சூடுபிடிக்கும் போதைப் பொருள் விவகாரம்: பிரபல நடிகை சொன்ன திடுக் தகவல்

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போதைப்பொருளை பயன்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சுஷாந்தின் காதலி ரியா, சுஷாந்துக்கு போதைப்பொருளை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில், பெரிய நடிகர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் சிறைக்கு செல்வார்கள் என்று கங்கனா ரணாவத்தும் கூறியது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இதில் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கிகவுசல் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் கன்னட பட உலகிலும் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக டி.வி. நடிகை அனிகா கைதாகி உள்ளார். இவர் போதைபொருட்களை வாங்கி நடிகர், நடிகைகளுக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா கூறுகையில், தெலுங்கு சினிமாவில் போதை பழக்கம் உள்ளது. சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை.

அரசியல் செல்வாக்கால் முன்னணி நடிகர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பியுள்ளனர், விசாரணை அதிகாரிகளையும் மாற்றியுள்ளனர் என கூறியுள்ளார்.

இவர் விஷாலுடன் ஆம்பள என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.