தூக்கில் தொங்கிய மனைவி!சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு.

உத்திரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் மோகித். இவரது மனைவி அனுராதா. 28 வயது நிறைந்த இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனுராதாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ரியா என்ற 4 வயது மகளும், தியன்சச்சாஷ் என்ற ௧வயது நிறைந்த மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மோகித் மற்றும் அனுராதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதில் மனமுடைந்த அனுராதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வேலைக்கு சென்றிருந்த மோகித்திற்கு தகவல்தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மோகித் வீட்டிற்கு செல்கிறேன் என கூறி கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்வீட்டிற்கு செல்லவில்லை.

மேலும் அவருடைய இருசக்கர வாகனம் ஒரு தோட்டத்திற்கு வெளியில் நின்றுள்ளது. அதனை கண்ட சிலர் தோட்டத்தின் உள்ளே சென்று பார்த்த போது மோகித் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு குழந்தைகளை அனாதையாக தவிக்கவிட்டுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.