விடுமுறையை கழித்த முன்னாள் பிரதமர் இன்று நாடு திரும்புகிறார் ரணில்!

கடந்த சில தினங்களாக இந்தியாவில் விடுமுறையை கழித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) இலங்கை திரும்பவுள்ளார்.

வருட இறுதியை ஓய்வாக கழிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க தம்பதி தென்னிந்தியாவின் ஊட்டிக்கு சென்றிருந்தார்கள். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர், இன்று நாடு திரும்புகிறார்.

ஐ.தே.கவிற்குள் உட்கட்சி குழப்பம் உச்சமடைந்துள்ள நிலையில், இன்று முதல் மீளவும் பரபரப்பான சந்திப்புக்களை ஆரம்பிக்கிறார் ரணில். வரும் 2ம் திகதி ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டவும், அதற்கு முன்னதாக இன்று அல்லது 2ம் திகதி கட்சியின் பிரமுகர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்த ரணில் தீர்மானித்துள்ளார்.

கட்சித் தலைமை பதவி குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தலைமைத்துவசபை என்ற ஏற்பாட்டின் மூலம், தலைமையை தொடர்ந்து தனது பிடியில் வைத்திருக்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.