மகளின் தற்கொலைக்கு அனுமதிகேட்டு அதிகாரிகளை அதிரவைத்த தாய்!

ருமகனின் கொடுமையால் தவித்துவரும் மகளையும், மனம் நலம் பாதித்த 2 பிள்ளைகளையும் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தவரை அதிகாரிகள் அறிவுரை கூறி திருப்பியனுப்பினர்.

மகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனு கொடுத்த தாய்

ஆர்.எஸ்.மங்களத்தைச் சேர்ந்த சுபேர் அலி என்பவருக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு மனநலம் பாதிப்படைந்த 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், என் மருமகன் சுபேர் அலி 2 வது திருமணம் செய்துகொண்டார். இது குறித்து ஜமாத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து சுபேர் அலி, தனது வீட்டை என் பேரன்கள் பெயரில் எழுதிக் கொடுத்தார். இதன் பின் தினந்தோறும் குடித்துவிட்டு வரும் சுபேர் அலி, என் பேரன்கள் பெயரில் எழுதிக் கொடுத்த வீட்டைத் திரும்பத் தருமாறு கேட்டு என்னையும், என் மகள் மற்றும் மனம் நலம் பாதித்த 2 குழந்தைகளையும் கொடுமைப்படுத்துகிறார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்களம் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.