தாயின் கொடூரத்தால் வாழ்க்கையையே தொலைத்த இளம்பெண்!

உலகம் என்னதான் வேகமாக முன்னேறி வந்தாலும் ஒருவரின் பாலியல் விருப்பம் என்று வரும் போது இன்னமும் நிறைய கலாச்சாரங்களும் பழக்க வழக்கங்களும் அதற்கு தடையாகத் தான் இருந்து வருகிறது.

நிறைய மக்கள் இந்த மாதிரியான கலாச்சாரங்களை மிகவும் தீவிரமாக செய்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். இதற்கு தங்கள் உயிரையே வதைக்கும் அளவுக்கு கூட அவர்கள் இறங்கி விடுகிறார்கள்.

இங்கே ஒரு தாயார் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். தன் மகள் அழகாக இருப்பதை விரும்பாத தாய் தன்னுடைய மகளின் மார்பகத்தை பொசுக்கி உள்ளார். இது ஒரு சடங்கு என்று அங்குள்ள மக்கள் கூறினாலும் பாதிக்கப்பட்டவரின் கருத்துப்படி துஷ்பிரயோகம்’ ஆன செயல் என்று கருதப்படுகிறது. இப்படி வினோதமாக ஏன் செய்தார் என்று இப்பொழுது பார்க்கலாம்

சிமன் என்ற இந்த பெண் லண்டனில் உள்ள மலைவாழ் பகுதியில் இருந்து வந்தவர். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த பெண் தன்னுடைய அவலநிலையை பற்றி ஒரு பிபிசி டாக்குமென்டரி படத்தில் கூறியுள்ளார். இவருக்கு 13 வயதாக இருக்கும் போதே இவருடைய மார்பகத்தை தனது தாயார் பொசுக்கி விட்டாராம். டீன் ஏஜ் பருவத்தில் இப்படி அழகாக இருக்க கூடாது என்றும் அந்த பகுதி மக்களின் சடங்காக இது செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

அந்த இளம்பெண்ணை ஓரினச்சேர்க்கை செய்வதாக இதை அவர் செய்துள்ளார். தன்னை விட அவள் அழகாக இருப்பதாக நினைத்து இந்த காரியத்தை அந்த தாயார் செய்துள்ளார். எனவே அவள் மகளின் மார்பகத்தை பொசுக்கி விட எண்ணி இரும்புக் கம்பி வைத்து இந்த கொடூரமான செயலை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை மார்பகங்களை சுற்றி இறுக்கமான பெல்ட் அணியுமாறு செய்துள்ளார். அப்பொழுது தான் கவர்ச்சியாக தெரியக் கூடாது என்பதற்காக இப்படி ஈவு இரக்கமற்ற காரியத்தை அவளது தாயார் செய்துள்ளார்.

இந்த இரக்கமற்ற சடங்கு சிமனின் வாழ்வை அப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாக பாதித்து வருகிறது. அவளது மார்பகங்கள் அழகு இழந்து போனதை விட அவளது வாழ்க்கையையே இது கேள்விக்குறி ஆக்கி விட்டது. அவளது மண வாழ்க்கை பாதிப்படைந்ததோடு தன் குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத அவல நிலையை அடைந்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இப்படியும் மனதில் ஈரமற்ற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களுடைய மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் என்று உயிரை வதைக்கும் காரியத்தைக் கூட செய்ய தயங்குவதில்லை. அதிலும் இதை ஒரு தாயார் செய்தது தான் வேதனைக்குரியது. தன் மகளின் வாழ்க்கையை தன் கையாலேயே அழித்துள்ளார். இந்த உலகில் எல்லாருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை உள்ளது. உங்கள் உறவுகளைக் கருவியாகக் கொண்டு அவர்களை வதைக்காதீர்கள். கொஞ்சமாவது மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவத்தில் பாலினம் ஈர்ப்பு, பாலுறவு என்பது இயற்கையானது என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள் . இந்த மாதிரியான இரக்கமற்ற சடங்குகளை கண்டிப்பாக தடை செய்வது நல்லது.