வடகொரிய அதிபர் மனைவி மாயம்!

வடகொரிய அதிபர் மனைவி 7 மாதங்களாக மாயமானார்.

வடகொரிய அதிபராக கிம் ஜாங்-யங் இருந்து வருகிறார். 28 வயதான இவர் சர்வாதிகாரி ஆக திகழ்கிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரீ கோல்-ஜீ என்ற பெண்ணை தனது மனைவி என அறிவித்தார்.

அவ்வப்போது அவர் வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இறுதியாக கடந்த மார்ச் 28-ந் தேதி தலைநகர் பியாங்யாங்கில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் தோன்றினார்.

அதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக அவர் வெளியில் வரவில்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் வடகொரியா மற்றும் தென் கொரியா பகுதிகளில் பல விதமான யூகங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவர் கர்ப்பமாக இருக்கலாம். அதனால் வெளியே வராமல் ஓய்வு எடுத்து வரலாம் என்று ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். அதிகார போட்டி காரணமாக கிம் ஜாங்-யங் தனது இளைய தங்கையை சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேற்றினார். அவருடன் அவரது மனைவி ரி கோல்-ஜிவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

90 வயதிலும் அசத்தலான குதிரை சவாரி! ராணி எலிசபெத்…

தன்னுடயை 90 வயதிலும் உற்சாகமாக குதிரை சவாரி செய்வதை பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத் வழக்கமாக கொண்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய நான்கு வயதிலிருந்தே குதிரை சவாரி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பழக்கம் இன்று அவரின் 90 வயதிலும் தொய்வில்லாமல் தொடர்கிறது.

இங்கிலாந்தில் உள்ள Datchet என்னும் இடத்தில் தான் ஒரு குதிரையிலும், குதிரைகளை பராமரிக்கும் மேலாண்மை அதிகாரி Terry Pendry இன்னொரு குதிரையிலும் சாவகாசமாக நேற்று பயணம் செய்தார்கள்.

ராணி எலிசபெத்துக்கு குதிரை சவாரி செய்யும் போது தலை கவசம் அணியும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்ததில்லை.

முன்பு அதிக நேரம் குதிரை சவாரி செய்வதற்காக தன் நேரத்தை செலவிட்டு வந்த எலிசபெத் சில வருடங்களுக்கு முன்னர் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் இப்போதெல்லாம் குறைந்த நேரத்தையே இதற்கு செலவிடுகிறார்.

இந்த வயதிலும் குதிரை சவாரி செய்வதை பற்றி ராணி இரண்டாம் எலிசெபெத் கூறுகையில், நான் குதிரை சவாரி செய்யும் பழக்கத்தை என்றும் விட்டதில்லை.

ஆனாலும் இப்போதெல்லாம் வானிலை நன்றாக இருக்கும் போது மட்டுமே இதை செய்கிறேன்.

மோசமான குளிர் வானிலையில் குதிரை சவாரி மேற்கொண்டால் ஜலதோஷம், சளி பிரச்சனைகள் எனக்கு ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கௌதமி பிரிவிற்கு இவர்தான் காரணமா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசனும் கௌதமியும் திருமணம் செய்யாமல் கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே வாணிகணபதி, சரிகா-வை விவாகரத்து செய்த நிலையில், கௌதமியுடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

தற்போது கௌதமி கமலுடனான உறவு பிரேக் ஆனதாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் சபாஷ் நாயுடு படத்திலிருந்து சில கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது இப்பிரச்னைக்கு ஸ்ருதி தான் காரணமோ என கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

ஆனால் கமலின் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் கௌதமி தன் மகளின் வாழ்க்கைக்காக இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அவரே தெரிவித்துள்ளார்.

 

சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே? ஆதாரத்தை வெளியிட்டது கூகுல்!

சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி அமைப்பது தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மரே நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பகுதியே தனியாருக்கு சொந்தமான நிலம் என Google வரைப்பட தேடல் மூலம் ஆதாரம் வெளி வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த திட்டத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் தொடர்புப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட பசில் இந்த திட்டத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சவூதி முதலீட்டாளர் ஒருவரின் இந்த திட்டத்துக்கும், பைஸர் முஸ்தப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

சிவனொளிபாத மலை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் திட்டங்களால் அந்த சுற்றாடல் பகுதிக்கு ஏற்படவுள்ள அழுத்தங்கள் மற்றும் பாதிப்பு தொடர்பில் துறைசார் அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உலங்கு வானூர்தி ஒன்று தரை இறங்கியதிலிருந்து இந்த மலை யாருக்கு சொந்தம் என்ற மதப்பிரச்சினையும் எழுந்து வருகின்றது.

இங்குள்ள மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான 82 ஏக்கர் நிலப்பரப்பை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விற்று இதில் ஒரு ஹோட்டல் அமைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றது.

அண்மையில் இந்த மலை முஸ்லிம் மக்களுக்கே சொந்தம், சிங்கள மக்கள் இதில் உரிமை கோர முடியாது என்பதற்காக ஒரு காணொளியும் இணையங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

அஜித் நடித்த ‘வேதாளம்’ கடந்த வருட தீபாவளியையொட்டி நவம்பவர் 10-ஆம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆஃபீசில் பெரும் வசூல் குவித்த இப்படம் வெளியாகி வருகிற 10ஆம் தேதி ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக தல ரசிகர்களுக்காக வேதாளம் படத்தை இம்மாதம் 10-ஆம் தேதி சென்னை ரோகிணி திரையரங்களில் திரையிடப்படுகிறது. இது தல ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்! இந்த தீபாவளியை முன்னிட்டி ரஜினிகாந்தின், ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’ முதலான படங்கள் சில தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்த வரிசையில் இப்போது அஜித்தின் ‘வேதாளம்’ படமும் மறு வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. சிவா இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ரவி கருணாநாயக்கவின் வரவேற்புடன் கொழும்பில் அதிசொகுசு கப்பல்

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் ரவி கருணாநாயக்கவின் வரவேற்புடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது நேற்று(31) கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.

அரசாங்கப் பிரதிநிதிகளும் இக்கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த சொகுசு கப்பலில் பயணிகள் சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 3000 இற்கும் அதிகமான பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்ககூடியதாயிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் உயிரைப் பறித்த புறா – மட்டு திக்கோடையில் சம்பவம்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று (01.11.2016) காலை 7.00 மணியளவில் இச் சிறுவன் தன் வீட்டின் மலசல கூடத்திற்கு மேல் பகுதியில் தான் வளர்ந்து வந்த ஒரு சோடி புறா கூட்டினுள் புறாவிற்கு தீன் வைப்பதற்காக ஏறமுயன்ற வேளையில் வழுக்கி  விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சிறுவன் வீட்டில் தன் பொழுது போக்குக்காக வளர்ந்த இரு புறாக்களுக்கு உணவு வைக்க முயன்ற வேளையில் உயிரிழந்துள்ளமை பரிதாபகரமான சம்பவமாகும்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த இச் சிறுவன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஒரேய ஒரு ஆண்பிள்ளை என்பதுடன் இவருடைய தந்தை  கூலித்தொழிலில் ஈடுபட்டு  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வழுக்கி விழுந்த சிறுவன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் வழியில் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனுடைய சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

மீண்டும் யுத்தம் ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது! – கீரிமலையில் ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை நேற்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இறுதியில் மோசமான யுத்தமாக மாறி நாட்டுக்கு மிகப்பெரும் அழிவைக் கொண்டுவந்தன. நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்றார்.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் அல்லது தெற்கில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது எல்லோருடையவும் பொறுப்பாகும் என்றும் கூறினார். இதேவேளை, “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பொறுப்பாகும்” என்றும் குறிப்பிட்டார்.

எந்த இடங்களில் மகாலட்சுமி தங்குவாள்

1. சிறந்த ஆற்றல் உடையவர்கள்,
2. துணிவுடையவர்கள்,
3. கோபம் கொள்ளாதவர்கள்,
4. தெய்வ பக்தி உடையவர்கள்,
5. செய் நன்றி மறவாத வர்கள்,
6. ஐம்புலனை அடக்குபவர்கள்,
7. சத்துவ குணத்தை உடையவர்கள்,
8. தர்ம வழியில் நடப்பவர்கள்,
9. பிறர் மனதை அறிபவர்கள்,
10. காலத்தை வீணாக்காதவர்கள்.
11. பசுக்களைப் பராமரிப்பவர்கள்,
12. கற்றவர்களை மதிப்பவர்கள்,
13. எவற்றையும் தூய்மையாக வைத்திருப்ப வர்கள்,
14. பொறுமை கொண்டவர்கள்,
15. ஊக்கத்தோடு உழைப்பவர்கள்,
16. இயற்கையை வளர்ப்பவர்கள்,
17. சத்தியம் தவறாதவர்கள்,
18. சொன்னபடி நடப்பவர்கள்,
19. நேர்மையோடு வாணிகம் செய்பவர்கள்,
20. அன்னதானம் செய்பவர்கள்.
21. கற்றோர் வழி நடப்பவர்கள்,
22. விருந்தினரை உபசரிப்பவர்கள்,
23. உள்ளன்போடு நடப்பவர்கள்,
24. பெற்றோரை மதிப்பவர்கள்,
25. கற்பித்த குருவைத் தொழுபவர்கள்,
26. சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்.
27. அகந்தை அற்றவர்கள்,
28. பிறர் கஷ்டத்தை துயர் களைபவர்கள்,
29. வெள்ளை உடை உடுத்துபவர்கள்,
30. பொறாமை கொள்ளாதவர்கள்,
31. பகைமை பாராட்டாதவர்கள்,
32. துணிவாகச் செயல்படுபவர்கள்,
33.பொது நலம் விரும்புகிறவர்கள்,
34. ஊனமுற்றோர்க்கு உதவுபவர் கள்,
35. நித்திய கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள்,
36. பேராசை கொள்ளாதவர்கள்,
37. அழகிய தோற்றம் கொண்டவர்கள்,
38. கற்பு நெறி காப்பவர்கள்,
39. பிரதிபலனை எதிர்பார்க்காதவர்கள்,
40. பிறன்மனை நோக்காதவர்கள்.
41. அதிகாலை எழுபவர்கள்,
42. நல்ல நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள்,
43. இனிமையாகப் பேசுபவர்கள்,
44. புன்னகை முகம் கொண்டவர்கள்,
45. சங்குகள்,
46. மாவிலைகள்,
47. யானைகள்,
48. ஸ்வத்திகா சின்னம்,
49. கண்ணாடி.
50. குங்குமம், மஞ்சள்.
51. சந்தனம், பஞ்சகவ்யம்,
52.வெற்றிலை,
53. கோலம்,
54. திருமண சூர்ணம்,
55. கும்பம், தீபச்சுடர் ஒளி, கற்பூர ஜோதி,
56. வாழைமரம்,
57. நீதிநெறி வழுவாதவர்கள்,
58. வீரம் உடையவர்கள்,
59. விவேகம் உடையவர்கள்.

என்ன நடிப்படா சாமி: அசத்தல் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க!

ஏ.சி.யிலேயே இருந்தால் நிரந்தர நோயாளி

வெப்பத்தின் பிடியிலேயே சிக்கி தகிக்கும் வாழ்க்கை என இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையாகி விட்டது. வெயிலில் இருந்து வீடு திரும்பியவுடன் நாம் செய்யும் முதல் வேலை மின்விசிறியினை போடுவதுதான். இந்த மிக அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்வது மிகக்கடினம். இந்த மின்விசிறி என்ன நன்மை செய்கின்றது?

வெப்பத்தால் மனிதன் அடையும் எரிச்சலை (மன எரிச்சலையும்தான்) தணிக்கிறது.

* வெப்பத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சோர்வடையும். அவ்வாறு சோர்வடையாது காப்பது மின்விறிதான்.
* உடலில் ஏற்படும் வெப்ப தடிப்புகளின் வீரியத்தினை தணிக்கிறது.
* வெப்பத்தினால் உடலில் நீர்வற்றும். உப்பு குறையும். இது ஏற்படாவண்ணம் ஒருவரை மின்விசிறி குளிர வைக்கின்றது.
* வெப்பம், ரத்தக் கொதிப்பினை கூட்டும். நினைத்துப் பாருங்கள். மின்விசிறி இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று.
* சமையலறையில் அங்குள்ள உஷ்ணத்தினை நீக்குவதற்கென்றே பிரத்யேக விசிறிகள் அனைத்து வீடுகளிலும் இருக்கும்.
* மின்விசிறி இருந்தால் ஈ, பூச்சிகள் இறந்து விடும்.
* செலவு குறைந்தது.

மேற்கூறிய அனைத்தும் அனைவரும் அறிந்ததே. நாம் அறிய வேண்டியது எல்லாம் மின் விசிறிகள் அதிக தூசி, தூசி, பூச்சிகளின் இருப்பிடமாக இருக்கின்றது. அதன் இறக்கைகளில் படியும் இவை மின் விசிறி இயக்கும்பொழுது அறை முழுவதும் பரவுகின்றது. படுக்கை, தரைவிரிப்பு இவைகளில் ஒட்டிக்கொள்ளும். இவையெல்லாம் ஒரு மில்லி மீட்டரில்  அளவுதான் இருக்கும். இவைகளுக்கு வீட்டினுள் அதாவது அறையினுள் இருப்பது பிடிக்கும். அது அலுவலக அறையாகவும் இருக்கலாம்.

அவை மனித உடலில் இருந்து உதிரும் சரும துகள்களில் வாழ்பவை. ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 1.5 கி அளவு சரும துகள்களை உதிர்க்கின்றன. இது ஒரு மில்லியன் தூசு பூச்சிகளுக்கு உணவாகி விடும். இந்த தூசி பூச்சிகளும் சரி, இவற்றின் கழிவுகளும் மனிதனுக்கு அலர்ஜியினை உண்டாக்கும்.

தூசி பூச்சியின் அலர்ஜி அறிகுறிகள் :

* தும்முதல்
* மூக்கில் நீர் வடிதல்
* அரிக்கும், சிவந்த கண்கள்
* மூக்கடைப்பு
* தொண்டையில் நீர் கசிவு
* இருமல்

மற்றும் ஆஸ்துமா இருப்பவர்களை இவை அதிகம் பாதிப்பதால் அவர்களுக்கு

* மூச்சு விடுவதில் சிரமம்
* இறுகிய நெஞ்சு (எ) வலி
* விசில் போன்ற சத்தத்துடன் மூச்சு
* இப்பாதிப்புகளால் தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.இப்பாதிப்புகளை தவிர்க்க

* உங்கள் படுக்கை விரிப்புகள், போர்வைகளை வாரம் ஒருமுறை சுடுநீரில் சோப்பில் ஊற வைத்து தொவையுங்கள்.
* ஸ்கிரீன், தரைவிரிப்பு, சோபா விரிப்புகளை முடிந்தவரை எளிதில் சுத்தம் செய்யக்கூடிய வகையில் வாங்குங்கள்.
* அன்றாடம் அறையினை சுத்தம் செய்யுங்கள்.
* வேக்குவம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.

பிறகு செய்கிறேன் என்ற பெயரில் பெரிய தரைவிரிப்புகள், அடைத்த அலங்காரப் பொருட்கள் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

• விளக்கு, மின் விசிறி இவைகளை மூக்கின் மாஸ்க் கொண்டு மூடி சுத்தம் செய்யுங்கள். வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்.

• மின் விசிறி சத்தம் வராத அளவு சரி செய்யுங்கள்.

வசதி மிக்கவர்கள் மட்டுமே ஏசி உபயோகிக்கும் காலம் என்பது மாறி வெப்பத்தின் பாதிப்பு காரணமாக நடுத்தர மக்களும் ஏசி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அலுவலகங்கள், பள்ளிகளில் கூட ஏசி உபயோகிப்பது அவசியமாகிவிட்டது. அநேகருக்கு ஏசி இல்லாவிடில் தூங்கவே முடியாது.

• ஏசி சுத்தமான குளிர்ந்த காற்றினைத் தருகின்றது
• மனிதனின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகின்றது
• உடலிலிருந்து நீர், தாது உப்புக்கள் இழக்காமல் இருக்கின்றது
• வெப்பத்தினால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றது
• மூளையின் செயல் திறன் சிறப்பாய் இருக்கின்றது
• வெப்ப தாக்குதலால் வலி போன்ற தாக்குதல்கள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.

ஆனால் இந்த ஏசியினால் ஏற்படும் இடர்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஏசியில் இருப்பவர்கள்

• எப்பொழுதும் ஏதாவது ஒரு நோயுடனும், சோர்வுடனும் இருப்பர். அடிக்கடி சளி, ஜுரம் மற்றும் இது போன்ற பாதிப்புகளில் இருப்பர். இது நாளடைவில் அவர்களை நிரந்தர நோயாளி ஆக்கி விடுகின்றன.

• தொடர்ந்து ஏசியில் இருப்பவர்களின் உடலில் ஈரப்பசை இழப்பதினால் அவர்கள் சருமம் மிகவும் வறண்டு இருக்கும். அதிக மாஸ்ட்ரைஸர் உபயோகிக்க வேண்டி இருக்கும். இருப்பினும் சரும வறட்சி பல சரும பிரச்சனைகளை கொடுத்து விடும்.

• தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ஏசியில் இருப்பவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம், மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, உடல் வலி போன்றவை ஏற்படுத்தும்.

• இப்படி பழகி விட்டவர்களால் சிறிதளவு வெப்பம் கூட தாங்க முடியாது. இத்தகையோர் சற்று வெப்பமான சூழ்நிலையில் கூட மிக ஆபத்தான அளவு உடல் நிலை பாதிக்கப்படுவர்.

• தொடர் கார் ஏசி பல காற்றில் பரவும் நோய்கள், அதிக ஜுரம், நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

• ரூம் ஏசியோ, கார் ஏசியோ இதனுள்ளேயே இருப்பவர்கள் வயது கூடிய தோற்றம் பெறுவர்.

• அதிக அலர்ஜி, காதுகளில் கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றது.

• உங்கள் அறையில் இருக்கும் காற்றும் சுத்தமானதாக இருக்க வேண்டும். புகை, மது இவற்றினால் அறையில் உள்ள காற்று மாசுபடும்.

எனவே முடிந்த வரை மின் விசிறி பயன்படுத்துங்கள். அவை குளிர்ந்த காற்றினை சுற்ற விடும்.அதிக மின்சார செலவும் இராது. இரவில் குளிர்ந்து இருக்கும் பொழுது ஜன்னல்களை திறந்து வையுங்கள்.

பகலில் கூட தேவையில்லாத விளக்குகளை எரிய விடாதீர்கள். இவைகளும் வெப்பத்தினையே அளிக்கும். மரங்களை வெட்டாதீர்கள். மாறாக வருடம் ஒரு நாள் நடுங்கள்.

சுகாதாரமான காற்று ஆக்சிஜன் நிறைந்தது என்பது மனித வாழ்க்கைக்கு மிக அவசியமானது* உடலில் உள்ள செல்கள் இந்த ஆக்சிஜனை பெற்று ஒவ்வொரு உறுப்பின் செயலினையும் சீராக ஆற்றுகின்றது* உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் நான்கு முக்கிய விஷயங்கள்

தேவை ஆக்ஸிஜன், நீர், சத்து, செல்லின் கழிவுப்பொருள் வெளியேற்றம். மூன்று நிமிட ஆக்ஸிஜன் இல்லாவிட்டாலே ஒவ்வொரு செல்லும் இறந்து விடும்.

* வீட்டுக்குள்ளேயே அடைபட்டு சுவாசம் நிகழ்வதில் ஆரோக்கிய காற்று கிடைக்காது. வீட்டுக்குள்ளேயே உள் சுவாசம், வெளி சுவாசம் என நிகழும் பொழுது தேவையான ஆக்ஸிஜன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

* சுகாதார காற்று, நல்ல ஆக்ஸிஜனே மூளையை சிறக்க செயல்பட வைக்கும்.

* ஆகவேத்தான் காலை, மாலை இரு நேரமும் திறந்த வெளியில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* இது உங்கள் இருதய துடிப்பு, இரத்த கொதிப்பு இரண்டினையும் சீராக வைக்கும், மூளையில் சுரக்கும் செரடோனின் உங்கள் மன நலத்தினை நன்கு வைக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* வெள்ளை இரத்த அணுக்களுக்கு ஆரோக்கியமான காற்று அவசியம்.

நீங்கள் ஏசி அறைக்குள்ளேயே காலத்தினை கழித்தால் மேற்கூறிய நல்ல பலன்கள் வெகுவாய் குறையும், மேலும் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், தலைவலி, சோர்வு, எரிச்சல், படபடப்பு, மன உளைச்சல், அடிக்கடி ஜூரம், சளி, நுரையீரல்கள் நோய்கள் என வெகுவாய் பாதிக்கப்படுவீர்கள்.

* சூரிய ஒளி சிறிது நேரமாவது உடலில் படுவது அவசியம்.

* தோட்ட முறை இடங்களில் உலாவுங்கள்.

* முடிந்தால் அறைக்கு வெளியே வெளிச்சம் காலை, மாலை சூரிய ஒளி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* முடிந்தால் இரவில் ஜன்னல்களைத் திறந்து இயற்கை காற்றினை பெறுங்கள். சுத்தமான காற்று ஓரளவு நன்மைகளைச் செய்யும் என்பதனை அறியுங்கள்.

தமிழ் நடிகைகளின் தற்போதைய உண்மையான வயது!

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க

40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.

இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். எவை யென பார்க்கலாம்.

பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 களில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள். புரதம்- மீன், நட்ஸ், பீன்ஸ் ஜிங்க் – இறைச்சி, பீன்ஸ், இரும்பு – கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். மீன், பயோடின்- முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, செலினியம் – முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ்,

இந்த தாத்தாவின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா?

மீண்டும் இணையும் நயன்தாரா விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இதே வெற்றி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, ஆகியோர் நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார்.

அவர் நயன்தாராவுக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை-வசனம் எழுதுகிறார்.

கேமியோ பிலிம்ஸ் இண்டியா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திர்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

ஈழத்து மக்களின் ருசியான ஒடியல் கூல் செய்வது எப்படி?

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒடியல் கூழ் உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகும்.

இந்த ஒடியல் கூழை அசைவ உணவாகவும் சைவ உணவாகவும் தயாரிக்கலாம்.

ஒடியல் கூழை தயாரிக்க தேவையான பொருட்கள்
  • ஒடியல் மாவு – ஒரு கப்
  • பயிற்றங்காய் (காராமணி) 100 கிராம்
  • மரவள்ளி கிழங்கு 100 கிராம்
  • பலா (கொட்டை) விதை – 100 கிராம்
  • காய்ந்த மிளாகாய் – 20
  • மிளகு ஒரு தேனீர் கரண்டி அளவு
  • மஞ்சள் ஒரு துண்டு
  • பெரிய வெள்ளைபூண்டு 5 பற்கள்
  • புளி போதுமான அளவு
  • புழுங்கல் அரிசி ஒரு பிடி
  • சிறிதாக வெட்டப்பட்ட தேங்காய் அரை கப்
  • முருங்கை இலை 10 நெட்டு
  • உப்பு போதுமான அளவு
சைவ கூழ் தயாரிக்க தேவையான பொருட்கள்
  • கத்தரிக்காய் 100 கிராம்
  • கடலை 100 கிராம்
  • பெரிய வாழைக்காய் ஒன்று
  • அசைவ கூழ் தயாரிக்க
  • இறால் அல்லது நெத்தலி மீன் 500 கிராம்
  • இரண்டு நண்டு
  • பாரை மீன் தலை ஒன்று
  • சிறிய கருவாடு 50 கிராம்
செய்முறை

காய்ந்த மிளகாய், மிளவு, வெள்ளை பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு மிருவதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மீன், கருவாடு ஆகியவற்றை கழுவி துப்பரவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

மரவள்ளி கிழங்கு, பயிற்றங்காய், பலா விதை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கழுவி வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் புளியை இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

ஒடியல் மாவை பாத்திரத்தில் இட்டு அளவுக்கு தண்ணீர் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு துணியில் இட்டு பிழிந்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு அரைத்தை கூட்டை சேர்த், ஒரு கப் புளி கரைசலை இட்டு அளவாக தண்ணீர் கரைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் அளவான அரிசி வேக கூடிய பானையில் அரைவாசி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பின்னர், கழுவி வைத்துள்ள காய்கறி, முருங்கை இலை, கழுவிய அரிசி ஆகியவற்றை போட்டு அவிய விட வேண்டும்.

இவை முக்கால் பதமாக அவிந்த பின்னர், மீன்,நண்டு, கருவாடு ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விட வேண்டும்.

காய்கறி நன்றாக அவிந்த பின்னர், ஒடியல் மா கரைசலை ஊற்றி நன்றாக அகப்பையால் கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெட்டி வைத்த தேங்காய் கலந்து இறக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஒடியல் கூல் சூடாக இருக்கும்போது குடித்தால் நன்றாக இருக்கும்.

ஒடியல் கூழை சைவமாக தயாரிக்க வேண்டுமாயின் மீன், நண்டு, கருவாடு ஆகியவற்றை தவிர்த்து விட்டு, கடலை, கத்தரிக்காய், வெட்டிய வாழைக்காய், ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து அவித்து ஒடியல் கூல் செய்ய வேண்டும்.

STR என்ற மூன்றெழுத்து என்ன சொல்கிறது?

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை அல்லது கீழே விழுவதைக் கண்டால் உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார்.

 

நாமும் ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.

ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது),

TALK (பேச சொல்வது),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம் அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால் உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்னவென்றால், இந்த சோதனை செய்த 3 மணிநேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்துவிட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும் அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.

அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

ஜெயலலிதாவின் இரகசியத்தை வெளியிட்ட லண்டன் நாளிதழ்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் ஒருவர் தங்கள் பத்திரிக்கைக்கு அந்த செய்தியை கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

திமுகவினர் சிலர் பல இலட்சங்களை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

திமுக கட்சியில் மட்டுமல்ல. அவரது சொந்த கட்சியிலேயே கூட யாரவது இப்படி செய்திருக்கலாம் என்று அந்த ஜோதிடர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி-சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 

4 மாத பெண் குழந்தையை காஸ் தீயில் எரித்த பெற்றோர்! பதற வைக்கும் பின்னனி காரணம்

பிரித்தானியாவில் தம்பதியினர் இறந்த 4 மாத பெண் குழந்தையை காஸ் தீயில் வைத்து எரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

West Yorkshire, Heckmondwike பகுதியை சேர்ந்த 24 வயதான டேனியல் ஷியர்ட், 22 வயதான லூசி டாமென் தம்பதியே தங்களது 4 மாத பெண் குழந்தை Kayleigh Sheardயாவின் உடலை எரித்துள்ளனர்.

இருவரும் குழந்தை கொடுமை குற்றச்சாட்டை ஏற்ற நிலையில், ஷியர்ட்க்கு 6 ஆண்டுகளும், டாமெனுக்கு 4 ஆண்டு 6 மாத சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில், கடந்த 2013ம் ஆண்டு குறித்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் குழந்தையை விரும்பாத தம்பதியினர் உதாசீனப்படுத்தி முறையான சிகிச்சை அளிக்க தவறியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தையின் உடலில் புதிய காயத்தைக் கண்ட மருத்துவர்கள், சமூக சேவகர்களை வரவழைத்துள்ளனர். இறுதியில் குறித்த காயங்கள் தற்செயலாக ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையை கவனித்து வந்த தந்தை, சமூக சேவகர்களை மறுத்தது மட்டுமின்றி மருத்துவ சிகிச்சையும் தவிர்த்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், ஆதாரங்களை மறைக்க பெற்றோர் இருவரும் சேர்ந்து குழந்தையை காஸ் தீயில் வைத்து எரித்துள்ளனர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்த நடந்த விசாரணையில் இருவரும் குழந்தை கொடுமை செய்ததை ஏற்றுள்ளனர்.

எனினும், குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், குற்றத்தை ஏற்ற பெற்றோருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.