நாய்க்கறியால் வந்த விபரீதம்!! அம்பாறையில் களேபரம்!!

அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், மற்றும் பஸ் வண்டியிலும் வந்த பெரும்பான்மை இன காடையர்களால் அடித்து தீவைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று நள்ளிரவு  வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது .இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறையில் காசிம் ஹோட்டல் என்ற பிரபல உணவகத்தில் நாய் இறைச்சி பரிமாறியமை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு கலவரமாக மாறியதில், கலகக்காரரினால் மூன்று கடைகள் மற்றும் பள்ளிவாசல் , வாகனங்கள் என்பனவும் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாகியுள்ளன.நேற்று நள்ளிரவு வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தாக்குதலை தொடர்ந்து சம்பவ பிரதேசத்தில் பதட்ட நிலை நிலவியதனால் ,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் விரைவுபடுத்தப்படுவதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.