தீவிர சிகிச்சை பிரிவில் நயன்தாராவின் தந்தை: நடந்தது என்ன? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்

நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தந்தையின் வற்புறுத்தல் காரணமாக காதலரை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தந்தை சூரியன் கோடியாட்டு.

விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி ஒமனாவுடன் கேரளாவில் கொச்சின் பகுதியில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நயன்தாராவின் தந்தை குரியன் இன்று உடல்நிலை மோசமடைந்ததால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தீவிர சிகிச்சை பிரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கவலையில் இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருவதோடு, பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.