மீன்கறியை உண்ட பின்னர் இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்!

பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடும் போது, தயிர் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.

மீனுக்கு மட்டுமில்லை எந்த வகையான அசைவ உணவாக இருப்பினும் தயிர் உண்பது தவிர்க்க வேண்டிய ஒன்று.

அப்படி எடுத்துக்கொண்டால் செரிமான கோளாறு, தோல் ஒவ்வாமை,நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு போன்ற சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படியென்றால் பிரியாணிக்கு தயிர் பச்சடி தானே காலம் காலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது அதை உண்ணும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லையே என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.

பிரியாணி என்பது தினமும் எடுத்துக்கொள்ளும் உணவல்ல, ஆதலால் நமது உடல் இந்த நிலையில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் சிதைவை சரிசெய்து விடுகிறது.

அதுமட்டுமின்றி பிரியாணிக்கு தயிர் பச்சடி உண்ணும் போது அதனுடன் வெங்காயமும் எடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தயிரின் புளிப்பு மற்றும் வெங்காயத்தின் காரம் இரண்டுமே ஈடு செய்யப்படுகிறது. தயிரை காட்டிலும் வெங்காயமே அதிகமாக இடம் பெற்றிருக்கும். இதனால் பெரிய பாதிப்பு இருப்பதில்லை.

குறிப்பாக மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ளும் போது இரண்டுமே புரோட்டின் என்பதால் தற்காலிக செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் பெரும்பாலும் மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வீட்டு பெரியவர்கள் அறிவுறுத்துவது உண்டு.

எப்போதாவது இப்படி உண்ணும் போதே அஜீரணம் ஏற்படுவதை உணரலாம். அடிக்கடி தொடர்ந்து உண்ணும் போது, மேற்கண்டவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.