யாழில் தந்தை கைது!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 9 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தந்தையை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வரும் ஒருவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து 9 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சில தினங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.