பீதியை கிளப்பும் இந்திய வானிலை மையம்.!!

வங்க கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் நேற்று அதி தீவிர புயலாக மாறியது. ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்துள்ளதால், சூறைகாற்றுடன் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

* பெய்ட்டி புயலானது தற்போது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து வருகிறது.

* பெய்ட்டி புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ., வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.

* தற்போது புயல் சின்னமானது மசூலிப்பட்டினத்திற்கு 150 கி.மீ., தொலைவிலும், காக்கிநாடாவிற்கு 193 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 320 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

* வடக்கு திசை நோக்கி இது தொடர்ந்து நகர்ந்து இன்று பிற்பகலில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

* சாதகமற்ற சூழ்நிலை காரணமாக புயல் கரையை கடப்பதற்கு முன் வலுவிழந்து கனமழை மற்றும் சூறைகாற்றுடன் கரையை கடக்கும்.

* கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கி.மீ., வீசக்கூடும்.

* புயல் கரையை கடக்க உள்ளதால் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று இரவு வரை சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான கற்று வீசியத்துடன் கடல் சிறிய கொந்தளிப்புடனேயே காணப்பட்டது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவான வானிலை நிலவி வருகிறது.

சென்னை மக்களின் தற்போதைய மனநிலை பெய்ட்டி புயலா., அப்படின்னா என்ன? (புயலுக்கு உண்டான எந்த அறிகுறியும் சென்னையில் தற்போது இல்லை)