ஆண்ட்ரியாவை விடாமல் துரத்திய ரசிகர்கள்!

ஆண்ட்ரியா
புதுச்சேரியில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில் நடிகையும் பிரபல பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்தது புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை மறைந்து செல்பி எடுக்க முயன்றனர். உடனை போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்தில் ஆண்ட்ரியாவின் காரை விடாமல் துரத்தி சென்றனர். இதனால் தான் பகுதியே அல்லோகலப்பட்டது.

பதற்றம்
மேலும் விழா முடிந்து ஒரே நேரத்தில் கூட்டம் முண்டியடித்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மக்கள் ரயில்வே கடக்கும் போதும் சென்னை ரெயில் வந்தது.

அந்த சமயத்தில் மக்கள் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கி கொண்டனர். அதனால் மீண்டும் ரயில்வே கேட் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேகம் வேகமாக அங்கு இருந்து கிளம்பினார்கள். இதன் காரணம் அந்த பகுதியில் கொஞ்சம் நேரம் பதற்றம் நிலவியது.