இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்!!

குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்க முறைதான். இது மட்டுமே காரணி என்று சொல்ல விட முடியாது. மரபணு, பரம்பரை போன்ற பல காரணங்களாளல் புற்றுநோய் வருவதற்கு காரணங்களாய் இருக்கின்றன.

பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப்படுத்தி விடலாம்.

ஆனால் நோய் முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது குணப்படுத்துவது அவ்வளவு சாத்தியம் கிடையாது.

காரணம் குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு விடும். ஆனால் இந்த பிரச்னை மிகவும் சாதாரணமானவையே. வயிற்று பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால், டாக்டரின் ஆலோசனை பெறாமல் விட்டுவிடுகிறார்கள்.

காலம் கடந்த பிறகு புற்றுநோய் கண்டறிந்தால், அந்த கட்டத்தில் மருந்து மாத்திரைகள் கொண்டு இந்நோயை கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் பெருங்குடல் புற்று நோய் நம் எலும்புகளுக்கும் பரவும். இது தான் உண்மை. மெட்டாஸ்டிக் குடல் புற்றுநோய் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த பெருங்குடல் புற்று நோய் அப்படியே வளர்ந்து முதுகுத் தண்டுவடம், இடுப்பு பகுதி, கைகள் அல்லது கால்கள் போன்ற மற்ற எலும்புகளையும் பாதிக்கும். பெருங்குடல் புற்று நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெறுவது முக்கியம்

குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

  • எலும்புகளில் அதிக வலி
  • எலும்புகள் மிகவும் பலவீனமாகும்.
  • எலும்புகள் சில நேரங்களில் உடைந்து போகும்
  • இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்.
  • முதுகுத்தண்டுவடத்தில் அதிகளவில் அழுத்தம் ஏற்படும்.

மெட்டாஸ்டிக் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்வோம்

இந்த புற்று நோய் வந்தால் எலும்புகள் தானாகவே உடைந்து போகக்கூடும். எலும்புகளில் எந்த வித அடியும் ஏற்படாமலே இந்த நிலை ஏற்படும். இப்படி எலும்புகள் உடைந்து விட்டால் அவர்களால் நடக்கவோ, எழுந்திருக்கவோ, கைகளை அசைக்கவோ முடியாது.

குடல் புற்றுநோயால் முதுகுத்தண்டுவடம் பாதிக்கும்

குடல் புற்றுநோய் முற்றினால் அது தண்டுவடத்தை பாதிக்கும். தண்டுவடத்தில் பரவி தண்டுவடத்தில் ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிக்கும் போது முதுகில் தீராத வலி ஏற்படும். அலட்சியமாக விட்டால் பக்கவாதத்தை கூட இது ஏற்படுத்தி விடும்.

எச்சரிக்கை

குடல் புற்றுநோயால் தீராத முதுகுவலி, குடைச்சல் இருந்தாலோ, நடப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ மலம் மற்றும் சிறுநீர் கழித்தல். ஒருவித குமட்டல், தாகம் பசியின்மை, கட்டுப்பாடின்றி சென்றாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.