விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு சலுகை

பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சுற்றுலாவுக்காக, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருபவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர வழிவகை செய்யபட்டுள்ளது.

பணியைத் தொடர அனுமதி
அதன்படி இந்தச் சலுகையானது, இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிலிருந்த வண்ணமே சொந்த நாட்டில் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது என்ற விடயமும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருந்து, அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு.

வெளிநாட்டு மோகத்தால் பணத்தை இழக்கும் தமிழர்கள்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

பண மோசடி

குறித்த மோசடிகள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவர்களின் மோசடி குறித்து மக்கள் விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சரிவடைந்த தங்கம்!

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,220 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,290 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,320 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் , 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,750 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,300 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 162,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

நடிகர் ஆர்யாவா இது எப்படி மாறியுள்ளார் பாருங்கள்

ஆர்யா
நடிகர் ஆர்யா எப்போது பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்கவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும்.

ஜிம் ஒர்கவுட் மட்டுமின்றி நின்ற தூரம் சைக்கிள் பயணம் அடிக்கடி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஆர்யா.

ஒரு வருடத்தில் நடந்த மாற்றம்
ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்கவுட் செய்து அவர் ஆச்சர்யப்படுத்தும் உடற்கட்டுடன் மாறி இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கும் ஆர்யா, ‘2023 மார்ச்சில் Mr X படம் உறுதியானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் இந்த லுக்கிற்காக உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். தற்போது ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

 

இலங்கை சென்றுள்ள நடிகை ராய் லட்சுமி

ராய் லட்சுமி
நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

அதன்பின் குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ள இவர் அதிக படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆகியிருக்கிறார்.

கடைசியாக தமிழில் 2021ம் ஆண்டு சின்ரல்லா படம் நடித்தார், தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

இலங்கை பயணம்
அதிக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். எதில் இவர் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ இன்ஸ்டாவில் புகைப்டபங்கள் பதிவிடுவதில் அதிக ஆக்டீவாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் அவர் இலங்கைக்கு சென்றுள்ள வீடியோ இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்காக இலங்கை சென்றுள்ளாராம்.

இதோ அவர் ஷேர் செய்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி

பிரியாமணி
தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி.

தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது அடுத்தடுத்து பிரியாமணிக்கு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

யானை பரிசு
இதுவரை எந்த நாயகியும் செய்யாத ஒரு விஷயமாக நடிகை பிரியாமணி செய்துள்ளார்.

கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியாமணியும் பீட்டாவும் இணைந்து ஒரு இயந்திர யானையை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை பரிசாக அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பிரியாமணி கூறியுள்ளார். அந்த இயந்திர யானைக்கு மகாதேவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

குடிபோதையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்த மாதவன்

நடிகர் மாதவன் தமிழில் அலைபாயுதே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர். தமிழ் மட்டுமின்றி அவர் ஹிந்தியிலும் ஏராளமான படங்கள் நடித்து பாலிவுட்டிலும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன Shaitaan என்ற ஹிந்தி படத்திலும் நடித்து இருந்தார் மாதவன். அதில் ஜோதிகாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் நடித்த மாதவன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் மாதவன் தான் குடிபோதையில் ஒரு படத்தில் நடித்தது பற்றி பேசி இருக்கிறார். அமீர் கான் உடன் 3 இடியட்ஸ் படத்தின் ஒரு காட்சியில் தான் அப்படி நடந்ததாம்.

குடித்திருப்பது போல் நடிப்பதற்கு பதில் நிஜத்திலேயே குடித்துவிடலாம் என அமீர் கான் கூறியதால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்துவிட்டார்களாம்.

குடித்துவிட்டு நார்மலாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்தாலும், படப்பிடிப்பில் வசனத்தை பேச முடியாமல் மாதவன் தள்ளாடினாராம்.

அடையாளமே தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு பட நடிகை

கமலினி முகர்ஜீ
கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் வேட்டையாடு விளையாடு தான். இதற்கு முன் இந்தியில் வெளிவந்த Phir Milenge படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இவர் கடைசியாக தமிழில் வெளிவந்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் புகைப்படம்
இதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நடிகை கமலினி முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை கமலினி முகர்ஜியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


குக்வித் கோமாளியில் யாருமே எதிர்பார்க்காத புது நடுவர்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஷோவின் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் ஏற்கனவே விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் வேறு ஒரு புது நிகழ்ச்சியை நடத்த போவதாகவும், அதை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறி இருந்தார்.

மேலும் குக் வித் கோமாளி ஷோவின் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவி கூட்டணியில் இருந்து விலகுவதாக வருத்தத்துடன் அறிவித்துவிட்டனர்.

புது நடுவர்
இந்நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசனில் செஃப் தாமு உடன் ஒரு புது நடுவரை களமிறக்க இருக்கிறதாம் விஜய் டிவி.

மெஹந்தி சர்க்கஸ் பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புது நடுவராக வர இருக்கிறார். அவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார்.

அவர் குக் வித் கோமாளி ஷோவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பிணை மறுப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் இன்று (2024.03.14) மறுத்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிணை மனுக்கள் இன்று (14) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

மார்ச் மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 67,114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையில் ரஸ்யாவில் இருந்து 9783 பேரும், இந்தியாவில் இருந்து 9735 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆறாயிரத்து 301 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை , ரஸ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மொபைல் SMS ஊடாக நடைபெறும் நிதி மோசடி தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது . இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி எஸ்.எம்.எஸ்
இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL Post போன்ற அடையாளங்களையும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாம் குறுஞ்செய்தி மூலம் வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் பொதி அனுமதிக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே மோசடி செய்பவர்கள் அனுப்பும் போலி எஸ்.எம்.எஸ்.களின் அடிப்படையில் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7 வயது சிறுமி சிறுவர்களால் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் மற்றும் 18 வயது இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட்ட 5 பேரில், 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன், 18 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (13) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தந்தையை இழந்த சிறுமி வேலைக்கு செல்லும் தாயார்
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் விளையாடிய 11 வயது சிறுவன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியை 14,15 மற்றும் 18 வயதுடைய சிறுவனின் நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்றைய தினம் (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்குட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்குட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவித்தார்.

அத்துடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்!

யாழில் இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் சுகந்தன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கூடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், குடும்பஸ்தரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் டீவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை

கிழக்கு வாசல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல்.

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது தொடர்.

புதிய என்ட்ரி
எம்.என்.மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில் நடித்துள்ளார்.

CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்

விஜய்
நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

எதிர் குரல்
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூக நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது CAA சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார்.

” சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.

பாலிவுட் பக்கம் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 2000ம் ஆண்டில் அஜித்தை வைத்து தீனா படம் இயக்கியதன் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

2005ம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

விஜய்யின் 68வது படத்தை கூட ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமையவில்லை. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

புதிய அப்டேட்
இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமா நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று பார்த்தால் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

அதாவது நடிகர் சல்மான் கானை வைத்து ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை நடிகர் சல்மான் கானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய சிக்கலில் மாட்டிக் கொண்ட முத்து-மீனா

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன், அதிரடி வசனங்களுடன், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.

இந்த தொடர் அண்ணாமலை குடும்பத்தை மையமாக கொண்டு அதிலும் முத்து-மீனா கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது கதையில் முத்து, மீனாவிற்கு ஒரு கல்யாண ஆர்டர் வாங்க 500 மாலைகள் குடும்பத்துடன் கட்டி வருகின்றனர். இது விஜயா, மனோஜ், ரோஹினி 3 பேருக்கும் பிடிக்காமல் உள்ளனர்.

500 மாலைகள் மீனா சொன்னபடி கட்டி முடிக்கிறார்.

நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது. அதில் முத்துவிடம் மாலை கொண்டு சென்றவர், மாலையுடன் எனது வண்டியும் காணவில்லை என ஷாக்கிங் தகவல் கூறுகிறார்.

இதனால் முத்து மிகவும் பதட்டம் அடைகிறார், இனி கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

சிட்டி அந்த மாலையை கடத்த ஏற்கெனவே பிளான் போட்ட நிலையில் எப்படி முத்து மாலையை சொன்னபடி கல்யாணத்திற்கு கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

 

View this post on Instagram

 

A post shared by UNKNOWN (@siragadikka_aasai_1)

ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ. இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம் அட்லீ. அந்த படத்திற்கான வேளைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

அட்லீ சம்பளம்
இதனால் தான் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

ஆம், இப்படத்தை இயக்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லீக்கு ரூ. 60 கோடி சம்பளம் என்றால், கோலிவுட் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிடுவார். இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ரகசிய திருமணம்?

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் திரைப்படமே வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சதீஸ் உடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்தி ஒன்று பரவியது. பைரவா படத்தின் பூஜையின் போது. இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருந்த புகைப்படத்தை வைரலாக்கி, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் என கிசுகிசுக்கப்பட்டது.