முடிந்தால் அரெஷ்ட் பன்னுங்கள் பார்க்கலாம்!

கோவையில் வசதியான இளைஞர்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்துள்ள நடிகை தற்போது பொலிசிடமும் தன்னுடைய விளையாட்டைக் காட்டியுள்ளார்.

ஜெர்மனியின் மென்பொருள் பணியாளராக பணிபுரியும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவர் சமீபத்தில், சுருதி என்ற நடிகை மீது சைபர் க்ரைம் பொலிசாரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்டு விசாரணையில் ஈடுபட்ட பொலிசாருக்கு அதிர்ச்சியான தகவல்கள் சிக்கியுள்ளது.

அதாவது, இது போன்று அந்த நடிகை பல இளைஞர்களை திருமணம் செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீஸார் சுருதியையும் அவரது பெற்றோரையும், சகோதரர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீஸார்க்கு சுருதி கொலை மிரட்டல் விடுத்ததால் மேலும் ஒரு வழக்கும் போடபட்டுள்ளது.