விரைவில் தேர்தல்! சபாநாயகர் திடீர் ராஜினாமா!

வரும் 28-ம் தேதி மிசோரம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கயிருக்கிறது. காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக மீண்டும் முக்கிய தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் பாலக் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் அளித்தார். அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா மேலும் சிலர் உடன் இருந்தனர்.

இன்று பிற்பகல் ஐசாலில் இருக்கும் பாஜக தலைமையகத்திற்கு செல்ல இருக்கும் ஹிபேய், முறைப்படி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலக் தொகுதியில் பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கும் வேட்பாளரான ஹிபேய் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.