ஸ்டார் படத்திற்கு கவின் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார்.

அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

ஸ்டார் சம்பளம்
இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் கவின் நடிப்பை தான் பாராட்டி வருகின்றனர் இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார்.

ரஜினியுடன் நடித்ததை நினைத்து புலம்பிய ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படையப்பா பற்றி..
ரஜினி நடித்த படையப்பா படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.

நீலாம்பரி negative ரோல். அதில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன்.

ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் ஷூட்டிங் நடக்கும்போதும் இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அனைத்து படங்களை விட இதற்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது என அவர் கூறி இருக்கிறார்.

யாழில் கொடூரம் கற்பழித்து கொல்லப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணே இவ்வாரு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரிசோதனையில் தெரியவந்த தகவல்
உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடித் தொழிலுக்காக சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி கிடந்ததைக் பார்த்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அக்காவாக நடிக்க பலகோடி கேட்ட நயன்

நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியானது.

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு அக்காவாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்க வைக்க இயக்குனர் கீத்து மோகன் தாஸ் முடிவு செய்துள்ளாராம்.

இரண்டு மடங்கு அதிக சம்பளம்
படத்தின் கதையை கேட்டு சரி என கூறியுள்ள நடிகை நயன்தாரா, இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரூ. 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். குறிப்பாக படத்தில் அக்கா, தம்பிக்கு இடையிலான எமோஷனல் காட்சி வருகிறதாம். அதுதான் படத்தின் முக்கிய காட்சி என்கின்றனர்.

இவ்வளவு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் நயன். கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா இதுவரை ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முதல் முறையாக யாஷ் படத்திற்காக தன்னுடைய வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கேட்டுள்ளார் நயன்தாரா. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு பெரிய பணக்காரரா

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.

ஹெலிகாப்டர் வாங்க போறேன்

மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய பணக்காரர் என்பதும், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்பது ம் குறிப்பிடத்தக்கது.

விரைவில் அவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க போகிறாராம். அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

“எனக்கு நேரம் தான் முக்கியம். முக்கிய நகரங்களுக்கு சமையல் செய்யபோகும்போது விமானத்தில் சென்று வருகிறேன். ஆனால் சின்ன ஊர்களுக்கு செல்லும்போது காரில் செல்ல அதிகம் நேரம் எடுக்கிறது. அதானால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டே செல்கிறேன்”.

“அடுத்து சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க போகிறேன். எனது ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என எனக்கு தெரியும். 10 வருடம் கழித்து என் நேரத்தின் மதிப்பு உயரும். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்குகிறேன்” என மாதம்பட்டி ரங்கராஜ் கூறி இருக்கிறார்.

 

 

பல கோடி செலவில் நடாத்தப்பட்ட ரோபோஷங்கர் மகள் திருமணம்!

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

பல கோடி செலவு செய்தது ஏன் .
சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.

எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.

அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.

விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா

திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என திரிஷா கைவசம் பல படங்கள் உள்ளன.

சாய் பாபா கோவில்
நடிகர் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவிற்கு சாய் பாபா கோவில் ஒன்றை கட்டினார். அந்த கோவிலின் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை திரிஷா சமீபத்தில் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளாரா என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.

ஆனால், விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு தான் திரிஷா சென்றுள்ளார் என உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சிட்டியின் சூழ்ச்சியால் பிரச்சனையில் சிக்கும் முத்து

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, ரசிகர்களின் பேவரெட் சீரியலாக உள்ளது.

கதையே இல்லாமல் சில சீரியல்களில் தேவையில்லாத விஷயத்தை காட்டி ஓட்டுவார்கள்.

ஆனால் இதில் அப்படி இல்லை, அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், அடுத்தடுத்த திருப்பங்கள் என கதையை அழகாக கொண்டு செல்கிறார்கள்.

எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.

எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.

 

ரஜினியின் கதையில் பிளான் போட்ட இயக்குனர்

ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும், தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்பது போல் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படம் ராணா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை போட்டு பிரம்மாண்டமாக துவங்கியது. தீபிகா படுகோன் கதாநாயகியாக இப்படத்தில் கமிட்டாகி இருந்தார்.

ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ராணா போல ஒரு சிறப்பான கதையை மீண்டும் படமாக வேண்டும் என்பது தான் எனது ஆசை என இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளாராம்.

ராணா படத்தின் கதை எப்போது வேண்டுமானாலும் கூட படமாக எடுக்கலாம். காலம் தாண்டி பேசும் ஒரு படமாக ராணா இருக்கும். அந்தளவிற்கு இப்படத்தின் கதை சிறப்பாக இருக்கும் என கூறினாராம்.

ரஜினியின் கதையில் விஜய்
இந்த நிலையில், ராணா படத்தை தளபதி விஜய்யை வைத்து எடுக்க கே.எஸ். ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரஜினிக்கு எழுதிய கதையில் விஜய் நடித்தால் அது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை கவரும்.

ஆனால், விஜய்யை வைத்து எடுக்க ரவிக்குமார் முயற்சி செய்ததாக கூறப்படும் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை 4 திரைவிமர்சனம்

அரண்மனை என்பது தமிழ் சினிமாவில் முக்கியமான பிராண்ட்-ஆக மாறிவிட்டது. இந்த தலைப்பில் இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இன்று உலகளவில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.

சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் கணவர், மகன், மகளுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தமன்னா வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.

சில லாஜிக் மிஸ்டேக், அதை சரி செய்திருந்தால் இன்னும் கூட படம் வலுவாக இருந்திருக்கும். திகில் காட்சிகளை பக்காவாக வடிவமைத்த விதம் படத்தின் பிளஸ் பாயிண்ட். மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார் தமன்னா. எமோஷனல் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

சுந்தர் சி படம் என்றாலே கிளாமர் இருக்கும் என விமர்சனத்தை இப்படத்தில் தகர்த்துள்ளார். தமன்னா அளவிற்கு ராஷி கன்னாவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் கூட, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் நடிகை ராஷி

நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தினாலும், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரின் நடிப்பு பக்கா. படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை தான். ஹிப் ஹாப் ஆதி அதில் வெறித்தனமாக ஸ்கோர் செய்துள்ளார். VFX படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அதே போல் படத்தை பிரமாண்டமாக காட்டிய ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, சுந்தர் சி பாணியில் மிரட்டலாக இருந்தது. சிம்ரன், குஷ்பூவின் நடனம் ஒரு பக்கமும், வில்லன் – ஹீரோவுக்கு இடையே உள்ள மோதலும் வேற லெவல். மேலும் அதற்காக போடப்பட்ட செட் மிகவும் பிரம்மாண்டம்.

பிளஸ் பாயிண்ட்

தமன்னாவின் நடிப்பு.

திரைக்கதை.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை.

திகில் காட்சிகள்.

ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள்.

மைனஸ் பாயிண்ட்

தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், அதனால் எற்படும் தொய்வு.

மொத்தத்தில் அரண்மனை 4, சுந்தர் சி-யின் வெற்றி மகுடத்தில் மற்றும் ஒரு ரத்தினம்..

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்

நடிகை ஜோதிகா எப்போதும் சமூக கருத்துகளை மேடைகளில் பேசுபவர். கோவிலுக்கு கொடுக்கும் காசை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள் என ஒருமுறை பேசி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கும்.

அப்படி சமூக அக்கறையுடன் பேட்டிகளில் பேசும் ஜோதிகா சமீபத்தில் நடந்த தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுந்தது. அதை நெட்டிசன்களும் விமர்சித்தனர்.

ஜோதிகா பதில்
தற்போது ஜோதிகா நடித்து இருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரெஸ் மீட் இன்று நடந்தது. அதில் ஜோதிகாவிடம் செய்தியாளர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நான் வருஷா வருஷம் ஓட்டு போடுகிறேன், சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வர முடியாத நிலை இருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போகும், எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது.’

‘எனக்கும் பிரைவேட் லைப் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்’ என விளக்கம் கொடுத்தார்.

அரசியலுக்கு வருவீர்களா..
மேலும் அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என கேட்டதற்கு, ‘யாரும் என்னை கேட்கல. இப்போது பசங்க படிச்சிட்டு இருக்காங்க, அதையும் கெரியரையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வர எண்ணம் இல்லை” என கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு ‘அவுட் ஆப் தி டாபிக்’ என சொல்லி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்

இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் நிலையில் அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

கவின் தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். Bloody Begger என டைட்டில் வைங்கப்பட்டு இருக்கும் அதன் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

கவின் பிச்சைக்காரன் லுக்
கவின் இந்த படத்தில் பிச்சைக்காரன் லுக்கில் நடித்து இருக்கிறார்.

வைரலாகும் ப்ரோமோ இதோ.

 

தோற்றாலும் கம்பீரமாக நிற்கும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தோற்றுப்போய் இருந்தாலும் கரம்பீரமாக பேசி வீட்டு பெண்களை மீண்டும் திணற வைத்துள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

மீண்டும் மிரட்டும் குணசேகரன்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

குணசேகரன் என்னதான் தோற்றுப் போய் நின்றாலும் தனது தோரணையை விடாமல் இருக்கின்றார். இதனை புரிந்து கொள்ள முடியாமல் வீட்டில் உள்ள பெண்களும் திகைத்து நிற்கின்றனர்.

 

மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது தெரியுமா?.

மாளவிகா மோகனன்
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடிக்கிறார்.

திருமணமா?
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் உங்களுக்கு இவ்ளோ ஆர்வம்? என்று தெரிவித்துள்ளார்.

கவுண்டமணியிடம் பாராட்டை பெற்ற சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
மக்கள் இப்போதெல்லாம் சீரியல்களில் எப்போதும் குட் அன் பேட் கதாபாத்திரங்களை பார்த்து சலித்துவிட்டார்கள்.

மிகவும் எதார்த்தமாக அழகிய குடும்ப கதையுள்ள கதைகளை தான் அதிகம் ரசிக்கிறார்கள். அப்படி மக்கள் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவர் தனது 3 மகன்கள், மருமகள்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை உடையவர், ஆனால் அவரின் ஆசையை கெடுக்கும் வகையில் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் எப்படியோ பிரச்சனைகள் முடிந்து ஒன்றாக இணைந்துவிடுகிறார்கள்.

இப்போது கதையில் ரோஹினி-மனோஜ் இருவரும் பணத்தை பற்றி தங்களது குடும்பத்தில் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள், அது எப்போது வெளியே தெரியும் என தெரியவில்லை.

கவுண்டமணி
இந்த தொடரில் முத்துவின் நண்பனாக செல்வம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பா. இவர் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடிக்கிறார்.

நீண்ட டயலாக் ஒன்றை எளிதாக பேசி அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அவரின் நடிப்பை பார்த்து வியந்த கவுண்டமணி அவரை பாராட்டியுள்ளார். அதோடு நீ பெரிய நடிகராக வருவாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறாராம்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

சிறகடிக்க ஆசை
எதார்த்தமான கதைக்களத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப கதை தான் சிறகடிக்க ஆசை.

முத்து-மீனா இவர்கள் தான் கதையின் முக்கிய கரு, இவர்களை சுற்றிய கதையாக தான் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகிறது.

ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்ற மனோஜ்-ரோஹினி வீட்டில் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள், ஆனால் முத்துவிற்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது.

இதில் வேறு ஜீவாவிற்காக சாட்டி கையெழுத்து எல்லாம் போட்டுள்ளார், இதனை வைத்து முத்துவிடம், மனோஜ்-ரோஹினி சிக்கினாலும் உண்டு. எப்படி கதையை கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

புதிய வாய்ப்பு
இந்த தொடரில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் சல்மா. இன்ஸ்டாவை திறந்தாலே மக்கள் திட்டுகிறார்கள், இதனால் கமெண்ட் பிளாக் செய்து வைத்துள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது இவர் குறித்து என்ன தகவல் என்றால் இவருக்கு சன் டிவியில் முக்கிய சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

அதில் நெகட்டீவ் கதாபாத்திரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றபடி தொடர் பற்றிய விவரத்தை அவர் கூறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் முடிவுக்கு வரும் சீரியல்

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாரத்தோடு சன் டிவியின் அன்பே வா சீரியல் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இன்னொரு சீரியலும் முடிவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரியமான தோழி
சன் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகள் நெருங்கி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

இந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

தோற்றுப்போன குணசேகரன்! ஜீவானந்தத்துடன் எஸ்கேப் ஆகிய தர்ஷினி

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி மணக்கோலத்தில் மண்டபத்தில் அமர்ந்துள்ள நிலையில், ஜனனி டீம் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

மணக்கோலத்தில் குணசேகரன்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

சொல்லப்போனால் இந்த அருமையான காட்சியை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டு பெண்களால் குணசேகரன் முதன்முதலாக தோல்வியை சந்தித்துள்ள நிலையில் திருமணம் நின்று போயுள்ளது.

தர்ஷினி ஜீவானந்தத்திடம் சேர்ந்துள்ள நிலையில், போட்டிக்கும் தயாராகி உள்ளார். ஒருவழியாக வீட்டு பெண்கள் தாங்கள் நினைத்தது போன்று தர்ஷினியையும் காப்பாற்றியுள்ளனர்.

 

கனடாவில் சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு

கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 8ம் திகதி கனடாவில் சூரிய கிரகணம் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அநேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில இடங்களில் சூரிய கிரணத்தை சிலர் பாதுகாப்பற்ற வழிமுறைகளை பயன்படுத்தியதனால் கண் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

CHALLENGERS: திரை விமர்சனம்

ஹாலிவுட்டின் கனவுக்கன்னி ஸென்டயாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகியுள்ள ‘சேலஞ்சர்ஸ்’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்.

கதைக்களம்
2019ஆம் ஆண்டில் சேலஞ்சர்ஸ் எனும் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் படம் தொடங்குகிறது. ஆர்ட் டொனல்ட்ஸன் (மைக் ஃபைஸ்ட்), பேட்ரிக் ஸ்வெய்க் (ஜோஷ் ஓ கானர்) ஆகிய இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே படத்தின் முழுக்கதை.

டொனால்ட்ஸன், பேட்ரிக் இரண்டு நெருங்கி நண்பர்களும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் எதிர்முனையில் உள்ளனர். அவர்களில் கதாநாயகி டஷி டன்கனின் (ஸென்டயா) ஆதரவு யாருக்கு என்பது ஒருபுறம், கதாநாயகர்களின் பிளேஷ்பேக் என்ன என்பது மறுபுறம் என Non-Linear திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.

முக்கோணக்காதல் கதைப் போல படத்தின் திரைக்கதை விரிய, அதற்குள் இருக்கும் சிக்கல்கள் குறித்து படம் பேசுகிறது. இறுதியில் வெற்றியாளர் யார் என்பதே கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ்.

படம் பற்றிய அலசல்
டென்னிஸ் வீராங்கனையான டஷியை ஒரு போட்டியில் சந்திக்கும் நண்பர்களான பேட்ரிக், டொனால்ட்சன் இருவரும் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயலும் காட்சியில் அலப்பறை ஆரம்பமாகிறது.

டீனேஜ் குறும்புத்தனத்துடன் மூவரும் அறையில் பேசிக்கொள்ளும் மற்றும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி இறுதியில் காமெடியாக முடிவது திரையரங்கில் சிரிப்பலை.

டென்னிஸ் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை, மனிதர்களின் மனச்சிக்கல்களுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மிரட்டல்.

ஒவ்வொரு போட்டியை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். வீரர்கள் அடிக்கும் பந்து நம்மை தாக்க வருவதுபோல் 3D எஃப்பெக்ட் உடன் 2Dயிலேயே மிரட்டியிருக்கிறார்கள்.

தொய்வில்லாத திரைக்கதையுடன் ஒன்ற வைக்க ட்ரெண்ட், அட்டிகஸ் இசை உதவியுள்ளது. என்னதான் non-linear திரைக்கதையை சிறப்பாக கையாண்டிருந்தாலும், அனைத்து தரப்பு பார்வையாளர்களாலும் படத்துடன் ஒன்ற முடியுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Call Me by Your Name எனும் ஆஸ்கர் விருது வென்ற படத்தை இயக்கிய Luca Guadagnino தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். படத்தில் வரும் மூன்று கதாபாத்திரங்களும் (ஹீரோ, ஹீரோயின்) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

adult காட்சிகள், வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதுடன் 18+ படம் என்பதால் இது குழந்தைகளுக்கான படம் அல்ல. வயது வந்தோர் வாய்விட்டு சிரித்து, முழு டென்னிஸ் போட்டியை சுவாரஸ்சியமாக கண்டுகளிக்க கட்டாயம் இப்படத்தை பார்க்கலாம்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு

டென்னிஸை காட்சிப்படுத்திய விதம்

திரைக்கதை மற்றும் இசை

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் காதல், நட்பு இரண்டையும் கலந்து டென்னிஸ் விளையாட்டுடன் சேர்த்து புதுமை செய்திருக்கிறது இந்த சேலஞ்சர்ஸ். முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து எடுத்து ஜெயித்திருக்கிறார் தயாரிப்பாளர், நடிகை ஸென்டயா