மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்த கணவன்… உயிரை எடுத்தான் கள்ளக் காதலன்…! செக்ஸ் மோகம்..!

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை திருபுவனம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜென்ட். முருகேசன் தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். என்ன கேட்டாலும் கடன் வாங்கியாவது அதை வாங்கிக் கொடுத்து விடுவார்.

மனைவி பிறந்தநாள் வரும்போதெல்லாம் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மொட்டை போட்டுக் கொள்வார்..! தினமும் எவ்வளவு நேரம் ஆனாலும் மனைவிக்கு பிடித்த பரோட்டா தலைக்கறி வாங்கி வந்து கொடுப்பார்.ஆனால் மனைவிக்கு செக்ஸ் மோகம் அதிகம்.

இந்த நிலையில் காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது.

பொலிசார் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இருவருக்கும் காதல் அரும்பியது..!அடிகடி காட்டுப் பகுதிக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர்.

இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இரத்தத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்!

ரத்தமானது சுத்தமாக இருந்தால் தான் மற்ற உடல் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பெற்று உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கற்றாழை, அன்னாசிப் பழம், எலுமிச்சை மற்றும் புதினா போன்ற பொருட்களைக் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டால், நமது உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் சுத்தமாகவும் வைக்கிறது.

தேவையான பொருட்கள்

  • அன்னாசி பழச்சாறு – 1 டம்ளர்
  • கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை – 1
  • புதினா – சிறிதளவு
  • தண்ணீர் – 1/2 கப்
செய்முறை

முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் அன்னாசிப் பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

 

ஜூஸின் நன்மைகள்
  • கற்றாழை அல்கலைன் தன்மை கொண்டதால், இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்து, செரிமான மண்டலத்தை சீராக்கி, குடலியக்கப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்து, சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.
  • கற்றாழை அன்னாசி பழம் இந்த ஜூஸில் கலந்து இருப்பதால், நமது உடம்பின் உட்காயங்களைக் குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

ஓய்வு பெறுகிறார் டோனி?

கடந்த 2014ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தப் போவதாக கூறி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஒய்வு பெற்றார்.

சமீபத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.

அடுத்ததாக அடுத்த ஆண்டு யூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் மினி உலககோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைக்கு டோனியே அணித்தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மினி உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணித்தலைவர் டோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என இவரது நெருங்கிய நண்பர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ம் ஆண்டுடன் டோனிக்கு 38 வயதாகிறது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட வயதைவிட உடற்தகுதி தான் அவசியம்.

எனவே அதற்கேற்ற உடல்தகுதியோடு தான் டோனி இருக்கிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடலுக்கு அயோடின் அவசரமாக தேவைப்படுவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

தைராய்டு சுரப்பியின் சாதாரண செயல்பாட்டிற்கு அயோடின் மிகவும் முக்கியமானது. அத்தகைய அயோடின் குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டால், அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சரி, அயோடின் குறைபாடு இருப்பதை எப்படி கண்டறிவது என்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருவருக்கு அயோடின் குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் போதிய அளவில் அயோடின் இல்லாவிட்டால், அதன் காரணமாக குடலியக்கம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்.

திடீர் உடல் பருமன்

உடலில் அயோடின் குறைபாடு இருக்கும் போது, மெட்டபாலிசம் பலவீனமாகி, உடலின் ஆற்றல் குறைந்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல் குறைந்து, உடல் பருமன் அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வு

அயோடின் உடலில் குறைவாக இருந்தால், அதனால் இரத்த கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

வறட்சியான சருமம் மற்றும் முக வீக்கம்

முகம் வீக்கத்துடனும் வறட்சியுடனும் இருந்து, தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அது அயோடின் குறைபாட்டிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மிகுதியான குளிர்ச்சி

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பலவீனமாக இருக்கும் போது, ஆற்றல் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக மற்றவர்கள் சௌகரியமாக உணரும் போது, மிகுந்து குளிர்ச்சியை உணர்ந்தால், அது அயோடின் குறைபாட்டை உணர்த்தும்.

மன இறுக்கம்

அயோடின் குறைபாடு மன இறுக்கம் மற்றும் இதரை மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் நரம்பியல் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது.

முறையற்ற மாதவிடாய் சுழற்சி

தைராய்டு ஹார்மோன் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும்.

சோர்வு

அயோடின் குறைவாக இருந்தால், அதனால் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக உடலின் ஆற்றல் அளவும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சோர்வை உணரக்கூடும்.

கழுத்து வீக்கம்

அயோடின் குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி வீங்கி, கழுத்துப் பகுதியை வீங்கச் செய்யும்.

பேஸ்புக் பாவனையாளர்களே இதை உடனடியாக செய்யுங்கள்!

தற்போது வளர்ச்சியடைந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகில் தற்போது நிறைய திருட்டு களவுகள் இடம் பெற்று வருகின்றது என்றே கூறலாம்.

இதை தொடர்ந்து இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம்.

ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இணையம் மூலம் பணம் திருடு போகாமல் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சைபர் கிரைம் பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பேஸ்புக் பக்கத்தில், உங்களது பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம். உங்களது செல்போன் எண், பிறந்த திகதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக் மூலம் பெயர், செல்போன் எண், பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகளை பெறும் இணைய திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு உங்களது பான் அட்டை எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன்மூலம், பான் அட்டை தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் அட்டையையும் பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி முதல் தகவல் அறிக்கை பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதனைக் கொண்டும், பான் அட்டை ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

அதனையடுத்து, உங்களது இணைய வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்களாம்.

அதேபோல், இந்த இணையம் வழி திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி விடுகின்றனர்.

அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வ சாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனராம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் இணைய கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாததும் இணையம் வழி திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.

இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த இணையம் வழியான திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தானாம்.

அரங்கத்தை அதிரச்செய்த கல்லூரி மாணவிகளின் நடனத்தை பாருங்கள் !

மீண்டும் அதிகரிக்கப்பட்ட சிகரட் விலைகள்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 5 ரூபா முதல் 10 ரூபா வரை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 5 ரூபாவினாலும் 42 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட சிகரட் வகைகள் 10 ரூபாவினாலும் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அண்மையில் வரி அதிகரிப்பால் 7 ரூபாவினால் சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் அமுலுக்கு வந்த 15 வீத வற் வரி அதிகரிப்பால் அதன் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்று முதல் வற் (வரி) அமுல்!

Render of a man with a magnifying glass looking to the text VAT

அதிகரிக்கப்பட்ட 15 வீத வற் வரி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொருட்கள் சேவை மீது இதுவரை அறவிடப்பட்ட 11 வீத பெறுமதி சேர் வரி (வற் ) அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் படி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

அதற்கமைய இந்த வரி அதிகரிப்பு இன்று முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளது.

இதனால் பல்வேறு பொருட்கள் , சேவை விலைகள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழர்களை அழிக்க இனவாதத்தை கிளப்ப முயலும் மகிந்த -ஆதாரம் பிடிபட்டது

ஆட்சிக்கு எதிரான அல்லது இனவாதத்தை தூண்டிவிடும் செய்திகள் அதி வேகமாக தென்னிலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கான செயற்பாடுகள் அன்றாடம் இடம் பெற்றுகொண்டே இருக்கின்றது.

ஆவா குழு என்பது விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது பின்னர் புதிதாக பிரபாகரன் படை என ஒன்று உருவாக்கப்பட்டது இவை அனைத்துமே நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயலும் சதியாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையில் அதனைத் தொடர்ந்து, மலேசியாவில் சிங்கள இளைஞர்கள் மீது வாள்வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி இரத்த வெள்ளத்தில் இளைஞர்கள் கிடக்கும் புகைப்படங்கள் சிலவற்றினையும் மஹிந்த ஆரதவாளர்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த செயல் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களை தூண்டிவிடும் செயலாகவே காணப்படுகின்றது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை எதுவும் தெரியாத நிலையில் பொய்யான தகவல்களை பரப்பும் போது அது இனவாதத்தினை உண்டுபண்ணும் செயலாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பொய்களை பரப்பி நாட்டில் குழப்பத்தில் ஏற்படுத்த முயலும் செயலில் மஹிந்த தரப்பின் ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பதிவினையும் மஹிந்த ஆதரவான ஒருவரே பரப்பிவருகின்றார்.

உண்மைகள் அற்ற அதே நேரம் உண்மைத்தன்மை அறியப்படாத போது சிங்களவர்கள் மீது தாக்குதல் என்ற கருத்து கூறப்படும் போது அது எந்தவகையிலும் வரவேற்கத்தக்கதல்ல. அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

ஏற்கனவே மலேசியாவில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் இவ்வாறானதொரு தகவலை பரப்புவதன் மூலம் நாட்டில் இனவாதம் தூண்டப்படுவதோடு தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்று திரளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இனவாதக் கருத்துகளை பரப்புகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆரம்பத்திலேயே இவை தடுக்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் தமிழர்கள் எதிராக திசைதிரும்பிவிடுவதோடு, கலவரம் ஏற்படும் அபாயமும் உண்டு எனவும் தென்னிலங்கை அவதானிகள் கூறிவருகின்றனர்.

நல்லிணக்க நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் இலங்கையில் பாரியளவு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகின்றது.

கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வது நல்லதா?

மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள்.

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படும். இதற்கு விடை இதோ….

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் போது அதை எதிர்கொள்ளவும் உதவும். பிரசவம் வரை மன அழுத்தம் இல்லாமலிருப்பதற்கு யோகா பயன்படும்.

மேலும் சுகப்பிரசவம் ஏற்பட உதவும். கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும்.

இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

ரெமோ படத்தின் 25வது நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இன்னொரு லெவலுக்கு கொண்டு சென்ற படம் ரெமோ. பெண் வேடத்தில் இவர் நடித்திருந்ததே ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதால் அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள், கருனை இல்லங்களில் தீபாவளியையும், ரெமோ பட 25வது நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளனர்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க எளிமையான வீட்டு வைத்தியம்!

பலரும் எதிர்கொள்ளும் சங்கோஜமான நிலை இது. சரியாக பல் துலக்கினாலும் கூட சிலருக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகாது.

அதிலும் பற்களின் உட்புறம் படியும் மஞ்சள் கரையை போக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தான் நிலவுகிறது.

ஆனால், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும்.

பற்களின் மஞ்சள் கறையை போக்க உதவும் இந்த வீட்டு முறை நிவாரணி பொருளை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னவெல்லாம் வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்….

தேவையான பொருட்கள் :-

பேக்கிங் சோடா
டூத்பிரஷ்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
உப்பு
தண்ணீர்
டென்டல் பிக்
ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ்

முறை 1 :-

முதலில் 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ளவும்.பிறகு தண்ணீரில் நனைத்த டூத்பிரஷ் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்புங்கள். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

முறை 2 :-

ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஒரு நிமிடம் வாயில் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்த பிறகு குளிர்ந்து நீரில் ஒரு முறை வாய் கொப்பளியிங்கள்.

முறை 3 :-

டென்டல் பிக் பயன்படுத்தி பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் தேய்க்கவும். தேய்க்கும் போது ஈறுகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஈறுகளில் சேதம் அல்லது எரிச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

முறை 4 :-

ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.

* தக்காளி, ஸ்ட்ராபெர்ரி

தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி-ல் வைட்டமின் சி இருக்கின்றன. இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் இந்த பழங்களை தேய்த்து கொடுப்பதால் கடினமாக இருக்கும் மஞ்சள் கரை இலகுவாகும்.

* சிட்ரிக் பழங்கள்

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களின் தோல்களும் கூட பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்க உதவுகிறது.

‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை வெளியிடும் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராகியிருக்கிற விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளிவந்த படங்கள் எல்லாம் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில், வருகிற நவம்பர் 3-ந் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யவுள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டின் போது, படத்தில் முதல் 5 நிமிட காட்சிகளை திரையிட்டு காண்பிக்க உள்ளாராம். சைக்காலஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் 5 நிமிடங்கள் படத்தை பற்றிய ஒரு புரிதலை கொடுக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இதுபோல், ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளிவந்து, அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கிறார். அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கைநடுக்கம் ஏற்படுவது ஏன்?

கை நடுக்கம் என்பது ஒரு அறிகுறியே. பல நோய்களால் இப்படி ஏற்படலாம். ஐம்பது – அறுபது வயதுக்கு மேற்பட்டவரானால் முதுமையால் ஏற்படும் கை நடுக்கமாக இது இருக்கலாம். அப்படியிருந்தால், அதற்குப் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை. ஒருவேளை பிரச்சினையாக இருந்தால், மருந்து கொடுத்துச் சரிப்படுத்தலாம்.

முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம். இது மிகத் தீவிரமான நடுக்கம். அத்துடன் நடை, சிந்தனை போன்றவற்றையும் இது மெதுவாக்கிவிடும். இதற்கு நரம்பியல் நிபுணரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.

இளம் வயதில் கை நடுக்கம் ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம். கூடுதலாகப் படபடப்பு, தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதைச் சரியாக்கலாம். காப்பி, டீ போன்றவற்றை அதிகமாகக் குடித்தாலும், அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு எந்தக் காரணமும் இன்றிக் கை நடுக்கம் ஏற்படலாம் (Essential Tremor). இதையும் மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்த முடியும். அதனால் தேவையில்லாமல் பயப்பட அவசியமில்லை.

எச்சரிக்கை: இவையெல்லாம் வீட்டிலேயே கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது!

திருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தினாலும் கூட எதிர்பாராத விதமாக கருத்தரிப்பு ஏற்படுவது இயல்பு. இவ்வாறான சமயங்களில் சிலர் கருக்கலைப்பு செய்ய முயல்வதுண்டு. பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!!!

பொதுவாகவே, கருத்தரித்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என நமது முன்னோர்கள் மருத்துவ முறைகளில் கூறி சென்றுள்ளனர். அவற்றில் பலவும் கருச்சிதைவு மற்றும் குழந்தை பிறக்கும் போது கடினமான வலிகள் ஏற்படும் என்பனவாகும்….

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!

எனவே, எந்த உணவுகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் மருந்துகள்… நமக்கு தெரியாமலேயே கருச்சிதைவு ஏற்பட காரணமாக இருக்கிறது என இனிக் காணலாம்….

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய பொதுவான கேள்விகளும்… பதில்களும்…

1. மலமிளக்கிகள் கருத்தரித்த ஆரம்பக் கட்டத்தில் மலமிளக்கிகளை உட்கொண்டால் கருக்கலைப்பு ஆகிவிடும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சில சமயத்தில் நீங்க வேண்டிய கரு கூட, இது குறித்த தெளிவின்மை காரணமாக கருக்கலைப்பு ஏற்பட காரணமாகிவிடும். எனவே, ஆரம்ப காலக்கட்டத்தில் மலமிளக்கிகள் உட்கொண்டால் கருக்கலைந்துவிடும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

2. வைட்டமின் சி நீங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து இருந்தால் கருச்சிதைவு ஏற்படும். சிட்ரஸ் பழங்கள் மற்றும் உடல் சூட்டை அதிகரிக்கும் காய்கறிகள் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும்.

3. பப்பாளி இது பலரும் அறிந்த ஒன்று தான். பப்பாளி பழம், கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மை கூடாது. ஆதலால் தான் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூறுகிறார்கள்.

4.பார்ஸ்லே இதை மூலிகை முறையிலான கருக்கலைப்பு என கூறலாம். நாம் சமையலில் சேர்க்கும் இந்த உணவுப் பொருளானது கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.

5. அஸ்பிரின் ஹை-டோஸ் ஹை-டோஸ் அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் ஏதும் இல்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

6.இலவங்கப் பட்டை சமையலில் உபயோகிக்கும் இலவங்கப் பட்டையானது ஓர் மசாலா வகை உணவுப் பொருளாகும். இது மாதவிடாய் ஹார்மோன்களை தூண்டிவிட்டு கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.

7.அன்னாசிப்பழம் பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும். உடலில் இது ஏற்படுத்தும் மிகபெரிய சூட்டின் காரணமாக தான் கருச்சிதைவு ஏற்படுகிறது.

8. கோஹோஸ் (cohosh) கோஹோஸ் என்பது வட அமெரிக்காவில் பரவலாக காணப்படும் ஒருவகை மருத்துவ தாவரம். கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தி உடனே கருச்சிதைவு ஏற்பட செய்கிறது. இதனால் மிகுந்த வலி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

9. டாங் க்வை (Dong Quai) சீனா மற்றும் ஜப்பான் பகுதிகளில் பரவலாக காணப்படும் இந்த டாங் க்வை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மூலிகை கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்படவும் காரணியாக இருக்கிறது.

10. குறிப்பு இவை அனைத்தும் கருச்சிதைவு ஏற்பட காரணமானவை. சிலருக்கு இதனால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு உடல்நலமும் பாதிக்கப்படலாம். எனவே, இவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

குழந்தைப் பேறு அருளும் சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் ‘சஷ்டி விரதம்’ அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை நினைத்து வழிபட சிறந்ததாகும். இந்த ஆறு நாட்களில்தான் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோருடன் போரிட்டு, முருகப் பெருமான் தேவர்களை காத்தருளினார்.

சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்த சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோர் பல்வேறு வரங்களைப் பெற்றனர். அந்த வரம் அவர்களுக்கு ஆணவத்தையும் கொடுத்தது. அசுரர்கள் மூவரும் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அந்த 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று பொய்கையில் சேர்த்தார்.

அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருமாறின. அந்த அறுவரையும் கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். சூரபதுமனை வதம் செய்யும் காலம் நெருங்கிய வேளையில், பார்வதி தேவி, ஆறு பேரையும் ஒரே உருவாக மாற்றினார். இதனால் முருகப்பெருமானுக்கு ‘கந்தன்’ என்ற பெயர் ஏற்பட்டது. கந்தன் என்னும் சொல்லுக்கு ‘ஒன்று திரட்டப்பட்ட’ என்பது பொருளாகும். ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறியதால், முருகப்பெருமானுக்கு இப்பெயர் வந்தது.

பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கி சூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். முருகப்பெருமான் தன்னுடைய படைகளுடன், அசுரப்படைகளை எதிர்த்துப் போரிட்டார். ஆறுநாட்கள் நடந்த போரில், இறுதிநாளான சஷ்டி அன்று சூரபதுமனை வேல் கொண்டு, இரண்டு கூறுகளாக பிளந்தார் ஆறுமுகன். அந்த இரு பகுதிகளில் ஒன்றை மயிலாக மாற்றி தனது வாகனமாகவும், மறு பகுதியை சேவல் கொடியாகவும் ஆக்கிக்கொண்டார்.

இந்தக் கதை தனக்குள் ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. இறைவனை உணரவிடாமல், ஒவ்வொருவரிடமும் மாயை, கன்மம், ஆணவம் ஆகியவை ஆட்டிப் படைக்கின்றன. அவை ஒடுங்கினால்தான் இறைவனை உணர முடியும். அவையே சிங்கன், தாரகன், சூரபதுமன். இந்த மூன்றையும் நீக்கிய ஆத்மாவை, இறைவன் தன்னோடு இணைத்துக் கொள்கிறான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது.

பகைமையை வெல்வது அல்ல சஷ்டி விரதம். பகைமையை மாற்றி, ஞானம் பெறச் செய்வதே சஷ்டி விரதத்தின் சிறப்பு. இது ஞானத்திற்கான திருவிழா. சூரபதுமனை அழிப்பது ஆணவத்தை அழிப்பதாக கருதப்படுகிறது. கந்த சஷ்டி விழா, முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட சகல முருகன் ஆலயங்களிலும் நடைபெறும் முக்கிய விழாவாகும்.

விரதம் இருப்பது எப்படி?

பூஜை அறையை சுத்தம் செய்து, அறுங்கோணக் கோலம் வரைய வேண்டும். அந்த கோலத்தின் மீது குத்துவிளக்கை வைத்து, விளக்கேற்றி முருகப்பெருமானை பூஜிக்க வேண்டும். தவிர ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொள்ளலாம். இந்த விரதத்தை தங்களின் உடல் நிலைக்கு தக்கவாறு அனுஷ்டிக்கலாம்.

ஆறுநாட்களும் எந்தவித அன்ன ஆகாரம் இன்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் உணவு உண்டு, கடைசி நாளில் முழு உபவாசம் இருந்தும் விரதத்தை மேற்கொள்வார்கள். இறுதிநாள் முழுவதும் கண் விழித்து முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை மேற்கொண்டால், குடும்பத்தில் நிலவும் துன்பங்கள் விலகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். மேலும் இந்த விரதத்திற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு. ‘சஷ்டியில் இருந்தால் அகப்பை (கரு)யில் வரும்’ என்பது பழமொழி. ஆம்.. சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அவன் அருளால் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்களுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்புக் குரிய விரதமாகும்.

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.

ரத்த அழுத்தம் அதிகம் ஆனால் ரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு ரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன் காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.

பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.

மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். ரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.

அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.

உடலில் ஒரு பக்கம் பாதிப்பு அடைவதால் தான் பக்கவாதம் என சொல்கிறோம். மூளையின் இடது பக்கம் பாதிப்பு ஏற்பட்டால் வலது கை, கால் பாதிப்பு அடைவதோடு பேச முடியாத நிலையும் ஏற்படுகிறது.

பக்கவாதத்துக்கு முக்கியக் காரணம் அதிக உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ணுதல், சர்க்கரை நோய் உடலில் அதிக அளவு காணப்படுதல், அடிக்கடி கோபம் ஏற்படுதல் அதிகமாக டென்ஷன் ஆகுதல், இரவில் அதிக நேரம் தூக்கமின்மை, அதிக நாள் கொண்ட மலச்சிக்கல் மற்றும் மூளைக்குச் செல்ல கூடிய ரத்தக் குழாய்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வந்து விடுகிறது.

ஒருவருக்கு பக்கவாதம் வந்து விட்டால் அவருக்கு 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை தந்தால் அவரை விரைவில் குணப்படுத்தலாம். பக்கவாதம் வந்தவரின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதா அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என அறிந்து சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தவுடன் எந்த உணவு பொருளை தவிர்க்க வேண்டுமோ, அவற்றை தவிர்த்தல் நலம் தரும்.

பக்க வாதம் நோய் வராமல் இருப்பதற்கு முதலில் உணவுப் பழக்கத்தை சரியான முறையில் முறைப்படுத்த வேண்டும். உடலுக்கு அதிக கொழுப்பு சத்தை தரும் உணவை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதிக உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் ரத்தத்தின் அளவு சரியான முறையில் வைத்து கொள்ளவும். உடலில் ரத்தத்தை தூய்மையான நிலையில் வைத்து கொள்ள வருடம் இரு முறை மூலிகை சாறுடன் கடை சரக்கு மூன்றையும் சேர்த்து கசாயம் வைத்து குடிக்கவும்.

ஒருவருக்கு அதிக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவருக்கு சித்த வர்ம சிகிச்சை மூலமாக சரியான முறையில் ரத்த அழுத்தத்தை சரியான நிலைக்கு கொண்டு வர முடியும். அதாவது அவரது வயதுக்கு என்ன அளவு ரத்த அழுத்தம் இருக்க வேண்டுமோ அந்த அளவு முறைக்கு கொண்டு வரலாம்.

உடலில் ரத்த அளவு முறை கூடுதலாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம், குறைவாக இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம் ஆகும். இந்த இரு வகை பிரச்சினைகளுமே உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியவையாகும்.

உடலில் ரத்த அழுத்த அளவு மாறுபடுவதற்கு மனமும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது நம் மனதில் மன அழுத்தம் அதிக அளவில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மனம் பலமாக இருந்தால் தான் உடலும் பலமாக இருக்கும். மன அமைதியைத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் மன அமைதியுடன் வாழ முடிகிறதா? என்றால் இல்லையே.

ஏன் என்றால் சிலருக்கு வீட்டில் பிரச்சினை, சிலருக்கு அலுவலகத்தில் அதிகபடியான டென்ஷன், சிலருக்கு மனதில் எப்போதும் தேவையில்லாத விஷயங்களை யோசித்து மனதில் குப்பை போன்று பல்வேறு விஷயங்களை தேக்கி வைத்து இருப்பார்கள். மனதில் நல்ல விஷயங்களையும் நல்ல செய்திகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களையும் கருத்துகளையும் மட்டுமே மனதில் வைத்துக் கொண்டால் போதும். மன அமைதியுடன் வாழலாம்.

அதே போல் பிறருக்கு வாழ்க்கையில் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்ந்தாலே மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கும்.

பெரியவர்களுக்கும் உண்டா தடுப்பூசி?

பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைவரைக்கும் தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இப்போது பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே, இது எந்த அளவுக்கு உண்மை?

இது நூற்றுக்கு நூறு உண்மை.

கால் நூற்றாண்டுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவது நடைமுறையில் இருந்தது. அதற்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்கள் பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த முடிவை ஏற்றுக்கொண்ட உலகச் சுகாதார நிறுவனம் எந்தத் தடுப்பூசியை எந்த வயதில் பெரியவர்களுக்குப் போட வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளது.

நிமோனியா தடுப்பு

வயதாக ஆக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் குறைய ஆரம்பிக்கிறது. அதிலும், முதுமைப் பருவத்தில் இது மிகமிக குறைவாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றினால், உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்படலாம். முதியவர்கள் சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் தீவிர நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.

முதுமையில் பெரும்பாலோரைப் பாதிப்பது நிமோனியா. கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி எனப் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி, உயிர் இழப்புவரை கொண்டு செல்லும் நோய். இதைத் தவிர்க்க ‘பி.பி.எஸ்.வி.23 நிமோகாக்கல் தடுப்பூசியை (PPSV23 – Pneumococcal vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் இதைப் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து வருடங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

புற்றுநோய் தடுப்பு

10 வயது முடிந்த பெண் குழந்தைகள் ஹெச்.பி.வி. தடுப்பூசியைப் ( HPV vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை இது தடுக்கிறது. பத்து வயதில் போட்டுக்கொள்ளவில்லை என்றால், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். முதலில் ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு மாதம் அல்லது நான்கு மாத இடைவெளியில் மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஃபுளு வைரஸ்களுக்குத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். சின்னம்மையைத் தடுக்கவும் தடுப்பூசி (Varicella vaccine) போட வேண்டியது அவசியம். மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணை போட்டுக்கொள்வது நல்லது. இதைப் போட்டுக் கொள்பவர்களுக்கு ‘அக்கி அம்மை’ (Herpes zoster அல்லது Shingles)

வருவதும் தடுக்கப்படும்.

மஞ்சள் காமாலையைத் தடுக்கிற ‘ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி’யை மொத்தம் மூன்று தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு, முறையே ஒரு மாதம், ஆறு மாதங்கள் இடைவெளியில் மற்ற இரண்டு தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ‘ஹெப்படைடிஸ் ஏ தடுப்பூசி’யை ஆறு மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவை தவிர டைபாய்டு காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் ஆகியவற்றுக்கும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

50103 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான பிரேரணையொன்று அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றுக்கு நடப்பு வருடத்துக்காக முன்வைக்கப்பட்ட (2016) கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனத் தெரிவித்தே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வேண்டப்பட்டுள்ள குறைநிரப்பு தொகையின் அளவு, 5 ஆயிரத்து நுாற்றி மூன்று கோடி ரூபாவை விடவும் அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு இடம்பெற்று, வருடம் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் இவ்வாறு அமைச்சுக்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு கேட்டு பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமைச்சுக்களுக்கு வாகனங்கள் கொள்வனவு மற்றுமுண்டான தேவைகளுக்கே இவ்வாறு மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகல் நேரம் தூங்குபவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் ஆபத்து!

பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்கு­வது நீரி­ழிவு பாதிப்பு ஏற்­படும் அபா­யத்தை 45 சத­வீ­தத்தால் அதி­க­ரிப்­ப­தாக ஜப்­பா­னிய ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இந்த ஆய்வின் பெறு­பே­றுகள் உல­க­மெங்­கு­முள்ள 307,237 பேரை உள்­ள­டக்கி மேற்­கொள்­ளப்­பட்ட 21 ஆய்­வு­களை அடிப்­ப­டையாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பகல் பொழுதில் சுமார் 60 நிமி­டங்கள் உறக்­கத்தில் ஆழ்­ப­வர்­க­ளுக்கு அவ்­வாறு உறங்­கா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நீரி­ழிவு ஏற்­படும் அபாயம் 45 சத­வீதம் அதி­க­மா­க­வுள்­ள­தாக டோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வாளர் யமடா தொமாஹைட் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு கூறு­கி­றது.

மேற்­படி ஆய்வின் முடி­வுகள் ஜேர்­ம­னிய முனிச் நகரில் இடம்­பெற்ற ஐரோப்­பிய நீரி­ழிவு ஆய்­வுக்­கான சங்கக் கூட்­டத்தின் போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தொழில் மற்றும் சமூக வாழ்வு என்­பன கார­ண­மாக பலரும் இரவு வேளையில் போதி­ய­ளவில் உறங்க முடி­யாத நிலைக்­குள்­ளாகி பகல் பொழு­தி­லான உறக்­கத்தை நாடு­வது வழ­மை­யா­க­வுள்­ளது

இந்­நி­லையில் பகல் பொழுதில் நீண்ட நேரம் உறங்குவது உடல் நல­னுக்கு தீங்கு விளை­விக்கக் கூடி­யது என எச்­ச­ரிக்கும் ஆய்­வா­ளர்கள், ஆனால் 30 நிமிடத்திற்கும் குறைந்த நேரம் பகல் பொழுது களில் உறங்குவது உடல் நலனுக்கு நன்மை பயக்கக் கூடியது என தெரிவிக்கின்றனர்.