பிரேசிலில் லொறி- பஸ் நேருக்குநேர் மோதி விபத்து! 20 பேர் பலி

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு…….

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லொறி பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய பஸ் தீக்கிரையான நிலையில் சம்பவ இடத்திலேயே 19 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் மேலும் ஒருபெண் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.

இன்று நண்பகல் பல்கலை மாணவர்களை ஜனாதிபதி சந்திப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எதிர்ப்புத் தொடர்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று செவ்வாய்க்கிழமை, பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவர் ஒன்றியங்களுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக, யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் சுவாமிநாதன், அங்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இச்சந்திப்பு, இன்று செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12:30 மணிக்கு, கொழும்பில் வைத்து இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு அருகில் நிற்பது குற்றமா? இஸ்லாமிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை

இந்தோனேசியா நாட்டில் காதலனுக்கு மிக அருகில் நின்ற குற்றத்திற்காக இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள Banda Aceh என்ற மாகாணத்தில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் 20 வயதான இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் அவருடைய காதலனுடன் வெளியில் சென்றபோது அவருக்கு அருகில் நின்று பேசியுள்ளார்.

இளம்பெண்ணின் இந்நடவடிக்கை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறி இளம்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து இளம்பெண் மற்றும் அவருடைய 21 வயதான காதலனை கைது செய்த பொலிசார் Masjid Al-Muttaqin என்ற மசூதிக்கு முன்னிலையில் நேற்று சவுக்கடி தண்டனை கொடுத்துள்ளனர்.

பொது இடங்களில் திருமணம் ஆகாத நபர்கள் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தொடுவது உள்ளிட்ட செயல்களுக்கு இந்தோனேசியாவில் கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கமலுடனான உறவை கௌதமி உதறித் தள்ளி விட்டார் வீடியோ

நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கௌதமி, இப்போது மிகுந்த மனவருத்தத்துடன் அவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.

கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குருசிஸ்யன் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கௌதமி.

ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

கமலும், கௌதமியும் முதன்முறையாக அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் தேவர் மகன், குருதிப்புனல், பாபநாசம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

கௌதமி முதல் , சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

கௌதமி-சந்தீப் இடையேயான திருமண உறவு நீடிக்கவில்லை, இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடனான கொண்ட நட்பில் அவருடன் வாழ தொடங்கினார்.

கமலும் நடிகை சரிகாவை பிரிந்த பின்னர் கௌதமியுடன் வாழ தொடங்கினார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கமலும், கௌதமியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

தற்போது கமலின் திரைப்படங்களில் உடை வடிவமைப்பாளராகவும், பாபநாசம் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் ஜோடியாகவும் நடித்தார்.

இந்நிலையில், கமல் உடன் வாழ்ந்து வந்த உறவை முறித்து கொள்வதாக நடிகை கௌதமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுப்பற்றி கௌதமி கூறியிருப்பதாவது,

‘மிகுந்த மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கமலுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

தனிப்பட்ட சில காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே இதுப்பற்றி யோசித்து வந்தேன்.

முக்கியமாக என் மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது.

நான் யாரையும் குறை சொல்லவோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கம் அல்ல.

29ஆண்டுகாலம் கமல் உடனான நட்பில் நிறைய கற்று கொண்டேன்.

இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் கமல்.

13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தாலும், கமலின் ரசிகையாக என்றும் தொடர்வேன்.

கமலின் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது அவரிடமிருந்து நிறைய விடயங்கள் கற்று கொண்டேன்.

இதுவரை அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம், இன்னும் அவர் பல சாதனைகள் புரிவார், அவருக்கு வாழ்த்து சொல்ல நான் காத்திருக்கிறேன்.

ரசிகர்களாகிய நீங்கள், என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாய் இருந்துள்ளீர்கள்.

உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் இந்த தருணத்தில் என் வாழ்வில் நடப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த 29ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன்.

என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

மேற்காட்டியவாறு நடிகை கௌதமி டுவிட்டரில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், நடிகை வாணி கணபதியை 1978ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த திருமணம் 10ஆண்டுகள் தான் நீடித்தது.

1988-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின்னர் கமல் பொலிவூட் நடிகை சரிகாவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சரிகா உடனான திருமண வாழ்வு 16 ஆண்டுகள் நீடித்தது, 2004ல் விவாகரத்து பெற்று கமலும், சரிகாவும் பிரிந்தனர்.

அதன்பின் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மார்பகத்தை வெட்டி எடுக்கும் கொடூர தண்டனை..! எங்கே எதற்கு என்று தெரியுமா..?

1900களில், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல மனிதாபிமானமற்ற நடைமுறைகள் அமலில் இருந்து வந்தன. அதுவும் ஜாதி வெறியினரால் பெண்கள் மிகவும் மோசமான துன்புறுத்தலுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.

தாழ்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம், உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு சட்டம் என தனி தனி சட்டம் இருந்தது.

கேரள மாநிலம் திருவாங்கூர் மாவட்டத்தில், அதாவது தற்போதைய திருவனந்தபுரத்தில் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. தங்கள் உடலின் கீழ்புற பாகங்களை மட்டும் பெண்கள் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும்.

இதனால் இந்த பெண்கள், தங்களுடைய மார்பகங்கள் பிறரின் பார்வைக்கு தெரிகிறதே என்று ஆதங்கம் கொண்டனர். மேலும் அவர்கள் மேலாடை அணிய விரும்பினால் அதற்காக தனியாக வரி செலுத்த வேண்டுமாம்.
Namboodiri, Brahmin, Kshatriya மற்றும் Nair ஆகிய மேல்ஜாதி வகுப்பினர் மட்டும் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டார்கள்.

ஒரு முறை கீழ் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதியின்றி மேலாடை அணிந்திருப்பதை பார்த்த இளவரசி, உடனடியாக அவரது மார்பகங்களை வெட்டி வீசுமாறு கொடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாங்கள் வரி செலுத்துகிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அப்பெண்கள் மேலாடை அணியும் பட்சத்தில், அவர்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படும்.

அப்பெண்கள் வரிக்கட்டணம் செலுத்த தவறினால், அவர்கள் தங்களது மார்பகங்களை வெட்டி வாழை இலையில் வைக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்படும்.

காரணம் கீழ் ஜாதி பெண்கள் தங்களுடைய மார்பகத்தை மறைப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது.

 

மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு ஒபாமா குத்தாட்டம்

ஹாலோவின் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது, இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இரவு ( trick-or-treaters) என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் 4000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரையும் வரவேற்று ஒபாமா உரையாற்றினார்.

தொடர்ந்து மனைவி மிக்செல் ஒபாமாவுடன் சேர்ந்து மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ‘திரில்லர்’ பாடலுக்கு நடனமாடினர்.

அமெரிக்காவில் வருகிற 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா கிளம்பும் இலங்கையின் சாதனை சிறுவன்! எதற்காக தெரியுமா?

இலங்கையின் சாதனை சிறுவனான Kulisa Saranath Nanayakkara ஆசிய செஸ் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு நடத்தும் “அண்டர்-14” ஆசிய கிண்ண செஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த யூன் மாதம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற Asian Schools Chess Championship போட்டியில் அசத்திய Kulisa Saranath Nanayakkara 3வது இடம் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் காந்தி-மன்சிய்ஸ்க் நகரில் கடந்த செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்ற World Youth Chess Championship போட்டியில் சாதனை படைத்தார்.

இந்நிலையில் சீனாவின் ஜியாசிங் நகரில் எதிர்வரும் 5ம் திகதி முதல் 12 திகதி வரை நடக்கும் Asian Nations Cup Chess Team Championship போட்டியில் பங்கேற்கும் அணியில் Kulisa Saranath Nanayakkara சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் செஸ் வரலாற்றில் உலக செஸ் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட அரினா கிராண்ட் மாஸ்டர் (AGM – Arena Grand Master) பட்டத்தை வென்ற முதல் வீரர் Kulisa என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மண்ணுக்கு பெருமைசேர்த்த மண்ணின் மைந்தன்

வீடு இல்லாத ஏழைகளுக்கு உதவ பிரபல நடிகர் விடுத்த உருக்கமான கோரிக்கை

ஸ்கொட்லாந்து நாட்டில் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ பிரபல ஹொலிவுட் நடிகரான லியானர்டோ டிகாப்ரியோ ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் 30,000 பேர் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இத்தகவலை தொடர்ந்து ‘டைட்டானிக்’ புகழ் லியானர்டோ டிகாப்ரியோ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வீடு மற்றும் உணவு இல்லாத ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு எனது ரசிகர்களும் பொதுமக்களும் 6 டொலர் அன்பளிப்பாக கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு சன்மானம் கொடுப்பவர்களில் இறுதியாக ஒருவரை தெரிவு செய்து அவர் என்னுடன் மதிய உணவு அருந்தலாம்’ என லியானர்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து நாட்டில் உள்ள Home என்ற உணவகம் வீடு மற்றும் உணவு இல்லாத நபர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 4,89,000 டொலர் நிதி வசூல் செய்து அவ்வாண்டு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு உணவு அளித்து வறுமையை போக்கியுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டும் இதுபோன்ற ஏழைகளுக்கு உதவ ஹோம் முன் வந்துள்ளது.

இறுதியில் தெரிவு செய்யப்படும் நபர் லியானர்டோ டிகாப்ரியோவுடன் உணவு அருந்துவது மட்டுமில்லாமல், அவர் George Hotel என்ற நட்சத்திர ஹொட்டலில் ஓர் இரவு முழுவதும் தங்களாம்.

மேலும், 1,200 மதிப்புள்ள ஷாம்பெய்ன் மது பாட்டிலும் அவருக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 11-ம் திகதி இறுதியாக வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?

நீங்கள்  A \C கார் பயன்படுத்துபவரா? அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது…

காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும்.

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும்.

இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள். நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள்tata_safari_storme_03

உங்கள் திறமைகளை பற்றி சொல்லும் நீங்கள் பிறந்த கிழமை

நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்! கமெராவில் சிக்கிய உருக வைக்கும் காட்சி

இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட குவியலில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Norcia நகரத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் சரிந்து விழ நாய் குவியலுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடி வந்துள்ளது.

குறித்த வீடியோவில், கட்டிட குவியலில் சிக்கி போராடும் நாயை கண்டறிந்த மீட்பு குழுவினர், விரைவாக நாயை மீட்டு உணவு அளிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 6.5 நிலநடுக்கம் இத்தாலியை தாக்கியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பல மடங்கு பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த நபர் ஒருவர் பாதிப்புகளை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், முக்கிய சாலை ஒன்று நிலநடுக்கத்தினால் பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

மேலும், மலையிலிருந்து பாறைகள் உருண்டு சாலையில் நிரம்பியிருக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முதலமைச்சர் யார் ?

அண்மையில் பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் பிரித்தானியாவாழ் தமிழ் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிறப்புரை ஆற்றியதோடு அங்கு கலந்துகொண்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

அதில் கலந்துகொண்ட ஒருவர் கேட்டகேள்வி உங்களுடைய அரசியல்வாழ்வு இந்த பதவிக்காலத்துடன் முடித்துக்கொள்வீர்களா அல்லது தந்தை சொன்னதுபோல தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிடுவீர்களா என்று அதற்கு பதிலளித்த முதலமைச்சர் இந்த முதலமைச்சர் பதவிக்குகூட நான் தெய்வாதீனமாக அதாவது ஆண்டவன் செயலால் வந்திருக்கின்றேன்.

என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியாது ஆண்டவனுக்கு தெரியும் என்னசெய்ய வேண்டும் என்று அது நான் சொன்னால் என்ன தந்தை செல்வா சொன்னால் என்ன அடுத்த தேர்தலில் நான் வருவேனா இல்லையா என்பதை ஆண்டவனே முடிவெடுப்பான் என சாதுரியமாக பதிலளித்தார் முதலமைச்சர்.

முதலமைச்சர் அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தீர்மானித்தாலும் அதற்குரிய காலம் இன்னும் தோன்றவில்லை என்பதோடு உரிமைகளை விலைபேசும் தலைமைகள் இருக்கும்வரை விக்கினேஸ்வரனின் தேவை என்பது தமிழர்கள் மத்தியில் அதிகமிருப்பதாகவே உணரப்படுகின்றது.

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதனால் 8 நன்மைகள்!

எண்ணெய்களில் பல உள்ளன. அந்த எண்ணெகளை எதில் இருந்து வருகிறதோ அதன் பெயர்களை வைத்து தான் சொல்லுவார்கள்.

உதாரணத்திற்கு தேங்காயில் இருந்து தான் தேங்காய் எண்ணெய் என்று சொல்லுவார்கள். ஆனால் நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது ஏன் நாம் எள் எண்ணெய் என்று கூறாமல் நல்லெண்ணெய் என்று கூறுகிறோம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும்.

இந்த நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.

இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெயை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல் :

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்:

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி :

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

இரத்த அழுத்தம் :

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் :

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்

மனநிலையை மேம்படுத்தும் :

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மூட்டு வலிகள் :

மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள்:

நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும்.

இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பு:

வயிற்றுப்போக்கின் போது நல்லெண்ணெயின் உபயோகத்தைத் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் நீர்வறட்சியை ஏற்படுத்திவிடும்.

முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, அதற்கான மருந்து மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

வெள்ளைவான் கடத்தலில் கடற்படை அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு – நீதிமன்றம் அதிரடி

2009ஆம் ஆண்டு இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் வெலிசறை கடற்படை அதிகாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் துறையினர், இன்று இது தொடர்பிலான முழுமை அறிக்கையை கோட்டை மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஷ் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

வடிவேல் பக்கிரிசாமி மற்றும் ரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இனந்தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு துறையினர்,

குறித்த இருவரும் பயங்கரவாத நடவடிக்கைகளிலோ அதற்கு உதவியாகவோ செயற்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்தே வெலிசறை கடற்படை அதிகாரிகள் இதில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக நீதவான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மாரடைப்பு வரப்போகின்றது என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள்!

ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலும் மக்கள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்படும் போது அதை கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

இப்படி மாரடைப்பு வருவதற்கு முன் உணர்த்தும் அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

எனவே ஒவ்வொருவரும் மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.

இங்கு மாரடைப்பு ஏற்படப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வியர்வை

இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவில் இடையூறு ஏற்படும் போது, மூளைக்கு சமிஞ்கை அனுப்பப்படும்.

அப்படி அனுப்பப்படும் சமிஞ்கை ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதில் முதன்மையானது அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும்.

ஒருவர் கடுமையான வியர்வையால் அவஸ்தைப்பட்டு அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.

மார்பு மற்றும் கைகளில் வலி

மற்றொரு பொதுவான அறிகுறி மார்பு மற்றும் கைகளில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

அதுவும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரியான தருணத்திலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தலைச் சுற்றல்/மயக்க உணர்வு

மூளைக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதயத்தால் உடலுக்கு இரத்தத்தை அனுப்ப முடியாமல், மயக்க நிலை ஏற்படும்.

அடிவயிற்று வலி

வயிற்று வலிக்கும் மாரடைப்பிற்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். மேலும் அடிவயிற்று வலி அசிடிட்டியால் தான் ஏற்படுகிறது என்றும் நினைக்கலாம்.

ஆனால் குமட்டல் அல்லது வாந்தியுடன் அடிவயிற்றில் வலி இருந்தால், அது மாரடைப்பை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக அதிகாலையில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது மாரடைப்பு வர போகிறது என்று தான் அர்த்தம்.

இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் என்ற விருதை பெறும் எஸ்.பி.!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயடு அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

பாடல்கள் பாடியதோடு மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும், இசையமைப்பும் செய்துள்ளார். தேன் குரலுக்கு சொந்தக்காரரான பாலசுப்பிரமணியத்திற்கு மத்திய அரசு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார்.47-வது சர்வதேச திரைப்பட விழாவுக்குன போஸ்டர் மற்றும் டிரெயிலரை வெளியிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்த விருத வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 88 நாடுகளை சேர்ந்த 1032 திரைப்படங்களில் 192 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு விருது அறிவித்துள்ளது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு விருது அறிவித்துள்ளதை பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். எனக்கு இந்த தகுதி இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது.

ஆனால், எனக்கு இந்த தகுதி இருக்கிறது என்பதற்கு அவர்கள் நினைத்ததற்கு காரணம் இந்த சினிமா உலகம்தான்.

இந்த சினிமாவில் நிறைய பேரின் கூட்டு முயற்சியால் பலபேருக்கு புகழ் கிடைக்கிறது. அந்த மாதிரி புகழ் கிடைத்ததில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சி பிறக்கிறது என்றார்.

வடகொரிய அதிபர் மனைவி மாயம்!

வடகொரிய அதிபர் மனைவி 7 மாதங்களாக மாயமானார்.

வடகொரிய அதிபராக கிம் ஜாங்-யங் இருந்து வருகிறார். 28 வயதான இவர் சர்வாதிகாரி ஆக திகழ்கிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரீ கோல்-ஜீ என்ற பெண்ணை தனது மனைவி என அறிவித்தார்.

அவ்வப்போது அவர் வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இறுதியாக கடந்த மார்ச் 28-ந் தேதி தலைநகர் பியாங்யாங்கில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் தோன்றினார்.

அதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக அவர் வெளியில் வரவில்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் வடகொரியா மற்றும் தென் கொரியா பகுதிகளில் பல விதமான யூகங்களுடன் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவர் கர்ப்பமாக இருக்கலாம். அதனால் வெளியே வராமல் ஓய்வு எடுத்து வரலாம் என்று ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். அதிகார போட்டி காரணமாக கிம் ஜாங்-யங் தனது இளைய தங்கையை சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேற்றினார். அவருடன் அவரது மனைவி ரி கோல்-ஜிவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

90 வயதிலும் அசத்தலான குதிரை சவாரி! ராணி எலிசபெத்…

தன்னுடயை 90 வயதிலும் உற்சாகமாக குதிரை சவாரி செய்வதை பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத் வழக்கமாக கொண்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய நான்கு வயதிலிருந்தே குதிரை சவாரி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பழக்கம் இன்று அவரின் 90 வயதிலும் தொய்வில்லாமல் தொடர்கிறது.

இங்கிலாந்தில் உள்ள Datchet என்னும் இடத்தில் தான் ஒரு குதிரையிலும், குதிரைகளை பராமரிக்கும் மேலாண்மை அதிகாரி Terry Pendry இன்னொரு குதிரையிலும் சாவகாசமாக நேற்று பயணம் செய்தார்கள்.

ராணி எலிசபெத்துக்கு குதிரை சவாரி செய்யும் போது தலை கவசம் அணியும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்ததில்லை.

முன்பு அதிக நேரம் குதிரை சவாரி செய்வதற்காக தன் நேரத்தை செலவிட்டு வந்த எலிசபெத் சில வருடங்களுக்கு முன்னர் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் இப்போதெல்லாம் குறைந்த நேரத்தையே இதற்கு செலவிடுகிறார்.

இந்த வயதிலும் குதிரை சவாரி செய்வதை பற்றி ராணி இரண்டாம் எலிசெபெத் கூறுகையில், நான் குதிரை சவாரி செய்யும் பழக்கத்தை என்றும் விட்டதில்லை.

ஆனாலும் இப்போதெல்லாம் வானிலை நன்றாக இருக்கும் போது மட்டுமே இதை செய்கிறேன்.

மோசமான குளிர் வானிலையில் குதிரை சவாரி மேற்கொண்டால் ஜலதோஷம், சளி பிரச்சனைகள் எனக்கு ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கௌதமி பிரிவிற்கு இவர்தான் காரணமா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசனும் கௌதமியும் திருமணம் செய்யாமல் கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே வாணிகணபதி, சரிகா-வை விவாகரத்து செய்த நிலையில், கௌதமியுடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

தற்போது கௌதமி கமலுடனான உறவு பிரேக் ஆனதாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் சபாஷ் நாயுடு படத்திலிருந்து சில கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது இப்பிரச்னைக்கு ஸ்ருதி தான் காரணமோ என கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

ஆனால் கமலின் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் கௌதமி தன் மகளின் வாழ்க்கைக்காக இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அவரே தெரிவித்துள்ளார்.