட்சிகள் அவர் படத்திலே பார்த்த நியாபகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே ஊரில் தான் விஷால் அம்மா குடும்பம் உள்ளது ப்ரியா பவானி குடும்பமும் உள்ளது, அவர்களுக்கு தெரியாத உருவ ஒற்றுமை விஷாலுக்கு மட்டுமே தெரிந்தது கொஞ்சம் லாஜிக் பார்த்துயிருக்கலாம் ஹரி சார்.

ஹரி படம் என்ன விறுவிறுப்பாக சென்றாலும், தொய்வு ஏற்படும் போது காமெடி பாடல்கள் துணை நிற்கும், இதில் ஹெவி மிஸ்ஸிங், வேலூர் என்பதால் வெயில் கொஞ்சம் ஓவர் தான், ஆனால், எதோ பாலைவானம் போல் காட்டியது ஏன் சார்.

க்ளாப்ஸ்

ஆக்‌ஷன் காட்சிகள்.

இடைவேளை சிங்கிள் ஷாட் சேஸிங்.

செண்டிமெண்ட் காட்சிகள்

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன காட்சிகள்.

மொத்தத்தில் ஹரி-விஷால் கூட்டணியில் குடும்பங்கள் ரசிக்கும் படமாக வந்துள்ளது ரத்னம். ஆனால், இது எந்த அளவிற்கு இளைஞர்களை கவரும் என தெரியவில்லை.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சேரனின் மூத்த மகள்!

சேரன்
கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.

இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

திருமணம்!
இந்நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கு, சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில், சீமான், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார், சமுத்திரக்கனி, சிம்புதேவன், பாண்டிராஜ் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதோ புகைப்படங்கள்..

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா

மன்மதன்
சிம்பு நடிப்பில் இயக்குனர் முருகன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருப்பார். மேலும் ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை சிம்பு ரசிகர்களுக்கு மனதை கவர்ந்த திரைப்படங்களில் மன்மதன் படமும் ஒன்று.

நடிகர் பாலகிருஷ்ணா
இப்படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த காட்சி நெட்டிசன்களால் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மன்மதன் படத்தில் நடித்த நடிகரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

சமந்தாவுடன் விவாகரத்து.. புது காதலி உடன் சுற்றும் நாக சைதன்யா?

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். நாக சைதன்யா அதன் பின் பிரபல நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

புது காதலி உடன்..
இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் சோபிதா காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதே போல நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாகவும் மீண்டும் இணையத்தில் கிசுகிசு வர தொடங்கி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)

 

 

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும். அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம்
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், அவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், தற்போது திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா அல்லது எப்போதும் போல் வதந்தியா என்று.

ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

கில்லி
விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றியமைத்து மேஜிக் செய்தார் இயக்குனர் தரணி. அதுவே இப்படம் இன்று வரை நின்றுபேசக்கூட அளவிற்கு காரணமாக இருக்கிறது.

வசூல் சாதனை
20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. இதனை திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை படைத்த கில்லி படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ-ரிலீஸில் கில்லி திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. புதிய படங்களுக்கு இடையான வசூலை ரீ-ரிலீஸ் ஆன திரைப்படம் செய்து வருகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

சைக்கிளில் வந்தது பற்றி விஷால் கொடுத்த விளக்கம்

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி அரசியல்கள் களமிறங்கி விட்டார். அதனை தொடர்ந்து விரைவில் தானும் அரசியலில் நுழைவேன் என அறிவித்தார் விஷால்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஷால் சைக்கிளில் வாக்களிக்க வந்தார். முந்தைய தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், அதை விஷால் அப்படியே காபி அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

விஷால் பதில்
இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘என்னிடம் வேறு வண்டி இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்றதை விற்றுவிட்டேன்.

இப்போது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பெண்க்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.

என்னிடம் காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் என கூறி இருக்கிறார் விஷால்.

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது.

படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

டைட்டில் – கூலி
இந்நிலையில் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. “கூலி” என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்களில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளங்கு போட்டிருப்பது போல காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

விஜய் நிராகரித்து விக்ரம் நடித்து பெரிய ஹிட் ஆன படம்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து வருகிறார். அவரது கெரியரில் பல்வேறு பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன. அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன.

தூள்
விக்ரம் நடித்த தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி முதலில் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் அவர் அதற்கு ஓகே சொல்லாத நிலையில் அடுத்து தான் விக்ரமை நடிக்க வைத்து இருக்கிறார்.

தூள் படம் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

கழிவறை சுத்தம் செய்த நடிகர் அப்பாஸ்

அப்பாஸ்
90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார் அப்பாஸ்.

கழிவறை சுத்தம் செய்தேன்
இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசினாராம்.

இதில் அவர் “சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்” என கூறினார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சன்டீவியில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் சீரியல்!

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் நிச்சயம் சன் டிவி தொடர்கள் தான் நான்கு இடங்களை பிடித்து வருகின்றன.

அந்த அளவுக்கு சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த வாரம் முடியும் சீரியல்
சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.

இந்த தொடரின் கிளைமாக்ஸ் வரும் ஞாயிறு (ஏப்ரல் 28, 2024) அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இலங்கை மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்

வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும். இந்த விண்கல் மழை லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேசமயம் “இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு . இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இது இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும்.

வவவுனியா வைத்தியசாலையில் சோகம் குளியலறையில் வழுக்கி விழுந்த கர்ப்பிணி மரணம்!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் , அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில்

தோல்வியில் முடிந்த முயற்சி
இந்நிலையில் அவர் இன்று திங்கட்கிழமை (22) விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்றநிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 நாட்களில் ஆடுஜீவிதம் படம் செய்துள்ள வசூல்..

ஆடுஜீவிதம்
சமீபகாலாமாக மலையாள திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை ப்ரேமலு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அந்த வரிசையில் தற்போது ஆடுஜீவிதம் திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

வசூல் சாதனை
பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது 25 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிவருகிறது ஆடுஜீவிதம்.

இந்த நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 25 நாட்களாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாண கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும்போது மரணமடைந்த நடிகை சௌந்தர்யா!

நடிகை சௌந்தர்யா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னுமணி தான். ஆம், கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார்.

திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

சொத்து
உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் பல கோடி சொத்துக்கள் இருந்துள்ளதாம். இதுகுறித்து அவர் உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை சௌந்தர்யாவின் தாய் மற்றும் கணவரும் இருவரும் மறுத்துவிட்டனர். 31 வயதிலேயே அவர் உயில் எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் இருந்து ரூ. 100 கோடி சொத்து சம்மந்தமான உயில் குறித்து மீண்டும் பேச்சு துவங்கியுள்ளது. சௌந்தர்யா எழுதிய உயிலை மறைத்து அவருடைய தாய் மற்றும் கணவர் இருவரும் அந்த சொத்துக்களை பாதி பாதியாக பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது உலா வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.