பேயாக மாறிய பிரபல நடிகை.!!

நடிகை ராய்லட்சுமி இந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத பிரபல நடிகையாக தற்போது மாறிவிட்டார். அந்த வகையில்., இவர் தமிழ்., தெலுங்கு., மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஜூலி 2 திரைப்படத்தின் மூலமாக இந்தி திரையுலகிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினர். தமிழில் ராகவா லாரன்ஸ்., சுந்தர்.சி ஆகியோருடன் நடித்த பேய் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இவர் பேய் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில்., எட்டுக்கதைகளை இயக்குனர்கள் இவரிடம் கூறி., அந்த திரைப்படங்களில் நடிப்பதற்க்கான கால்சீட்டுகளை வழங்குவர் என்று எதிர்பார்த்திருந்தனர்.

அப்போது இயக்குனர் வினோ வெங்கடேஷ் அவரிடம் கூறிய பேய் கதையானது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக கால்ஷீட்டுகளை வழங்கி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த திரைப்படத்திற்கு சிண்ட்ரெல்லா என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில்., அவர் இருவேடங்களில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் குழந்தைகள் விரும்பும் பகுதியும் பயமுறுத்தும் பகுதியும் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.