பூவே பூச்சூடவா ஹீரோயினுக்கு நள்ளிரவில் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.

பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் காதலிக்கும் விஷயத்தையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதையும் தற்போது அறிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)

காதலிப்பதாக இதுகுறித்து மதன் கூறுகையில் பொதுவாக அனைவரும் புத்தாண்டிற்கு ஏதாவது தீர்மானம் எடுப்பார்கள். அந்த வகையில் நானும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லி என்னுடைய ரசிகர்களுக்கும் ரேஷ்மாவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

அதனால் தான் கொஞ்சம் காத்திருந்து சரியாக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் எங்கள் கல்யாண செய்தியை அறிவித்தோம். ஆம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகை ரேஷ்மா கூறும்போது “ஆம் என்னுடைய கடைசி பெயரை மாற்ற போகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.