பெண்கள் மார்பில் இதை வைத்தால் என்ன ஆகும் தெரியுமா?

பெண்கள் தங்கள் மார்பகத்தை பேணிக்காக்க ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் வெறும் பத்தே பத்து ரூபாய் செலவில் உங்கள் மார்பகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் சொல்லும் டிப்ஸ் இதோ

வேறு ஒன்றும் இல்லை ஒரே ஒரு முட்டைக்கோஸ் வாங்குங்கள். பின்னர் அதை ஒருசில மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின்னர் அதன் மேலுள்ள இரண்டு அடுக்கு இலைகளை எடுத்துவிட்டு பின்னர் அதில் உள்ள இலைகளை மார்பகத்தில் சிறிது நேரம் வைக்க வேண்டும்

இப்படியே தொடர்ந்து ஒருசில நாட்கள் செய்தால் போதும் மார்பகம் இளமையுடன் இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதன் காரணமாக மார்பகப்புற்று நோய் தவிர்க்கப்படும். மேலும் மார்பகத்தில் ஏற்படும் வலியும் மாயமாய் மறைந்து போகும்

ட்ரம்ப் முன்பாக உள்ள பொறுப்புகள்

முழு உலகிலும் கடந்த சில மாதங்களாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி விட்டது.

அதுதான் ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியாகும். இக்கேள்விக்கு நேற்று பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்நாட்டில் ஜனநாயக முறைப்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இப்பதில் கிடைத்துள்ளது.

120 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த இத்தேர்தல் மூலம் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கு தம்மை ஆள வேண்டிய ஜனாதிபதியை அந்நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர்.

அவர் டொனால்ட் ட்ரம்ப்.

உலக வல்லரசும், உலகின் பலம் மிக்க ஜனநாயக நாடுமான ஐக்கிய அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இத்தேர்தலில் அந்நாட்டின் 45 வது ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இவரது தெரிவை அமெரிக்காவின் தேர்தல்கள் கல்லூரி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இவரை எதிர்த்து இத்தேர்தலில் களமிறங்கிய கிலாரி கிளின்டன் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அத்தோடு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கும் உரையாற்றினார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1946ம் ஆண்டில் பிறந்த ட்ரம்ப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பட்டதாரியாவார்.

தொழில் ரீதியில் அமெரிக்காவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான ட்ரம்ப், இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ஐனநாயகக் கட்சி சார்பில் கிலாரி கிளின்டன் களமிறங்கினார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் வெளிவிவகார செயலாளராக கடமையாற்றியவருமாவார்.

உலகின் பலம் மிக்க நாடான அமெரிக்காவின் இம்முறைத் தேர்தல் களம் ஆரம்பம் முதல் பரபரப்பு மிக்கதாகவும், சர்ச்சைகள் நிறைந்ததாகவுமே காணப்பட்டது.

இவ்வாறான நிலைமை அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் எற்படவில்லை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

சர்ச்சைக்குரிய பேச்சுகள், பாலியல் புகார் என்பன காரணமாக ட்ரம்ப் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

அதேநேரம் கிலாரி கிளின்டன் ஒபாமா நிர்வாகத்தில் இராஜாங்கச் செயலாளராகக் கடமையாற்றிய போது தமது உத்தியோகபூர்வப் பணிகளுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசார காலத்தில் ட்ரம்ப் தெரிவித்த சில கருத்துகள் உலகளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதனால் அவர் பெரும் சர்ச்சைக்குரிய நபராகவும் பார்க்கப்பட்டார்.

குறிப்பாக ஐ.எஸ். ஐ. எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பில் இவர் முன்வைத்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதேநேரம், ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தோற்றம் தொடர்பில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை தோற்றுவித்தன.

ஏனைய நாடுகளில் பதவிக்கு வருவதற்காக சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டது போன்று ட்ரம்ப்பும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்னெடுப்பதாகவே பரவலாக நோக்கப்பட்டது.

இப்பேச்சுகள் அவரை ஒரு வெகுளியாக நோக்கும் நிலைமையையும் தோற்றுவித்தது.

அதேநேரம் ஆரம்பம் முதல் தேர்தல் களம் பெரும் பரபரப்பாக விளங்கிய போதிலும், அந்நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட தேர்தல் கருத்துக் கணிப்புகள் கிலாரி கிளின்டன் முன்னணியில் இருப்பதாகவும், அவருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் தேர்தலுக்கு முன்னரான சில தினங்கள் வரையும் கூறி வந்தன.

அந்தக் கணிப்புகளை தேர்தலை அண்மித்த சில தினங்கள் பொய்ப்படுத்தி நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

இதற்கு காரணங்கள் இருக்காமல் இராது.

இதற்கு கிலாரி பெண்ணாக இருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகில் பலம் மிக்க ஒரு வல்லரசு.

அதற்கு ஒரு பெண் தலைமை வழங்க முடியுமா என்ற பார்வை அமெரிக்கர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்க முடியும்.

அதேநேரம் கிலாரி இராஜாங்கச் செயலாளராகப் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அரசாங்கத்தில் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்தது.

பல நிறுவனங்கள் பாரிய பொருளாதார சரிவை எதிர்கொண்டன.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலம் முதல் அந்நாட்டு மக்கள் கிலாரியையும் அவரது கொள்கைகளையும் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இவ்வாறான காரணங்கள் ட்ரம்ப்பின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு வழிவகுத்திருக்க முடியும்.

ஏனெனில் இவர் அந்நாட்டின் தேசிய அரசியலுக்கு புதியவராவார்.

என்றாலும் அடுத்து வரும் நான்காண்டுகளில் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் அளப்பரியன.

அவற்றில் பொருளாதாரத் திட்டங்கள் பிரதானமானவை.

அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அந்நாட்டு மக்களினால் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பதவிப் பொறுப்பை 2017.01.20ல் இவர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவிருக்கின்றார்.

ஆயினும் பதவிக்கு வரும் நோக்கில் தேர்தல் பிரசார காலத்தில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இவரது வெளிநாட்டுக் கொள்கை அமையுமா என்று உலகம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு அமையுமாயின் அது உலகில் பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவிக்கும்.

ஆனால் உலகில் அமைதி சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எல்லா மக்களதும் எதிர்பார்ப்பும் வேணவாவாகவுமாக உள்ளது.

அதற்கு பக்கத் துணையாக ட்ரம்ப் இருப்பார் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரீமியர் பேட்மிண்டன் லீக்: கரோலினா அதிக தொகைக்கு ஏலம்

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் அதிக தொகையாக ரூ.61½ லட்சத்துக்கும், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ரூ. 39 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள்.

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத் தொகைக்கான 2-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி (பி.பி.எல்.) இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி ஐதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 6 அணிகளுக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 16 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களின் பெயர் ஏலப் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. ஒவ்வொரு அணியும் தலா 10 வீரர்-வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்கலாம். வீரர்களை வாங்க ஒரு அணி அதிகபட்சமாக ரூ.1.93 கோடியை செலவிடலாம்.

ஏலத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது போல் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரின் (ஸ்பெயின்) அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி ரூ.61½ லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்த படியாக தென் கொரியா வீராங்கனை சுங் ஜி ஹூன் ரூ.60 லட்சத்துக்கு விலை போனார். அவரை மும்பை ராக்கெட்ஸ் அணி வாங்கியது.

டென்மார்க் வீரர் ஜன் ஒ ஜோர்ஜென்சென் ரூ.59 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை டெல்லி ஏசர்ஸ் அணி சொந்தமாக்கியது. இந்திய வீரர் ஸ்ரீகாந்தை ரூ.51 லட்சத்துக்கும், இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை ரூ.33 லட்சத்துக்கும் அவதே (லக்னோ) வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

முதலில் ஏலம் போகாத சாய்னாவை அடுத்த ரவுண்டில் அவதே வாரியர்ஸ் வாங்கியது. முதலாவது சீசனிலும் சாய்னா இதே அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை, சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ரூ.39 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

எதிர்பார்ப்புக்கும் குறைவான தொகைக்கு ஏலம் போனது குறித்து சிந்து கருத்து தெரிவிக்கையில், ‘பட்டியலில் எனது பெயர் கடைசியில் இருந்தது. அதனால் விலை குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எது எப்படியோ மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

இந்தியன் பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெறும் சமயத்தில் சீனா லீக் மற்றும் ஜப்பானில் தேசிய பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறுவதால் அந்த இரு நாடுகளின் முன்னணி வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மலேசிய நம்பர் ஒன் வீரர் லீ சோங் வெய்யும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

உலகப் பங்குச் சந்தை பாரிய வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னேற்றம் கண்டதை அடுத்து ஆசிய பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டது.

அனைத்து பிராந்திய சந்தைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டதோடு பாதுகாப்பானதாக பார்க்கப்படும் தங்கம் மற்றும் ஜப்பான் யென் உட்பட நாணய மதிப்பும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

ஜப்பானின் நிகாய் 225, 5.4 வீதம் வீழ்ச்சி கண்டதோடு உலக அளவிலும் பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணும் நிலை இருந்தது.

குறிப்பாக வோல் ஸ்டிரீட், டோ ஜோன்ஸ் இண்டஸ்டிரியல் ஆகியவை 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்துள்ளது. அதாவது 2 சதவீதம் சரிந்துள்ளது.

500 பங்குகளைக் கொண்ட ‘ஸ்டான்டார் அன்ட் பூர்’ சுமார் 63 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.

நாஸ்டாக் 100 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் இலகு வெற்றி பெறுவார் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் நடிகைகள்!

பாம்புப் படையிடம் சிக்கிய உடும்பு: அதிர்ச்சி வீடியோ!

திருமண வீட்டில் இந்த பெண் போட்ட அசத்தில் டான்ஸ்!

மிக சிறந்த 10 தமிழ் படமும் திருட்டு கதையும்!

இதயம் பலவீனமானவர்கள் பார்க்கத் தடை!

டொனால்ட் ட்ரம்பிற்கு ஒபாமா அழைப்பு: வெள்ளை மாளிகையில் நேரடி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்ட் ட்ரம்பிற்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார அதிகாரியான Kellyanne Conway என்பவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை ஒபாமா தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு, கூட்டம் முடிந்த நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு டிரம்ப் ஒபாமாவை தொடர்புக்கொண்டு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இருவருக்கும் நடந்த உரையாடல் ஆரோக்கியமானதாகவும், சிறப்பாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்ட் டிரம்பிற்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாகவும், அலுவலகத்தில் ஒபாமா நேரடியாக டொனால்ட் ட்ரம்பிற்கு பாராட்டுக்களை தெரிவிப்பார் என Kellyanne Conway தெரிவித்துள்ளார்.

பல் கூச்சத்தை போக்க வேண்டுமா? சிறந்த பாட்டி வைத்தியம் இதோ!

சுட்டெரிக்கும் இந்த வெயிலில் கூட சிலரால் ஐஸ் கிரீம், குளிர்ச்சியான நீர் பருக முடியாது, காரணம் சென்சிட்டிவிட்டி. உங்களுக்கும் இந்த பல் கூச்சம் பிரச்சனை இருக்கிறதா?

கண்ட டூத் பேஸ்ட், மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு. சில எளிய முறைகளை பின்பற்றினாலே இந்த பல் கூச்சத்தில் இருந்து வெளிவந்துவிட முடியும். சோடா பானங்கள், காபி, ஆல்கஹால் போன்றவற்றை அதிகம் பருகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்பெஷல் டூத் பேஸ்ட் என்று கண்டதை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை பல் பொடிகளை பயன்படுத்த துவங்குங்கள். தானாக பல் கூச்சம் குறைந்துவிடும்….

டிப்ஸ் #1
அசிடிட்டி உணவுகளை தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக குளிர்ச்சியான பானங்கள், ஊறுகாய், ரெட் ஒயின் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

டிப்ஸ் #2
பற்களை அரைத்துக் கொண்டே இருக்க வேண்டாம். சிலர் அதிகமாக சாப்பிடுவது, பற்களை கடித்துக் கொண்டே இருப்பதும் கூட பற்களின் வலிமை மற்றும் எனாமல் பாதிக்க காரணியாக இருக்கின்றன.

டிப்ஸ் #3
முக்கியமாக கண்ட டூத்பேஸ்டை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை பற் பொடிகளை பயன்படுத்துங்கள் பற்கள் நல்ல ஆரோக்கியம் பெறும்.

டிப்ஸ் #4
காஃபைன், ஆல்கஹால், புகை போன்ற பற்களில் சேதம் உண்டாக்கும் பழக்கங்களை கைவிட்டு விடுங்கள்.

டிப்ஸ் #5
பல் துலக்கும் போது வேகமாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம் மென்மையாக டூத் பிரஷை பயன்படுத்துங்கள். டிப்ஸ் #6 பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வருவது போன்று இருந்தால், உடனே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

கண்ணாடி அணிபவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா?

கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா?

இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். கண் பார்வை குறைபாடு நீங்க முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும். முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

இது குணமாக:

முருங்கை விதை – 100
கிராம் மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும். பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை.

இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.

இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் …. வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அ

ந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1.மனக் கவலை தூள் படும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

7.ஒற்றைத்தலைவலி சரியாகும் எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

படுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..

தற்போதைய விஞ்ஞான உலகில் செல்போன் என்பது நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது. படுக்கும்போதும் செல்போனை பக்கத்தில் வைத்து படுப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் படுக்கையில் வெகுநேரம் படுத்துக்கொண்டே செல்போனை நோண்டுவது, தூங்கும்போது அருகில் செல்போன் வைத்திருப்பது ஆகியவை உடல்நலத்திற்கு பயங்கர தீங்கானது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் படுக்கையில் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெண்கள் செல்போனால் தங்கள்து தூக்கத்தை இழப்பதாகவும் இதன் காரணமாக பல புதுப்புது வியாதிகள் அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இரவு தண்ணி அடிச்சதால காலைல தலை வலிக்குதா? அப்ப இதை குடியுங்கள்

இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அருமருந்து இளநீர். இந்த இளநீரை தினமும் குடித்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் தானாக மறைந்துவிடும்

1. இரவு அதிகமாக குடித்துவிட்டு காலையில் தலைவலித்தால் உடனே ஒரு இளநீர் குடியுங்கள். தலைவலி தானாக மறைந்துவிடும்

2. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இளநீர் குடித்தால் குணமாகிவிடும்

3.சிறுநீர் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்றவற்றுக்கு இளநீர் நல்ல அருமருந்து

4. ஜீரண சக்தி பெருகும். எவ்வளவு கடினமான உணவு சாப்பிட்டாலும் ஒரே ஒரு இளநீர் குடித்தால் ஜீரணம் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

5. உடல் சூட்டை உடனே நீக்கும்.

வித்யா பாலியல் வல்லுறவு கொலை வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்து அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் விளக்கமறியலை நீடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. விளக்கமறியல் நீடிக்கப்படக் கூடாது என விண்ணப்பம் செய்தனர்.

சந்தேக நபர்கள் கடந்த 18 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு மன்று பிணை வழங்க வேண்டும் என்று சந்தேக நபர்கள் தர்பபு சட்டத்தரணிகள் கோரினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மணிவண்ணன், இந்த மாணவியின் மரணம் யாழ்ப்பாணத்தைக் கலவர பூமியாக்கியது. நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்;டது இவர்களைப் பிணையில் விட்டால் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பலைகள் ஏற்படும் என தெரிவித்து பிணை வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

அரச சட்டவாதி நிசாந்தன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முற்றுப்பெற்றதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்து, சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபணை தெரிவித்தார்.

முத்தரப்புக்களின் சட்டத்தரணிகளினது விண்ணப்பம் மற்றும் ஆட்சேபணைகளை செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு பாரதூரமானது என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

சந்தேக நபர்கள் 18 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது, கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்று. இருப்பினும் இது ஒரு பாரதூரமான வழக்கு. பள்ளி மாணவி குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு. எனவே, இது சம்பந்தப்பட்ட விசாரணைக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவடையவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

வழக்கொன்றில் விசாரணைகள் முடியவில்லை என தெரிவித்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் தகுந்த காரணங்களை முன்வைத்து விண்ணப்பம்; செய்தால், அந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்து கட்டளை பிறப்பிக்க வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

எனவே, இந்த வழக்கில் மிக விரைவாக வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தி, சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் செய்து விரைவாக குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு அரச சட்டவாதிக்கு மன்று பணிக்கின்றது.

சந்தேக நபர்களுடைய பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் 08.02.2017 வரை மேலும் 3 மாதங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்படுகின்றது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

பிணை மனு மீதான யாழ் மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் எதிரிக் கூண்டில் நின்ற 4 ஆவது சந்தேக நபர், ஒரு குற்றமும் செய்யாமல் தன்னைத் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உரத்த குரலில் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்ற வழக்கை அவமதிக்கும் வகையில் மன்றில் குரலை உயர்த்திப் பேசுவது சிறைத்தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கடும் தொனியில் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கின் அடுத்த தவணை தினமாகிய 08.02.2017 ஆம் திகதி சந்தேக நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாயை காப்பாற்ற உடலை விற்கும் இளம்பெண்

சீனாவின் காசோயூ நகரில் வசித்து வருபவர் சாயோ மென்கையான். இவரின் தாய் தோல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரை காப்பாற்ற இளம்பெண் இணையதளத்தில் அறிவித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் 45 வயதான எனது தாய் தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றார். அவரின் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக எங்களிடம் போதிய பணம் இல்லை. எனது வீட்டில் 5 குழந்தைகள் உள்ளனர். அதில் நான் தான் மூத்தவள் என்பதால் அனைவரையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக என்னிடம் தேவையான பணம் இல்லை. வேலைக்கு சென்றாலும் கூட என்னால் இந்த தொகையை ஈட்ட முடியாது. அதனால் என்னுடைய உடலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்-

இந்த பதிவினை பார்த்த சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர் ஒருவர் அனைத்து செலவுகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என பதில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

எமது உடலைப் பற்றி எமக்கு தெரியாத சில உண்மைகள்!!!

எமது உடலைப் பற்றி எமக்கு தெரியாத சில உண்மைகள் இருக்கின்றது. அவற்றில் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளுவோம்.

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்திகரிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லீட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லீட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

 

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

மனித உடலில் உள்ள கல்லீரலானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,

  • கண்கள் 31 நிமிடங்கள்
  • மூளை 10 நிமிடங்கள்
  • கால்கள் 4 மணி நேரம்
  • தசைகள் 5 நாட்கள்
  • இதயம் சில நிமிடங்கள்

ட்ரம்ப் வெற்றி பெற்றது நல்ல விடயம்! காரணம்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது நல்ல விடயம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

டொனல்ட் ட்ரம்ப் தேசியத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தார். உலக சமாதானத்திற்கு  அவரின் வெற்றி சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தலைமைத்துவம் ஏனைய நாடுகளின் விடயத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும்.
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை

கருணா காதலி விவகாரம் வெளியே செல்ல முடியாதாம்

மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரைருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு –திருமலை வீதியில் உள்ள முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரு பகுதியில் நடாத்தப்பட்டுவரும் விடுதியில் இருந்து முதல்வர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்து பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.