கும்பகோணத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருகிற 24-ஆம் தேதி 71வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சி சங்கர திருமண மண்டபத்தில் மாவட்ட பொருளாளர் கோபிநாதன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு உரையாற்றினார், ‘மக நட்சத்திரத்தில் பிறந்த அம்மா இன்று மகா கூட்டணியான பாமக பாஜக உள்ளிட்ட வலுவான கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம்.
40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். எதிர்கட்சியான தி.மு.க, அ.ம.மு.க, உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் கூட வாங்க முடியாது. இந்த கட்சிகள் காணாமல் போய்விடும். இனி அதிமுக அருகே எதிரியே இல்லாமல் போய்விடும். வருகிற 24ம் தேதி அம்மா பிறந்தநாளை தமிழகம் முழுவதும் நகரம், ஒன்றியம், ஊராட்சிகளில் குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக – பாமக – பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.