விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாகிய பாதையில் பயணிக்கும் 17 ஆயுதக்குழுக்கள்

வடக்கிலும், கிழக்கிலும் 17 ஆயுதக் குழுக்கள் செயற்பட்டுவருகின்றன, தமிழீழ விடுதலைப் போராட்டமும் இவ்வாறே உருவாகியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டார்.

இவரை பார்ப்பதற்கு வருகைத்தந்திருந்த போதே விமலவீர திஸாநாயக்க இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலும், கிழக்கிலும் 17 ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. இதைப்போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

வல்வட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் தமது போராட்டத்தை இவ்வழியாகவே ஆரம்பித்திருந்தார்.

தற்போது அதே வழியில் குறித்த 17 ஆயுதக் குழுக்களும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தினார்.