இரண்டே நிமிடத்தில் உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா?

அன்றாட வாழ்வில் நாம் பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம்.

இதனால் நம்முடைய பற்களில் மஞ்சள் போன்ற கரைகள் ஏற்படுகிறது.

நாம் சிரிப்பதை மிகவும் அழகாக காட்டுவது பளிச்சிடும் நமது வெண்மையான பற்கள் தான்.

எனவே பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையால், நமது வெண்மையான பற்களின் அழகை கெடுக்கிறது.

பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையை போக்கி, எப்போதும் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெறுவதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்.

சமையல் சோடா

ஒரு டீஸ்பூன் சமையல் சோடா எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு பற்களின் கரைகளில் தடவி இரண்டு நிமிடங்கள் கழித்து, பற்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

இதனால் உங்களின் பற்கள் கரைகள் நீக்கப்பட்டு வெண்மையாக பளிச்சிடும்.

எலுமிச்சை பழம்

குறிப்பிட்ட அளவு எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு கலந்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை பற்களில் நன்றாக தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் C மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், இந்த பழத்தின் தோலை காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் இந்த ஆரஞ்சுப் பழத்தோலின் பொடியைக் கொண்டு காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால், பளிச்சிடும் பற்களை நீங்கள் பெறலாம்.

துளசி இலை

துளசி இலைகள் சிறிதளவு, ஆரஞ்சு தோலின் தூள் ஆகியவற்றை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து, அதை மஞ்சள் கரை படிந்துள்ள பற்களில் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் விரைவில் நீங்கி பற்கள் வெண்மையாக இருக்கும்.

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும்
மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும். முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

செய்முறை #1

முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். Ads by

செய்முறை #2

பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க வேண்டும். Ads by Revcontent

செய்முறை #4

அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு

இந்த செயல்முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

அதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தான் அதிகம்
சளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நாளில் சளியின் உற்பத்தி
நம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:
* தேன் – 100 கிராம்
* தண்ணீர் – 100 மிலி
* எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் – 50 கிராம்

செய்முறை:
* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

சளியை நீக்கும் வேறொரு வழி
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.

நல்லாட்சியிலும் சித்திரவதைச் சம்பவங்கள்?

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய சித்திரவதைகள், கொடூரமான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் சட்ட மா அதிபரிடம் கோரப்பட்ட போதிலும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொட்டாதெனியவா சிறுமி கொலை தொடர்பில் மாணவர் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மதத்தின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைகளில் தாக்கியமைக்கு மேலதிகமாக பிளாஸ்டிக் குழாய்களினால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் நபர்களை சந்திக்க செல்லும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்வதாக சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 29 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தப்படாது 15 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகள் 2002ம் ஆண்டு முதல் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சித்திரவதைகளை வரையறுத்தல் ஆகியனவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கமல்- கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா?

ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்.

காதல் பூக்கள்

புதுக்காதல் பூக்கும்போதெல்லாம், பழைய காதல் உதிருவது கமல் வாழ்க்கை நெடுகிலும் காணக்கிடக்கும் சங்கதி. காதல் எப்போதுமே பொசசிவ்னெஸ் கொண்டது. அதிலும் பெண்கள் தங்களவர்களை விட்டுத்தராத குணம் அதிகம் கொண்டவர்கள். எனவேதான், புதுக்காதல் மலரும்போதெல்லாம் பழைய காதலிகள் நகர்ந்து செல்வது வழக்கம்.

லாஜிக் இருக்குதே

சரிகாவுடன் காதல் மலர்ந்ததால்தான், வாணி கணபதியை விவாகரத்து செய்தார், சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால்தான் கமலுடனான 14 வருட திருமண வாழ்க்கையை விட்டு விலகினார் சரிகா. அப்படியானால், இப்போது கவுதமியை விட்டு கமல் விலகவும் மற்றொரு காதல்தானே காரணமாக இருக்க முடியும் என்று லாஜிக் பேசுகிறார்கள் கோலிவுட் தலைகள்.

அடுத்தடுத்து சான்ஸ்

கமல் கடும் நெருக்கடிகளுக்கு நடுவே விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்தில் நடித்த, நடிகை ஒருவருடன் கிசுகிசு உலவியதை கோலிவுட் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பிறகு கமல் நடித்த இன்னொரு படத்திலும் இந்த நடிகை இடம் பிடித்தார். இப்போது மற்றொரு படத்திலும், கமலுடன் அவர் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் கமலோடு நடிக்க காரணம் இல்லாமல் இருக்குமா..? என தலையை சொறிகின்றன அந்த வட்டாரங்கள்.

மூத்த நடிகை

இதுதவிர புண்ணியத்தலம் ஒன்றின் பெயருடன் வெளியான திரைப்படத்தில் நடித்த சற்று வயது மூத்த நடிகையுடனும் கமல் கிசுகிசுக்கப்படுகிறார். இரண்டில் ஒன்று நிச்சயம் என பெட் கட்டுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். அப்படியெல்லாம் இல்லை, கமல் பாதை இனி வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தரப்பில். பொறுத்திருந்து பார்ப்போம்.

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.

ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.

இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

சிவகார்த்திகேயனின் உண்மை முகம் இதுதான்..!

முகப்பருவை ஒரே நாளில் விரட்டி அடிக்கும் இயற்கை மூலிகை இதுதான்!

வீட்டிலேயே கிடைக்கும் எளிய மூலிகைகளை கொண்டு எப்படி முகப்பருபை வராமல் தடுக்கலாம்..?

* வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.

* பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின் மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும்.

* சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும்.

* கருந்துளசி இலைகளை பருக்களின் மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும்.

* புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

* ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

* கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

அமெரிக்க தேர்தல்: ஹிலாரியை முந்தினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ–மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது. இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஏபிசி நிறுவனமும் வாஷிங்டன் போஸ்டும் இணைந்து அமெரிக்க தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியதில், ஹிலாரி கிளிண்டனை விட ஒரு புள்ளி டிரம்ப் அதிகமாக பெற்றுள்ளார். டிரம்ப் 46 சதவீதம் பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் முதல் முறையாக ஹிலாரி பின் தங்கியுள்ளார்.

ஆவா குழு விடுதலைப் புலிகளாம்? புதிய கண்டுபிடிப்பு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட்டை முன்னுதாரணமாகக் கொண்டு, யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் ஆவா குழுவை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா என்ற சிங்கள பேரினவாத இயக்கம், இராணுவப் புலனாய்வாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை ஆவா குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னால் உறுப்பினர்கள் என்று புதிய கதையை கட்டவிழ்த்து விட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர், ஆவா குழுவை அழிக்காவிட்டால், இதனைவிட ஆபத்தானவர்கள் விரைவில் வெளியில் வருவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் – ” சுயசிந்தனையற்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டினாலேயே இன்று ஆவா, கியா போன்ற புனர்வாழ்வுப் பெறாதவர்களின் குழுக்கள் வடக்கில் உருவாகி இருக்கின்றன.

எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஓரினச்சேர்க்கை பிரச்சினை காணப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவின் பிரதானியை பதவிநீக்கக் கோருகின்ற விடயத்தில் மங்கள சமரவீர நிழலாய் செயற்படுகின்றார்.

வெளிநாட்டு சக்திகளின் இலகுவான இறைதான் மங்கள சமரவீர என்பவர். மங்கள சமரவீர தாம் பழகுகின்ற பிரிவினரைப் பார்க்கும்போது நாடு சம்பந்தப்பட்ட தீர்மானங்களையும் அவ்வாறே மேற்கொள்கின்றார் என்றுதான் தெரிகிறது.

வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் மங்கள சமரவீர தலைகீழாக்கும் முயற்சியில் செயற்படுவதானல்தான் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆவா என்கிற பலவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு வெளிக்கிளம்புகின்றனர்.

ஆவா குழு அங்கு எழுகின்ற அதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வடக்கிலுள்ள பௌத்த சிலைகளை அகற்றுமாறு கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகின்ற நிலையில் பௌத்த சமூகத்தினரில் உள்ள பேராசிரியர் சரத் விஜேசூரிய உள்ளிட்ட சிலர் புலனாய்வுப் பிரிவின் பிரதானியை நீக்குமாறு கோருகின்றனர்.

இவ்வாறான வேலைகளுக்கு அமெரிக்கத் தூதரகத்திடம் இருந்து பாரியளவான பணத்தொகை சிவில் அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. எனவே பணம் பெறுகின்ற இந்த சிவில் அமைப்புக்களும், பேராசிரியர்களும் தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை. பெரஹெர திருவிழாக்களில் சாட்டை அடித்துக்கொண்டு செல்பவர்கள் முன்னாலும் அதை விடவும் திறமையானவர்கள் பின்னாலும் வருவார்கள்.

அதேபோலதான் ஆவா என்ற பெயரில் முன்னால் குழுவொன்று வந்துள்ளது. அதை விடவும் பாரிய நாசகார வேலைகளை செய்பவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதை விடுத்து, நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிலிப்பைன்ஸ் புதிய ஜனாதிபதியை முன்னுதாரணமாகக் கொண்டு மனித உரிமைகளை மறந்துவிட்டு ஆவா போன்ற குழுக்களை உடனடியாக அழித்துப் போடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

மலேசியாவில் சிங்களவர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய தமிழர்களால் பரபரப்பு

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சிலரும் சிங்களவர்கள் சிலரும் இணைந்து கடந்த ஞயிற்றுக்கிழமை தீபாவளித் தினத்தில் மது விருந்து ஒன்று நடாத்தியுள்ளனர். குறித்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு தமிழனின் ஐபோனை சிங்கள நண்பர் ஒருவர் ஒளித்து வைத்துள்ளான்.

தனது ஐபோனைக் காணவில்லை எனத் தேடிய தமிழர் சிங்கள நண்பன் ஒளித்து வைத்ததை அறிந்து அவரிடம் போனைக் கேட்டதாகத் தெரியவருகின்றது.

ஆனால் அதற்கு குறித்த சிங்கள நண்பர் மறுக்கவே அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி பெரும் வாள் வெட்டில் முடிந்துள்ளது. அங்கு நின்ற தமிழர்கள் சிங்களவர்களைத் துரத்தித் துரத்தி வாள்களால் வெட்டியதால் பல சிங்களவர்கள் படுகாயமடைந்ததாகத் தெரியவருகின்றது.

‘கமல் மகள்களுக்கும் எனக்கும் சண்டை இல்லை!’ – கௌதமி

கடந்த 13 ஆண்டுகளாக தன் மகள் சுப்புலட்சுமியுடன் கமல் வீட்டில் ஒன்றாக வசித்துவந்தகெளதமி திடீரென கமலைவிட்டு பிரிவதாக இன்று அறிவித்தார். இந்த திடீர் முடிவு குறித்து நமக்காக கெளதமி அளித்த பிரத்யேக பேட்டி.

கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக சொல்லி இருக்கிறீர்களே?

நான் பப்ளிக்கில் முகம் தெரிந்த ஒரு பெண்மணி. என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மனித வாழ்வில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அது தான் இயல்பு.அது என் வாழ்விலும் நடந்து கொண்டே வருகிறது. நான் 16 வயதிலேயே சுயமாக தனியாக சமூகத்தில் வாழ்வதற்கு என்னை தயார் செய்து கொண்டவள். இப்போது எனக்காகவும், என் மகளுக்காகவும் பிரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் பிரிகிறேன். கடந்த இரண்டு வருடமாக மன உளைச்சலில் இல்லை ஆனால் மாற்றம் பெறும் முயற்சியில் இருந்தேன்.

உங்கள் மகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க வேண்டிய சூழலில் இருப்பதாக சொல்லி இருக்கிறீர்களே?

நான் கஷ்டங்களை சகித்துக்  கொண்டு வாழ்கிறேன் என்பதற்காக என் மகளும் அப்படியே வாழவேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லையே? அவள் விருப்பப்படி தனித்தன்மையோடு வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்பது அவளது உரிமை. அதை அமைத்துக் கொடுக்க வேண்டியது அம்மாவாக என்னுடைய கடமை. நாங்கள் மட்டுமல்ல எங்கள் குடும்பத்தாரும் சில பாதிப்புகளை அனுபவித்தனர் அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராவுக்கும் உங்களுக்கும் இடையே மனவருத்தம் உண்டானதால் பிரிந்தீர்களா?

நான் எப்போதும் அவர்களுக்கு எதிராக நின்றதே இல்லை. ஆதரவாக இருந்து இருக்கிறேன். பின்புலமாக இருந்துள்ளேன். எங்களுக்கு இடையில் வேறு எந்தவித  மனஸ்தாபமும் இருந்ததே இல்லை.

மோடியை சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தது ஏன்?

நான்  பிரிவது என்பது ஏற்கெனவே எடுத்துவிட்ட முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க தேதி கேட்டு இருந்தேன்.  அதற்கும் நான் இப்போது எடுத்துள்ள பிரிவு  முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மீன் எண்ணெய் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன.

நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா பேட்டி ஆசிட், அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும் என்பதால் இதய நோயாளிகள் இதனை சாப்பிடலாம்.

இதில் உள்ள EPA எனும் நோய் எதிர்ப்பு பொருள், மன நிம்மதி அளித்து மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

கால்சியம் குறைபாட்டால் மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தால், இதனை சாப்பிடுவதன் மூலம், எலும்பு வலுவடையும், மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சருமம் நன்கு மென்மையாகவும், கூந்தலும் நன்றாக வளரும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

ஹோட்டல் திட்டம் இடைநிறுத்தம்!

சிவனொளிபாத மலையை அண்மித்த பகுகதியில் அமைக்கப்படவிருந்தாக தெரிவிக்கப்பட்ட ஹோட்டல் திட்டத்தை இடை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹோட்டல் திட்டம் அமைக்கப்படுமாகவிருந்தால் பாரிய சுற்றாடல் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அது தொடர்பாக ஆராய்ந்த சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த மலைப் பகுதியில் மறே என்ற பகுதியில் அந்த ஹோட்டலை அமைப்பது தொடர்பாக அண்மையில் ஹெலிக்கப்டரில் அந்தப் பகுதிக்கு சென்ற திட்டங்களுடன் தொடர்புடைய குழுக்கள் அங்கு நிலத்தை பார்வையிட்டனர்.

அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!

பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும். கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நீங்களும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது. இல்லற, வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லையே. எனவே, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்யாலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும்.

ஆண்களுக்கு இணையாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் அதே மன அழுத்தம், இதர உயரதிகாரிகள் தரும் குடைச்சல், தொந்தரவுகள் என பலவன இருக்கும்.

அவர்களும் அனைத்தையும் தாண்டி வேலை செய்து வருகிறார்கள் என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே தவறான கருத்து. பெண்களின் சுதந்திரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

ஒரு ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜை மெயிண்டன் செய்வது. பலமுறை சார்ஜ் செய்ய மறந்துவிட்டு குறைந்த சார்ஜுடனோ அல்லது சார்ஜையும் சேர்த்து எடுத்து கொண்டு செல்லும் நிலையோ ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும்

தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்யப்படும்போது முழுவதும் சார்ஜ் ஆன பின்னர் ஆட்டோமெட்டிக்காக மின்சாரத்தை அதில் உள்ள ஆப்சன் நிறுத்திவிடும் என்றாலும் 100% சார்ஜ் ஆனவுடன் பிளக்கை எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். ஆனால் 100% சார்ஜ் ஆகிவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அவ்வபோது பார்த்து கொண்டே இருக்க முடியுமா? இதற்குத்தான் 100% சார்ஜ் ஆனவுடன் நம்மை உஷார் படுத்த ஒருசில ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்.

புல் பேட்டரி & தெஃப்ட் அலாரம் (Full Battery & Theft Alarm)

பேட்டரி சார்ஜ் ஆகி முடிந்ததை உஷார் செய்யும் ஆப்ஸ்களில் மிக முக்கியமானது இந்த வகை ஆப். அதுமட்டுமின்றி நமது ஸ்மார்ட்போன் திருடு போகும்போது நம்மை உஷார் படுத்தி நமக்கு நன்மையை செய்யும். 16.4 எம்பி மட்டுமே உள்ளதால் இந்த ஆப்-ஐ நீங்கள் எளிதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு அதை எனேபிள் செய்துவிட்டால் போதும். உங்கள் மொபைல்போன் 100% சார்ஜ் ஆனவுடன் அலாரம் அடுத்து உங்களை உஷார் படுத்தும். அலாரம் அடிக்கும் போது ஸ்டாப் அலாரம் பட்டனை க்ளிக் செய்துவிடால் போதும். உடனே அலாரம் நின்றுவிடும்

பேட்டரி 100% அலாரம்: (Battery 100% Alarm)

இந்த பேட்டரி 100% அலாரம் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களுடைய ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகி முடிந்த பின்னர் உங்கள் மொபைல் போனில் நோட்டிபிகேஷன் காண்பிக்கும். அதில் இருந்தே சார்ஜ் புல் ஆகிவிட்டதை அறிந்து கொள்ளலாம். அதேபோல் சார்ஜ் புல் ஆனவுடன் அலெர்ட் டோன் சவுண்டும் உங்களுக்கு கேட்கும்.

இந்த ஆப்-ல் அவ்வப்போது விளம்பரம் வந்து தொல்லை படுத்துவதாக நீங்கள் எண்ணினால் ரூ.60 கட்டணம் செய்தால் போதும், உங்களுக்கு விளம்பர தொந்தரவு இருக்காது. இந்த வசதியை நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்

பேட்டரி புல் அலாரம் (Battery Full Alarm)\

பேட்டரி புல் ஆகிவிட்டதை அறிவிக்கும் இன்னொரு வகையான ஆப்தான் இந்த பேட்டரி புல் அலாரம். இதில் நான்கு பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் நோட்டிபிகேஷனை டர்ன் ஆப் செய்வது, 100% ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆனவுடன் அலர்ட் செய்வது, அலர்ட் நோட்டொபிகேஷன் அனுப்புவது மற்றும் வைப்ரேஷன் வசதியை வைத்துக்கொள்வது அல்லது நிறுத்திக்கொள்வது என்பதே ஆகும். இந்த ஆப் வெறும் 5.95 எம்பி அளவே இருப்பதால் இதை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பேட்டரி எச்டி+ (Battery HD +)

இந்த ஆப், ஐபோன், ஐபாட் ஆகியவற்றுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது. இந்த ஆப் உங்களுக்கு சார்ஜை உஷார் படுத்துவது மட்டுமின்றி நீங்கள் அதிக நேரம் இண்டர்நெட் செய்வது, ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது, கேம்ஸ் விளையாடிவிட்டு அப்படியே மறந்துபோய் வைத்துவிடுவது, புத்தகம் படித்துவிட்டு மறந்துவிடுவது, நேவிகேஷனை க்ளோஸ் பண்ணாமல் இருப்பது, வீடியோ சேட்டிங்கை க்ளோஸ் செய்யாமல் மறந்துவிடுவது ஆகியவற்றையும் உஷார் படுத்தும்

புல் சார்ஜ் அலர்ட் ஆப்: (Full Charge Alert with Cydia)

இதுவும் iOSவகை போன்களுக்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ்களில் ஒன்று. இதன் மூலம் சார்ஜ் முழுமையாகிவிட்டால் உங்களுக்கு இசை மூலம் அதை அலர்ட் செய்யும். மேலும் விதவிதமான இசை ஆப்சன்கள் இதில் இருப்பதால் எந்த வகை இசை உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்தால் அந்த இசையில் உங்களை அலர்ட் செய்யும்

சமையல் அறையில் சிரமப்படும் பெண்களே!.. இந்த ஐடியாக்கள் உங்களுக்குத்தான்…

சமையல் அறையில் பணி புரிவதுகூட பெண்களுக்கு ஒரு ரிஸ்க்கான வேலைதான். காரணம் குடும்பத்திலுள்ளவர்கள் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும். ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

அதிலும் உணவு சமைத்து பரிமாற சற்று தாமதமாகிவிட்டால் சொல்லவே தேவையில்லை. அப்படியே வீட்டை ரணகளப்படுத்திவிடுவார்கள்.

இப்படியான பிரச்சினை தவிர்ப்பதற்காக விரைவாகவும், நேர்த்தியாகவும் முட்டை போன்ற உணவுகளை இலகுவாக உடைத்துக் கொள்ள சில ஐடியாக்கள் இங்கே தரப்பட்டுள்ளன. கண்டிப்பாக இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உபயோகப்படும்.

கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும் இயற்கை மருந்து…..

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைக்கும். இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோராஜெனிக் அமிலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கெட்ட கொழுப்புக்களின் அளவை சீரான அளவில் குறைக்கும்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி சாறு – 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 கப்

வெங்காய சாறு – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 கப்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாறுகளையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதில் 3 கப் தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.

இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு படிந்திருப்பது கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

ஏனுங்க அம்மணி நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசுறோம்?… செம்ம சிரிப்பு காட்சி!…

உலக மொழிகளில் தமிழுக்கு என்றுமே ஒரு தனித்துவம் உண்டு. அதில் முக்கியமாக உயிரினங்களை உயர்திணை, அஃறிணையாக வேறுபடுத்திக் காட்டுவதுதான். அதே போன்று ஒரு சொல்லுக்கு பல கருத்துக்களை எடுக்கவும் முடியும்.

இவ்வாறு ஒரு சொல் பல பொருள்பட பேசி அவ்வப்போது பிரச்சினைகளில் மாட்டுப்பட்டவர்களும், பல்ப் வாங்கியவர்களும் நிறையப்பேர் இருப்பார்கள்.

அதே போன்றே இங்கும் ஒரு பெண் தனது பெயரை சொல்லப் போய் எப்படி பல்ப் வாங்கி மௌமாகின்றார் என்று பாருங்கள்? இது ரசிப்பதற்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று 41-வது நாளாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 10.05 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவர், மதியம் 2.15 மணிக்கு வெளியே சென்றார். மீண்டும் மாலை 4.20 மணிக்கு உள்ளே சென்ற அவர், மாலை 6.15 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார்.

இதேபோல், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோரும் காலை முதலே அவ்வப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ள செய்தனர். தற்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு வாரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நடிகை நமீதா, தமிழகத்தை சேர்ந்த இந்திய கபடி அணி வீரர் தர்மராஜ் சேரலாதன் உள்பட பலர் வந்து சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு வெளியே அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, மற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அற்புதமான மருத்துவ சிகிச்சையை அளித்து கண்காணித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது பேசுகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், மிகவும் பாராட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிசியோதெரபி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் உடற்பயிற்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சகஜநிலைக்கு வந்து அரசியல் பிரச்சினையிலும், ஆட்சி பிரச்சினைகளிலும் முழுநேரம் பங்கேற்க வருவார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்கு உடல்நலம் தேறிவருவதற்கு மக்கள் ஆண்டவனை தொழும் ஈடுபாடு, அவர்கள் செய்யும் பூஜை, அவர்கள் தரும் ஆசிர்வாதமும் தான் முக்கிய காரணம். அவர்கள் எல்லோருக்கும் அ.தி.மு.க. சார்பில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை நமீதா நிருபர்களிடம் கூறும்போது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை மாதிரி திரும்பி வருவார்கள். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். நல்ல வலிமையோடு மீண்டும் அவர் திரும்பி வந்து பொதுமக்களுக்கு நல்லது செய்வார்” என்றார்.