பிக்பாஸ் வெற்றியாளர் இவரா.?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. நான்கு போட்டியாளர்கள் தான் இருக்கின்றனர். சுவாரசியமாக இருக்க வேண்டி தினமும் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று சாக்ஷி, வனிதா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்தனர்

அங்கே வனிதா ஷெரினிடம் தர்ஷன் வெளியேற காரணமே நீதான் என அவரிடம் மிகவும் கோபமாக பேசுகின்றார். இதன் காரணமாக ஷெரின் தேம்பித் தேம்பி அழுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ வீடியோவில் விஜய் டிவியின் முன்னால் போட்டியாளர்கள், சீரியல் பிரபலங்கள், தொகுப்பாளர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்து கலக்கி வருகின்றனர்.

அப்போது தொகுப்பாளினி பிரியங்கா, சாண்டியை தனியாக அழைத்து வாழ்க்கையில் சூப்பரான முடிவை எடுத்து வேற லெவலில் போய்க்கொண்டு இருக்கிறோம் என கூறி சாண்டியிடம் தன்னுடைய ஆதரவை தெரிவிக்கின்றார்.

அதற்கு தாண்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். ஒருவேளை சாண்டி தான் வின்னர் என்ற தகவலை மறைமுகமாக உணர்த்தும் விதமாக பிரியங்கா இவ்வாறு நடந்து கொண்டாரா என பார்வையாளர்களுக்கு கேள்வியை அவரது நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.