“திருமணமான ஒரு மணிநேரத்தில் ஹெலிகாப்டரில் சென்ற புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்”

அமெரிக்காவில் திருமணமான ஒரு மணி நேரத்தில் புதுமணத்தம்பதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் வில் பைலர். இவருக்கும் பையில் ஆக்கர்மேன் என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒன்றரை மணி நேரத்தில் புதுமணத் தம்பதிகளான வில் மற்றும் பையில் தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்கள்.

ஹெலிகாப்டரை ஜெரி என்ற விமானி இயக்கினார். இந்நிலையில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் மலை மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த மூவரும் உயிரிழந்து விட்டனர்.

இந்த தகவலை வில், பையில் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர் எரிக் ஸ்மித் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர், விபத்தானாது இரவில் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் புதுமணத் தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஜெசிகா என்ற பெண் கூறுகையில், அவர்கள் விபத்தில் இறந்த செய்தியை கேட்டு என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிட்டது.

என் உயிர் தோழன் பையில் இல்லாமல் நான் இனி வாழவேண்டும் என சோகத்துடன் கூறியுள்ளார்.

இப்படி பலர் தங்களது இரங்கல்ளை தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் உயிரிழப்பதற்கு முன்னர் புதுமணத் தம்பதி திருமண நிகழ்வில் ஜாலியாக நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.