தளபதி விஜய்யின் பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு கொடுத்த கமெண்ட், என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு அவர்கள், சமீபத்தில் மரகன்றினை நடும்படி தளபதி விஜய்க்கு உள்ளிட்டோருக்கு சவால் விட்டு இருந்தார்.

அவரின் அந்த ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

அதன்பின் அந்த சவாலை ஏற்று தளபதி விஜய் தனது வீட்டில் மரகன்றினை நடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நடிகர் மகேஷ் பாபு “Thanks a lot brother for Taking this Up”, “Stay Safe” என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளும் ரசிகர்களிடையே பெரிய அளவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.