650 கோடி திருமணம் கேள்விபட்டிருப்பீர்கள்…500 ரூபாய் திருமணம் கேள்விபட்டிருக்கிறீர்களா?

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் சிரமப்படுவது மட்டுமல்லால் கோலாகலமாக நடத்தவேண்டும் என்று திட்டமிடப்பட்ட திருமணத்தையும் மிகவும் எளிய முறையில் நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில் அப்படி ஓரு திருமணம் தான் நடந்துள்ளது. குஜராத்தை சேர்ந்த தம்பதியினர் தங்கள் திருமணத்தை கோலாகலமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பணத்தட்டுப்பட்டால் 500 ரூபாயில் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்கள். திருமணத்தில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு தேநீரும், தண்ணீரும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கர்நாடாக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.