நுகேகொடவில் குடியிருப்பாளர் விபரம் சேகரிக்கும் பொலிசார்!

நுகேகொட பொலிஸ் பிரிவில் குடியிருப்பவர்களின் விபரங்களை பொலிசார் திரட்டி வருகின்றனர்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமொன்றை வீடுவீடாக வழங்கும் பொலிசார், அதில் குடியிருப்பாளர் விபரங்களை பூர்த்தி செய்து, 24 மணி நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறி வருகின்றனர்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசில் அடிக்கடி சர்ச்சைக்குரிய பொலிஸ் பதிவுகள் அடிக்கடி இடம்பெற்ற போதும், கடந்த அரசின் காலத்தில் அவ்வாறு இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.