நீதிபதியின் இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த- சிறிலங்கா காவல்துறை அதிகாரியான சரத் பிறேமச்சந்திரவின் உடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

MU

 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய, சார்ஜன்ட் சரத் பிறேமச்சந்திரன், கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

அவரது உடல், சிலாபம் சின்னவத்தையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

 

அதேவேளை,உயிரிழந்த சார்ஜன்ட் பிறேமச்சந்திர, உதவி ஆய்வாளராக மரணத்துக்குப் பின்னர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.