அரிசியை இறக்குமதி செய்வதனைத் தவிர வேறு மாற்று வழியில்லை…..

அரிசியை இறக்குமதி செயவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரிசி விலை உயர்வினை கட்டுப்படுத்துவதற்கு ஒரு லட்சம் மெற்றிக் தொன் எடையுடைய அரசியை இறக்குமதி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 140 ரூபாவாக உள்நாட்டு சந்தையில் விலை உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதி செய்தால் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும், அப்பொழுது அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையை குறைக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.