சொந்த மகளை ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தந்தை.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகருக்கு அருகில் இருக்கும் ஹப்பூர் பகுதியை சார்ந்தவர் 24 வயதாகும் இளம் பெண். இவர் கடந்த 2009 ம் வருடத்தில்., சுமார் 14 வயதாகும் சமயத்தில் அவரது தந்தை., அதே பகுதியை சார்ந்த ஆண் நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில்., திருமணமான சில மாதங்களில் தனது மனைவியை விட்டு அந்த நபர் பிரிந்து சென்றுள்ளார்.

இதற்கு பின்னர் தனது தந்தையின் இல்லத்திற்கு வந்து., தந்தையுடன் வசித்து வந்த நிலையில்., சில மாதங்கள் கழித்து சொந்த மகளை ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். இவரை விலைக்கு வாங்கிய நபர்., அவரை திருமணம் செய்து கொண்டு அவரை தொடர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளார். சிறுமியை அவரது நண்பர்களின் இல்லத்திற்கு வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அதனைப்போன்று அந்த பெண் அவரது நண்பர்களின் இல்லத்திற்கு வேலைக்கு சென்ற நேரத்தில்., அவரை அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவரும் சேர்த்து கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். பல வருடங்கள் தொடர்ந்து இந்த கொடுமையை அனுபவித்து., வெளியே கூற முடியாமல் தவித்து வந்த பெண்., காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் இவரின் புகாரை ஏற்க மறுத்த காவல் துறையினர்., அவரை விரட்டியடிக்கவே கடுமையான மன உளைச்சலுக்கும்., கணவன் மற்றும் அவனது நண்பர்களால் தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாக உடலளவிலும் நொந்து தற்கொலை முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர்., கணவனின் நண்பன் இல்லத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

தீக்காயத்தால் உடல் முழுவதும் வெந்த நிலையில்., இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., இது குறித்து காவல் துறையினரிடம் கடைசி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தெரிவித்த வாக்குமூலத்தில்., “நான் எனது உயிரை இழக்க விரும்புகிறேன்., என்னை போன்று இந்த உலகில் பிற பெண்களுக்கு தீங்குகள் ஏற்பட கூடாது.

திருமணம் முடிந்த சில நாட்களில் கணவர் கைவிட்டார்., இரண்டாவது கணவருக்கு என்னை எனது தந்தை ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார்., எனது இரண்டாம் கணவர் என்னை தினமும் துன்புறுத்திய நிலையில்., அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொடூர முறையிலான கூட்டு பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றினார். 20 க்கும் மேற்பட்ட அவரது நண்பர்கள் தொடர்ந்து என்னை பலாத்காரம் செய்தனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எனக்கு பலனில்லை., இப்போது நான் எடுத்த இந்த முடிவின் மூலமாக எனது உடல் முழுவதுமாக வெந்துவிட்டது., இனி என்னை யாராலும் பலாத்காரம் செய்ய இயலாது., எனக்கு நல்ல நண்பனாக இருந்த எனது தோழருக்கு மனமார்ந்த நன்றி” என்று கண்ணீருடன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்போது இந்த தகவலானது வெளிவந்து பெரும் சர்ச்சையையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் துறை உயர் அதிகாரியின் நடவடிக்கையின் பேரில்., காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த பெண் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.