கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கொல்லப்பட்ட சுறாக்கள்..!!

கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்க ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக தடுப்பூசியை கண்டுபிடிக்க செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில கொரோனா தடுப்பூசிகளைப் பெற சுறாக்களின் கல்லீரலில் இருந்து இயற்கையாக சுரக்கும் ஒரு எண்ணெய் தேவைப்படுகிறதாம்.

இந்த எண்ணெய் சுறா ஸ்குவாலின் என அழைக்கப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் தேவைக்கு 3000 சுறாக்கள் கொல்லப்பட வேண்டும்.

ஒரு டன் எண்ணெய்யைக் கொண்டு 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதனால், இதுபோல ஸ்குவாலின் எடுப்பதற்காக 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மேலும், இந்த எண்ணெய்யை பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதால் இதற்காக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.