கொழும்பில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொழும்பு – முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவ குடும்பங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுத்தரக் கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.