மலேசியாவில் சிங்களவர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய தமிழர்களால் பரபரப்பு

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் சிலரும் சிங்களவர்கள் சிலரும் இணைந்து கடந்த ஞயிற்றுக்கிழமை தீபாவளித் தினத்தில் மது விருந்து ஒன்று நடாத்தியுள்ளனர். குறித்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு தமிழனின் ஐபோனை சிங்கள நண்பர் ஒருவர் ஒளித்து வைத்துள்ளான்.

தனது ஐபோனைக் காணவில்லை எனத் தேடிய தமிழர் சிங்கள நண்பன் ஒளித்து வைத்ததை அறிந்து அவரிடம் போனைக் கேட்டதாகத் தெரியவருகின்றது.

ஆனால் அதற்கு குறித்த சிங்கள நண்பர் மறுக்கவே அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி பெரும் வாள் வெட்டில் முடிந்துள்ளது. அங்கு நின்ற தமிழர்கள் சிங்களவர்களைத் துரத்தித் துரத்தி வாள்களால் வெட்டியதால் பல சிங்களவர்கள் படுகாயமடைந்ததாகத் தெரியவருகின்றது.