பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில், ஞாயிற்று கிழமை நிஷா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அனிதாவின் பக்கம் உண்மை இருப்பதாக மக்கள் கருதினர்.
அனிதா எதிர்பார்த்தது போலவே அன்பு கேங்கிலிருந்து இரண்டு பேர் அதிரடியாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இது எப்படிப்பட்ட மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் நிகழ்த்த போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆரம்பத்தில் அனிதாவைப் பற்றி வெளியே சாதகமில்லாத பேச்சுகள் இருந்தபோதும், மனைவிக்கு உறுதுணையாக நின்றவர் அவரது கணவர் பிரபாகரன்.
இந்நிலையில் அனிதாவின் கணவர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது “அவள் அழகில் மட்டும் அல்ல, இதயத்திலும் கம்பீரமாக இருக்கிறார்” என்று ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.
View this post on Instagram