கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய வீட்டிலே செய்ய க்கூடிய குறிப்புகள்!

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

  • தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
  • கோதுமை தவிடு அல்லது கோதுமை மாவு உடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
  • தேன் மூன்று மேசைக்கரண்டி எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். நோய்த் தொற்று வராமல் தடுக்கும்.
  • பழுத்த பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவி ஊற விடவும்.
  • முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு அல்லது பன்னீர் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
  • உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
  • புதினா சாறு எடுத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
  • சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பாலில் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
  • தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தக்காளியை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்தவும்.இல்லையெனில் அரிப்பு ஏற்படலாம்.