13 வயது பெண் குழந்தை கழுத்தறுத்து கொலை!

ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேன் டிரைவர் சாமிவேல். இவரது மனைவி சின்னபொண்ணு. இவர்களுக்கு  திருமணமாகி 13 வயதில் ராஜலட்சுமி என்கிற ஒரு பெண் இருக்கிறாள். 8-ம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமியை அக்கம் பக்கத்தினருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி கிண்டல், கேலி என்ற அவளை சீண்டி விளையாடி வந்தனர்.

இந்நிலையில் சாமிவேல் வீட்டு தெருவில் வசித்து வரும் கார்த்தி என்ற 27 வயது இளைஞரும் அடிக்கடி ரரிலட்சுமியை கிண்டல் செய்துள்ளார். டிரைவர் வெலை செய்யும் கார்த்தி எப்பவுமே மது போதையில் சற்றி திரிந்துள்ளார். ராஜலட்சுமியை அடிக்கடி கார்த்தி கிண்டல் செய்யும் கார்த்தி மற்றவர்களை போல இவரும் கிண்டல் செய்கிறார் என நினைத்து சாமிவேல் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கார்த்தி ராஜலட்சுமியை  சில்மிஷத்துடன் கிண்டல் செய்திருக்கிறார். அதனால் ராஜலட்சுமி பயந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டார். ஆனால் நேற்றிரவு 8 மணி அதிக போதையுடன், சாமுவேல் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி அங்கு யாரும் இல்லாததை அறிந்துகொண்டு, கிண்டல், சில்மிஷத்தையும் தாண்டி, ராஜலட்சுமியை பலாத்காரமே செய்ய முயன்றுள்ளார். இதனை தடுக்க வலிமையில்லா ராஜலட்சுமி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியின் தாய் சின்னபொண்ணு ஓடி வந்தார். சிறுமி கத்தி, தன் அம்மாவை கூப்பிட்டு விட்டதால், கார்த்திக்கு கடுமையான ஆத்திரம் வந்து, ஓடிவந்த சின்னபொண்ணுவை பலமாக கீழே தள்ளிவிட்டார்.

இதனையடுத்து தன் பாக்கெட்டில் வைத்திருந்த பயங்கரமான ஒரு கத்தியை எடுத்து, சிறுமியின் கழுத்தை அறுத்தார். சிறுமியின் தலையை தனியாக துண்டித்து, கையில் எடுத்துக் கொண்டுரத்தம் சொட்ட சொட்ட தெருவில் நடந்து வந்துள்ளார். தெருவில் இருந்தவர்கள் இதைகண்டதும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். பின்பு தளவாய்பட்டி – சுந்தராபுரம் நடுரோட்டில் அந்த தலையை வைத்துவிட்டு, அரிவாளுடன் தன் வீட்டுக்கு  சென்றார். விபரீதத்தை அறிந்த கார்த்தியின் மனைவி, நேராக ஆத்தூர் டவுன் போலீசில் கணவனை பிடித்து ஒப்படைத்தார்.

இதனையடுத்து கார்த்திமீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாலை நடுவே இருந்த சிறுமியின் தலை, மற்றும் வீட்டில் கிடந்த உடல் இரண்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சொத்து பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது.