இந்த பையன் வைச்சு செய்யுறான் நம்மளை; தவறான வார்த்தையில் டூவிட் செய்த நடிகை கஸ்தூரி

ஐபிஎல் 4 வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 216 ரன்கள் எடுத்து சென்னை அணியை மிரட்டியது.

அணிக்கு பக்கபலமாக சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ்ர் 1 போர் என 74 ரன்களுடன் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்கள் அடித்திருந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய சென்னை ஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் போராடி 200 ரன்களை மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அணியின் வெற்றிக்கு உறுதுணையாக ராஜஸ்தான் பவுலர் திவாட்டியா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, இந்த போட்டிக்கு பல பிரபலங்கள் ட்விட்களை போட்டாலும், நடிகை கஸ்தூரி திவாட்டியாவின் பெயரை தவறான பொருள்படும்படி பெயரை பதிவிட்டு வைச்சு செய்யறான் நம்மளை என டூவிட் செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.